Category Archives: Colachel

ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை விரைவாக மீட்கக்கோரி ரயில் மறியல்

nagercoil-protest

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில் 10,000-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணிகளில் அரசு மெத்தனமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘ஒக்கி’ புயலால்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலின்போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்கும் பணியில்  இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,013 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று மீனவக் குடும்பங்களும் பிரதிநிதிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்துக் கூறும் அவர்கள், ”குமரி மாவட்ட மீனவர்கள் அனைவரும் ஆழ்கடலுக்குச் சென்று, அங்கேயே தங்கி மீன் படிப்பவர்கள்.குறிப்பாக தூத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்கின்றனர்.

ஒக்கி புயல் குறித்த முறையான முன்னறிவிப்பு இல்லாததால், அவர்கள் கடலுக்குள் சென்று மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பதில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது.

ஏராளமான மீனவர்கள் லட்சத்தீவுகளில், மகாராஷ்டிரத்தில் மற்றும் பல்வேறு இடங்களில் பத்திரமாக உள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் ஏன் இன்னும் ஊர் திரும்பவில்லை’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

மாயமான 1,013 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹெலிகாப்டர்கள், அதிவேக போர்க்கப்பல்களை பயன்படுத்தி, மீட்புப் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

nagercoil-protest

இரு குழுக்களாகப் பிரிந்து போராட்டம்

இந்த போராட்டத்தில் இறையுமன்துறை முதல் இரவிக்குப்பன்துறை வரையுள்ள கடலோர கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிரியார்கள் ஆண்ட்ரோ மற்றும் ஹெவின்சன் தலைமையில் மீனவ குடும்பங்கள் தமிழக கேரள எல்லைப் பகுதியான சின்னத்துறையில் இருந்து குழித்துறையை நோக்கிப் பேரணி நடத்தி வருகின்றனர்.

நீரோடியில் இருந்து வல்லவிளை வரை உள்ள சுற்றுவட்டார கிராம மீனவ மக்கள், கொல்லங்கோட்டில் இருந்து குழித்துறையை நோக்கி  சென்றனர். இரண்டு தரப்பிலும் இருந்து சுமார் 10,000 பேர் இந்தப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக குழித்துறை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி குழித்துறை ரயில் நிலையத்துக்குள் நுழைந்த மீனவ குடும்பங்கள், ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Source : Tamil Hindu

http://tamil.thehindu.com/tamilnadu/article21288253.ece

மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் குமரியில் தொடக்கம்: Overseas export of 80 tonnes per day

colachal-fish

கன்னியாகுமரி கடல் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு தினமும் 80 டன்னுக்கு மேல் இவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்வதற்காக கேரள மீன் வியாபாரிகள், குமரி மீன்பிடி துறைமுகங்களில் குவிகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டிணம், முட்டம் ஆகியவற்றை தங்குதளமாக கொண்டு விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. ஆழ்கடல் மீன்பிடித்தலில் தனித்திறன் வாய்ந்த மீனவர்கள் குமரியில் அதிகம் உள்ளனர். குறிப்பாக ஆழ்கடலுக்கு சென்று சூறை மீன் பிடிப்பது, குமரி கடல் பகுதிகளில் தற்போதும் அதிகம் நடக்கிறது.

பிற கடலோர பகுதிகளை விட, குமரி கடல் பகுதியில் பிடிபடும் மீன்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கூடுதல் சுவையுடன் இருப்பதால், இவற்றை வெளிநாட்டினர் விரும்பி வாங்குகின்றனர்.

கேரை மீன் வரத்து அதிகம்

சமீபத்தில் கணவாய், இறால் ஆகிய மீன்கள் குமரியிலிருந்து பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது குளச்சல், சின்னமுட்டம், தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் கேரை மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆழ்கடலுக்கு சென்று விட்டு கரை திரும்பும் விசைப்படகுகள் மூலம் டன் கணக்கில் இம்மீன்கள் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. குறிப்பாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இந்த மீன்கள் வரத்து அதிகம் உள்ளது.

குமரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கேரை மீன்களை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அங்கு விற்றது போக, எஞ்சிய மீன்களை அரபு நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகளுக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர்.

மருத்துவ குணம் வாய்ந்தது

இதுகுறித்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மீனவர் சேவியர் கூறும் போது, ‘‘கேரை மீனை பொறுத்தவரை ஆஸ்துமா, முதுகுவலி, இருதய கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணமளிக்கும் தன்மை வாய்ந்தது. இறைச்சி போன்ற சுவையும் இதில் நிறைந்துள்ளது.

