Category Archives: Kumari News

The ticket price of a boat ride from Kanyakumari to Vattakottai

A roundabout trip to the Vattakottai area and back to the jetty will cost one Rs 450 for air-conditioned seats and Rs 350 for regular seats. The entire boat ride would be for a distance of 6.5 nautical miles and subject to weather conditions, officials said. Each boat will make four to five trips a day.

Tourists visiting Kanyakumari can now have a 45-minute to an hour’s boat ride in the sea from the Poompuhar Shipping Corporation’s jetty other than the customary trip to Vivekananda Rock and Thiruvalluvar Statue. PWD minister E V Velu on Wednesday launched two such ferry services, Thiruvalluvar and Thamirabarani, from the jetty.

The boats would leave the jetty and sail through Chinnamuttom to the Vattakottai area from where the Vattakottai Fort on land could be spotted. The 18th-century fort was constructed by Travancore kings and remodified as a naval defense fort by Dutch captain Eustachius De Lennoy who was at the service of the kingdom.

A roundabout trip to the Vattakottai area and back to the jetty will cost one Rs 450 for air-conditioned seats and Rs 350 for regular seats. The entire boat ride would be for a distance of 6.5 nautical miles and subject to weather conditions, officials said. Each boat will make four to five trips a day.

Boat rides into the sea from Kanyakumari have been a long-pending demand of the local people. The tourism department bought these boats for Rs 8.24 crore and handed them over to Poompuhar Shipping Corporation in 2021. The number of boats at the jetty has now gone up to five with three of them catering to the trips to Vivekananda Rock and Thiruvalluvar Statue. While the Thamirabarani boat is fully air-conditioned with 75 seats, Thiruvalluvar has an air-conditioned cabin with 19 seats and 138 non-air-conditioned regular seats. Officials said that the corporation will plan further on increasing the rides and providing more amenities like an additional jetty based on the demand.

Thangaraj, he also launched the works of expanding the Vivekananda Rock jetty for 100 metres at Rs 10 crore. Work was also launched for laying a glass bridge between Thiruvalluvar Statue and Vivekananda Rock at a cost of Rs 37 crore. Kanyakumari collector P N Sridhar, Nagercoil mayor R Mahesh, Colachel MLA J G Prince, Killiyoor MLA S Rajeshkumar and officials were present at these events.

வட்டக்கோட்டை முதல் கன்னியாகுமரி வரை இரு சொகுசு படகுகள் இயக்க திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், வட்டக்கோட்டையில் இருந்து கன்னியாகுமரி சூரிய அஸ்தமன மையம் வரை இரு சொகுசு படகுகள்  இயக்கப்பட உள்ளன என, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் சிவசண்முகராஜா தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தா, குகன், பொதிகை ஆகிய 3 படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக படகு சேவை இருப்பதால், கடந்த 2019-ம் ஆண்டு குளுகுளு வசதிகளுடன் கூடிய திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு அதிநவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு படகு சேவைக்கு தயாரானது.

ஆனால், இவை பெரிய படகுகள் என்பதால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லம் மற்றும்விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பாறையில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கான வசதிகள் இல்லை. இதைத்தொடர்ந்து சில நாட்கள் மட்டும் சவாரி மேற்கொள்ளப்பட்ட நவீன படகுகள் இரண்டும் படகு தளத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு சொகுசு படகுகளை சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இயக்குவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் சிவசண்முகராஜா கூறியதாவது: புதிதாக வாங்கப்பட்ட இரு சொகுசு படகுகளையும் இயக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கன்னியாகுமரி பூம்புகார் படகு தளத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இவ்விரு படகுகளும் புறப்படும். வட்டக்கோட்டை, விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சன் செட் பாயின்ட் ஆகிய இடங்கள் வழியாக மீண்டும் படகு தளத்தை படகுகள் அடையும். சுற்றுலா பயணிகள் எங்கும் இறங்க அனுமதி இல்லை. படகில் இருந்தபடியே இவ்விடங்களைக் கண்டு களிக்கலாம்.

 

 

Kumari collector interacts with Kani tribal students at Collectorate

Students, who belong to the Kani tribal community, had a different day out when they met Kaniyakumari Collector on Monday.

