
Nagercoil :
கன்னியாகுமரியில் (Kanyakumari) இருந்து, கேரளாவுக்கு வந்துகொண்டிருந்த காய்கறிகளுக்கு, கேரளா தடைவிதித்து விட்டது. மேலும், ஒட்டுமொத்தமாக, தமிழக காய்கறிகளுக்கு தடை விதிப்பது குறித்தும், கேரளா ஆலோசித்து வருகிறது.மத்திய அரசிடம் புகார்:இந்நிலையில், தமிழக காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்தாக உள்ளது என்றும், அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, தமிழகத்தில், காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது’ என, டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் கூறி உள்ளது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ரசாயன உரத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக, கேரள அரசு கூறி வருகிறது.இதனால், தமிழக காய்கறிகள் உற்பத்தியாகும் இடங்களில், கேரள தோட்டக்கலைத் துறையினர், கடந்த மாதம் ஆய்வு நடத்தினர்.பின், அக்கு-ழு அளித்த அறிக்கையின்படி, கேரள உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அனுபமா,தமிழக வேளாண் உற்பத்தித்துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானிக்கு கடி-தம் எழுதினார்.அதில், ‘பூச்சிக்கொல்லி மருந்துக-ளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தாத பட்சத்தில், இருமாநில மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்’ என கூறியிருந்தார்.
பாசனத்துக்காக திறக்கப்பட்ட பேச்சிப்பாறை அணைத்தண்ணீர் தோவாளை சானலுக்கு வந்து சேர்ந்தது. 216 கனஅடி திறப்பு குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணைகள் உள்ளன. இதில் முக்கடல் அணையைத்தவிர மற்ற அணைகள் அனைத்தும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டிலும், குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் முக்கடல் அணை நாகர்கோவில் நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் பாசனத்துக்காக ஜூன் மாதம் திறக்கப்பட்டு, பிப்ரவரி மாத இறுதியில் மூடப்படுவது வழக்கம். இந்தநிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. கோடை மழை தொடர்ந்து பெய்ததின் காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 40.58 அடியாக இருந்தது. முதல்நாளான நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று கூடுதலாக 16 கன அடி தண்ணீர், அதாவது 216 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட் 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்னைகள் தீரும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.
Kanyakumari : முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நேற்று ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.


Ms. Jayalalithaa declared open four canteens (Amma Unavagam) in four municipalities of Kanyakumari district also through video-conferencing.