ஒரு மீன் குறைந்த பட்சம் 25 கிலோ முதல் அதிக பட்சம் 60 கிலோ எடையுடன் உள்ளது. கிலோ ரூ.70-க்கு மேல் விற்பனையாகிறது. சராசரியாக ஒரு கேரை மீன் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் விருந்து உள்ளிட்ட ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு முக்கிய உணவாக கேரை மீன்களை பயன்படுத்துகின்றனர். அங்கு இவற்றுக்கு நல்ல மவுசு இருப்பதால், ஏற்றுமதி செய்வதற்காக கேரள வியாபாரிகள் கேரை மீன்களை போட்டிபோட்டு வாங்குகின்றனர். இதனால் இந்த சீஸனில் விசைப்படகு மீனவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது’’ என்றார்.

80 டன் ஏற்றுமதி

மீன்வள அதிகாரிகள் கூறும்போது, ‘‘குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் இருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தினமும் 80 டன் கேரை மீன்கள், கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது’’ என்றனர்.

colachel : மீனவர்கள் வலையில் 300 கிலோ எடைகொண்ட சுறா மீன்!

colachal-sura-fish

 

குளச்சலை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. அவர்கள் பிடித்து வரும் மீன்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலம் விடப்படும்.

குளச்சலில் மீனவர்கள் வலையில் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.48 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குளச்சல் வர்த்தக துறைமுகம் வந்தே தீரவோண்டும் என்று போராட்டம்

nagercoil-port

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு அரசியல் சார்பு இல்லாமல், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு நடத்திய ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி…

nagercoil-colachalport

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த அனைத்து பொதுமக்களுக்கும் (கிறிஸ்த்தவ, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல உள்ளங்ககளுக்கும்) கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..!!!
–***குமரி. ஸ்ரீ மகேஷ் FB

mr gandhi-nagercoil

The Centre would soon build a major port at Colachel in the southernmost tip of Tamil Nadu at an estimated cost of Rs 21,000 crore

குளச்சல் துறைமுகத்தை ரூ.21 ஆயிரம் கோடி செலவில் விரிவுபடுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

11986455_1055179671158902_9133821982529444229_n

தமிழக அரசு பதில்கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவிலான துறைமுகமாக அமைக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். தற்போது தமிழக அரசின் சார்பில் குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்க வேண்டும்.சாலை, ரெயில் போக்குவரத்துதுறைமுகத்துக்கு சாலை இணைப்பு மற்றும் ரெயில் வசதி ஏற்படுத்துவதற்கான ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்வதற்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆய்வுகள் முடிந்து 2 மாதங்களுக்குள் அறிக்கை கிடைக்கும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்காக 4 வழி சாலை திட்ட பணிகள் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. குளச்சல் துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பயன் அடையும்.குளச்சல் துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் 3 கட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக சுமார் ரூ.7ஆயிரம் கோடி, 2-வது கட்டமாக ரூ.6 ஆயிரம் கோடி, 3-வது கட்டமாக ரூ.7 ஆயிரத்து 500 கோடி மத்திய அரசால் நிதி ஓதுக்கீடு செய்யப்படும்.

அந்நிய செலாவணி அதிகரிக்கும்செயல்பாட்டுக்கு வரும்போது குளச்சல் துறைமுகத்தில் இருந்து பல நாடுகளுக்கும் சரக்கு ஏற்றுமதி செய்ய வழி ஏற்படும். ஆண்டுக்கு சுமார் 17 லட்சம் டன் சரக்கு இந்த துறைமுகம் மூலமாக கையாளப்படும். தென்மாவட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் உடனடியாக தேவையான 500 ஏக்கர் நிலத்தை கடலில் மண்ணை நிரப்பி ஏற்படுத்த திட்டம் உள்ளது. தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.1,500 கோடி அந்நிய செலாவணி இழப்பில் இருந்து மீட்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் குளச்சல் துறைமுகம் மூலமாக ஏற்படும். இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Colachel

Source : Dailythanthi

Colachel Port to Compete Colmbo Port

சர்வதேச அளவில், கொழும்பு துறைமுகத்திற்கு போட்டியாக, குளச்சல் துறைமுகத்தை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மாநில அரசு போக்கு காட்டி வருவதோடு, மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பழமையான இயற்கை துறைமுகமாக, குமரி மாவட்டத்தில் உள்ள, குளச்சல் துறைமுகம் உள்ளது. நீண்ட காலமாகவே, இந்தத் துறைமுகம் முக்கியத்துவம் இழந்து காணப்படுகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் உகந்ததாகவும், குமரியை, நாட்டின் முதல்நிலை மாவட்டமாக மாற்றவும், குளச்சல் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது.’அடுத்த ஆண்டு முதல், குளச்சலில் வர்த்தக துறைமுகம் செயல்படும்’ என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. ‘நிலப்பரப்பில், ஒரு சதுர அடி கூட வேண்டாம்; கடல் பகுதியிலேயே துறைமுகத்தை அமைக்க முடியும்’ என, மாநில அரசிடம் தெரிவித்துள்ளது.