Collector PN Sridhar interacted with the secondary and higher secondary students and probed them on what they would like to pursue in higher education.

“The state in its endeavour to uplift the tribal community is extending several welfare measures to ensure that higher education is accessible for them,” the Collector said.

Students on their part spoke about establishing basic facilities such as road infrastructure, electricity supply and toilets in the tribal hamlets, apart from their main interest of education.

The Collector while responding to their demands said the district administration had already developed solar electricity generators in four villages with no electricity.

குரூப்-4 : குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கையை நவம்பர் 14ம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 13 என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயல் காரணமாக மின்சாரம் சுமார் ஒருவாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆன்லைனில் இந்த பணிக்கு பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை

இதனால் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை குமரி மாவட்டத்தினர் விடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் நலனைக் கருதி குரூப்-4 தேர்விற்கு விண்ணபிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் 21ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Upgradation work of Kendra Vidyalaya School, Konam, Nagercoil In Process

kendriya-vidyalaya-konam-nagercoil

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா மத்திய அரசு பள்ளியை தரம் உயர்த்த வேண்டி மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் முழுமுயற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டு 1-ம் வகுப்பிற்கு புதிதாக இரண்டு பிரிவுகளும், அதற்கு முந்தைய ஆண்டு 11-ம் வகுப்பிற்கு புதியதாக ஒரு பிரிவிற்கும் அனுமதி பெற்றுக்கொடுத்தார்கள். இந்நிலையில் அப்பள்ளியில் முதல்வர் பதவி காலியாக இருப்பதை அறிந்து உடனடியாக அப்பணியை பூர்த்தி செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரை வலியுறுத்தியதின் காரணமாக அப்பணி நிரப்பப்பட்டது.
மேலும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை என்பதற்காக மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் பாராளுமன்ற உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நிறுவனங்களுக்கான சேவை நிதி தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத்திலிருந்து ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவது அறிந்தவுடன் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ்ஜாவடேகர் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 16 நிரந்தர ஆசிரியர்கள் நாகர்கோவில் கேந்திர வித்யாலயாவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Source: Sundar S FB

மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் குமரியில் தொடக்கம்: Overseas export of 80 tonnes per day

colachal-fish

கன்னியாகுமரி கடல் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு தினமும் 80 டன்னுக்கு மேல் இவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்வதற்காக கேரள மீன் வியாபாரிகள், குமரி மீன்பிடி துறைமுகங்களில் குவிகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டிணம், முட்டம் ஆகியவற்றை தங்குதளமாக கொண்டு விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. ஆழ்கடல் மீன்பிடித்தலில் தனித்திறன் வாய்ந்த மீனவர்கள் குமரியில் அதிகம் உள்ளனர். குறிப்பாக ஆழ்கடலுக்கு சென்று சூறை மீன் பிடிப்பது, குமரி கடல் பகுதிகளில் தற்போதும் அதிகம் நடக்கிறது.

பிற கடலோர பகுதிகளை விட, குமரி கடல் பகுதியில் பிடிபடும் மீன்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கூடுதல் சுவையுடன் இருப்பதால், இவற்றை வெளிநாட்டினர் விரும்பி வாங்குகின்றனர்.

கேரை மீன் வரத்து அதிகம்

சமீபத்தில் கணவாய், இறால் ஆகிய மீன்கள் குமரியிலிருந்து பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது குளச்சல், சின்னமுட்டம், தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் கேரை மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆழ்கடலுக்கு சென்று விட்டு கரை திரும்பும் விசைப்படகுகள் மூலம் டன் கணக்கில் இம்மீன்கள் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. குறிப்பாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இந்த மீன்கள் வரத்து அதிகம் உள்ளது.

குமரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கேரை மீன்களை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அங்கு விற்றது போக, எஞ்சிய மீன்களை அரபு நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகளுக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர்.

மருத்துவ குணம் வாய்ந்தது

இதுகுறித்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மீனவர் சேவியர் கூறும் போது, ‘‘கேரை மீனை பொறுத்தவரை ஆஸ்துமா, முதுகுவலி, இருதய கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணமளிக்கும் தன்மை வாய்ந்தது. இறைச்சி போன்ற சுவையும் இதில் நிறைந்துள்ளது.