MSC

குளச்சல் துறைமுகத்தின் சாத்தியக்கூறுகளை கண்டறிய, இரண்டு தனியார் நிறுவனங்கள், மார்ச்சில் ஆய்வு நடத்தின. குளச்சல் கடற்கரையில் இருந்து, 2 கி.மீ., நீளத்துக்கு பாலம் அமைத்து, நடுக்கடலில், 900 ஏக்கர் பரப்பளவில், செயற்கை நிலத்திட்டையை உருவாக்கி, சிங்கப்பூர் தொழில்நுட்பம் போன்று, கப்பல்களை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்கள், குளச்சல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்ரிக்காவுக்கும் சரக்குகளை கப்பலில் ஏற்றிச் செல்ல முடியும். இதன் மூலம் சர்வதேச அளவில் சரக்குகளைக் கையாளுவதில் முன்னணியில் உள்ள கொழும்புவை, இந்தியா முந்த அதிக வாய்ப்புள்ளது.

குளச்சலில் துறைமுகம் அமைந்தால், அப்பெருமை தமிழகத்தைச் சேரும். இதனால், கன்னியாகுமரி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களும் வளர்ச்சி பெறும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கிடையில், குமரி மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் துறைமுகம், மீன் பதனிடும் நிலையம் கட்டித்தரும்படி, தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை, அனைத்து கடலோரக் கிராமங்களிலும் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, குளச்சல் துறைமுகம் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஏற்கனவே துாத்துக்குடி, விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகம் இருக்க, மேலும் குளச்சலையும் வர்த்தக துறைமுகமாக மாற்ற வேண்டாம் என்ற கருத்தும் நிலவுகிறது. குளச்சல் வர்த்தக துறைமுகமாக மாறினால், தங்களின் நலன் பாதிக்கும் என, மீனவர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள், மீனவர்களின் கருத்தை கேட்டு, துறைமுகத்தை அமைக்க வேண்டியது அவசியம்.

இயற்கையாகவே ஆழமானது!

குளச்சல் துறைமுக சாத்தியக்கூறு குறித்து நிபுணர்கள் கூறியதாவது:ஆசியாவிலேயே, இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்தது குளச்சல் துறைமுகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டுமானால், 14 அடிக்கு ஆழப்படுத்த, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்.ஆனால், குளச்சல் துறைமுகம், இயற்கையாகவே நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது. துாத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது. ஒரு கி.மீட்டருக்குக் குறைவான துாரத்திலேயே, 15 மீட்டர் ஆழம் உள்ளது. மேலும், குளச்சல் துறைமுகம் சர்வதேச கப்பல் வழித் தடத்திற்கு மிகவும் அருகில் உள்ளதால், கப்பல்கள் எளிதாக வந்து செல்லும். இவ்வாறு நிபுணர்கள் கூறினர்

Source: Dinamalar

‘Nethili Fish’ dried and salted in Colachel by Fisherman’s

nethili-colachelகுளச்சல் (Colachel) மீனவர்களின் வலைகளில் அதிகமாக நெத்தலி மீன் கிடைத்தும், அதற்கான விலை போகாததால், கடற்கரை மணல் பரப்பில் நெத்தலி மீன்கள் உலரவைக்கப்பட்டு கருவாடாக்கப்படுகிறது.

நெத்தலி மீன்

குளச்சல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. விசைப்படகு மூலம் மீன் பிடிப்பது வருகிற 15–ந்தேதியுடன் முடைவடைய இருப்பதாகவும், அதன்பிறகு 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைக்காலமாகும்.

கடந்த சில மாதங்களாக நெத்தலி மீன் சீசன் காலமாகும். கடலில் கட்டுமரம் மற்றும் பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் நெத்தலி மீன்களை ஏராளமாக பிடித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதிகளான கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, குறும்பனை, வாணியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்தன. அவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குறைந்த விலைக்கே ஏலம் எடுத்து சென்றனர். மீனவர்களின் வலையில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்த போதிலும் அவை எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கருவாடாகிறது

இதைத்தொடர்ந்து மீனவர்களிடம் தேங்கிய நெத்தலி மீன்களை, குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவ பெண்கள் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தனர். பின்னர் அவற்றை கருவாடாக்க குளச்சல் கடற்கரை மணற்பரப்பில் உலர வைத்து உள்ளனர். கடலில் நெத்தலி மீன்கள் அதிக அளவில் கிடைத்தும் விலை போகாததால் தற்போது கருவாடாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலர வைத்துள்ள மீன்கள் கருவாடானதும் அவற்றை பெண்கள் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். அந்த வியாபாரிகள் அவற்றை வாங்கி தூத்துக்குடி, திருச்சி, கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

Source : Dinathanthi