ஒரு மீன் குறைந்த பட்சம் 25 கிலோ முதல் அதிக பட்சம் 60 கிலோ எடையுடன் உள்ளது. கிலோ ரூ.70-க்கு மேல் விற்பனையாகிறது. சராசரியாக ஒரு கேரை மீன் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் விருந்து உள்ளிட்ட ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு முக்கிய உணவாக கேரை மீன்களை பயன்படுத்துகின்றனர். அங்கு இவற்றுக்கு நல்ல மவுசு இருப்பதால், ஏற்றுமதி செய்வதற்காக கேரள வியாபாரிகள் கேரை மீன்களை போட்டிபோட்டு வாங்குகின்றனர். இதனால் இந்த சீஸனில் விசைப்படகு மீனவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது’’ என்றார்.

80 டன் ஏற்றுமதி

மீன்வள அதிகாரிகள் கூறும்போது, ‘‘குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் இருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தினமும் 80 டன் கேரை மீன்கள், கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது’’ என்றனர்.

Kanyakumari Fishing: தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்

colachel-fish

தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

தடைகாலம்

ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் மற்றும் மீன் பிடி கப்பல்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி நள்ளிரவு வரை, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல இந்த ஆண்டுக்கான தடை காலம் கடந்த 29-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் மாதா வணக்கம் திருவிழா நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.

மீன் பிடிக்க சென்றனர்

இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் தடைகாலத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சின்னமுட்டத்தில் இருந்து 250 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

காலையில் இருந்து மாலை வரை மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு புறப்பட்டனர். மாலை 6.30 மணி முதல் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு மீனவர்களின் படகுகள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து வரிசையாக படகுகள் வந்தன.

உயர் ரக மீன்கள் சிக்கின

உடனே மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை 50 கிலோ எடையுள்ள பாக்ஸ் மற்றும் குட்டைகளில் எடுத்துக்கொண்டு தலையில் சுமந்தபடி ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

கரைக்கு திரும்பிய மீனவர்களின் வலையில் உயர் ரக மீன்களான நெய் மீன், பாறை, கணவாய் மற்றும் நவரை, கோவாஞ்சி, வெளமின், பண்டாரி, பூ மீன், சாளை ஆகியவை ஏராளமாக சிக்கி இருந்தன. இவற்றில் கணவாய், நவரை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

போட்டி போட்டு ஏலம்

மீன் ஏலக்கூடத்தில் குமரி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் ஏராளமானவர்கள் மீன்களை ஏலம் எடுக்க காத்து இருந்தனர்.

மீன்கள் ஏலக்கூடத்துக்கு வந்ததும், அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 50 கிலோ எடை கொண்ட நவரை பாக்ஸ் ரூ.2 ஆயிரத்துக்கும், 10 கிலோ எடை கொண்ட பண்டாரி ஒரு மீன் ரூ.3,500-க்கு ஏலம் போனது. புள்ளி கணவாய் 10 கிலோ ரூ.5 ஆயிரத்துக்கும் போனது. பாறை மீன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது.

விலை கட்டுப்படியாகவில்லை

கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த கன்னியாகுமரி மீனவர் சிலுவை கூறியதாவது:-

45 நாள் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்றோம். மீன்கள் அதிக அளவு கிடைத்தது. ஆனால் நவரை, கணவாய் போன்ற மீன்கள் குறைவாகவே கிடைத்தன. ஆனால் விலை கட்டுப்படியாகவில்லை. நாங்கள் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதற்கு டீசல் மற்றும் மீனவர்களுக்கான கூலியே அதிகமாகிறது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு மீனவர் சிலுவை கூறினார்.

அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

சின்னமுட்டத்துக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக வந்தேன். மீன்கள் அதிகம் கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் அதன் விலையும் அதிகமாக உள்ளது. நவரை ஒரு பாக்ஸ் ரூ.1,500-க்கு ஏலம் எடுப்போம். ஆனால் இந்த முறை ரூ.2 ஆயிரத்துக்கு எடுத்தோம்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

kanyakumari : அரை நூற்றாண்டு வரலாறு அடிபட்டு போனது

சில தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே, ஆட்சி அமைக்கும் என்ற, ‘ராசி’ உண்டு. அந்த வகையில், அரை நுாற்றாண்டாக இந்த ராசி உடைய முக்கியமான தொகுதி, கன்னியாகுமரி.
கடந்த, 1971ம் ஆண்டு முதல், இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே, மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது.

3114

1971ல் நடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ராஜா பிள்ளை வெற்றி பெற்றார்; கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைந்தது.பின், தி.மு.க.,வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவங்கி, 1977ல் சட்டசபை தேர்தலை சந்தித்தார். 1977 முதல், 84 வரை, கன்னியாகுமரி தொகுதி, அ.தி.மு.க., கோட்டையாகவே இருந்தது.அதன்பின், 1989ல் நடந்த தேர்தலில், மீண்டும் இங்கு தி.மு.க., வேட்பாளராக சுப்பிரமணிய பிள்ளை வெற்றி பெற, தி.மு.க., ஆட்சி அமைத்தது. 1991 தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற, ஜெயலலிதா, முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார்.

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், 1996ல் தி.மு.க.,வின் சுரேஷ்ராஜனும், 2001ல், அ.தி.மு.க.,வின் தளவாய் சுந்தரமும், 2006ல், சுரேஷ்ராஜனும், 2011ல், கே.டி.பச்சைமாலும் வெற்றி பெற்றனர். அப்போதெல்லாம் அவர்கள் சார்ந்த கட்சிகளே ஆட்சி பீடத்தில் அமர்ந்தன.
பிரிந்த ஜாதி ஓட்டுகள்தொகுதியில் பெரும்பான்மையாக வெள்ளாளர் சமுதாயத்தினர் தான் உள்ளனர். அதனால் தான், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே, தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகள் நிறுத்தி வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2011ல் முதல் முறையாக, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கே.டி.பச்சைமால் நிறுத்தப்பட்டார்.

குளச்சல் தொகுதியைச் சேர்ந்த அவர், இங்கு வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனார். அப்போது, இந்த தொகுதியில் போட்டியிட்ட வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க., பாணியை பின்பற்றி, இம்முறை கன்னியாகுமரி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக கிறிஸ்தவ நாடாரான ஆஸ்டின் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து, வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் போட்டியிட்டார்.

இதில், அரை நுாற்றாண்டு வரலாற்றை மாற்றும் வகையில், மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்க, தொகுதியில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரமும், பா.ஜ., வேட்பாளர் மீனா தேவும் போட்டியிட்டதால், ஜாதி ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வின் நாடார் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பாகி விட்டது.

தி.மு.க., – அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம், 5,912 ஓட்டுகள் தான். ஆனால், பா.ஜ., வேட்பாளரோ, 24 ஆயிரத்து, 638 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் பெரும் பங்கு, வெள்ளாள சமுதாயத்தினரின் ஓட்டுகள் என்பதை மறுக்க முடியாது.

Voter Awareness Programme Conducted in nagercoil

Helium balloon with a message in Nagercoil

13055553_486586408205905_6416131708034373598_n

As part of Systematic Voters’ Education and Electoral Participation Programme (SVEEP), the Election Department launched an illuminated helium balloon near Anna bus stand here on Thursday.

Launching the balloon, District Election Officer and Collector Sajjansingh R. Chavan said that it would help raise awareness of ethical voting.

The balloon, with the mark ‘May 16’ to remind voters of their democratic duty, was launched to ensure 100 per cent voting.

Efforts were also on to get all those above 18 years of age enrolled as voters through students who had been identified as ‘college ambassadors.

Various programmes – distribution of pamphlets, screening of awareness documentaries and cultural programmes – were organised by the administration to motivate voters to exercise their franchise without fail, Mr. Chavan said.

The district administration had identified two more places for launching the helium balloon, officials said.

Later, Mr. Chavan administered a pledge to NSS volunteers of Hindu College and flagged off an awareness rally at Elluvilai panhayat union office.

District Revenue Officer S. Elango, Nagercoil Returning Officer and RDO S. Madhiyazhagan, Mahalir Thittam Project Director T. Sadayappa Vinayaka Murthy and others were present.