Tag Archives: kanyakumari district

Amma Unavagam inaugurated in Kanyakumari

Amma Uvavagam in kanyakumariMs. Jayalalithaa declared open four canteens (Amma Unavagam) in four municipalities of Kanyakumari district also through video-conferencing.

The canteens are in Vadaseri bus stand and on Kanyakumari Government Medical College Hospital premises here. The other two canteens are in the market in Padmanabhapuramn near Marthandam bus stand in Kuzhithurai and in Colachel town.

Nagercoil MLA Nanjil A. Murugesan, district panchayat chairman M.S. Saradhamani and Nagercoil municipal chairperson Meena Dev among others were present at Vadaseri.

Source : The Hindu

Heavy rain lashes Kumari District

குமரி மாவட்டத்தில் 2–வது நாளாக கனமழை கொட்டியதால் கொட்டாரத்தில் 12½ செ.மீ. மழை பதிவானது. மேலும் தாழ்வான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கனமழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வந்தது. இதனால் வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலின் தாக்கமே குமரி மாவட்டத்தில் இல்லாமல் போனது. இதற்கிடையே லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து விட்டு– விட்டு கனமழை பெய்து வருகிறது.

நேற்று 2–வது நாளாகவும் இந்த மழை தொடர்ந்தது. நேற்று முன்தினத்தைக் காட்டிலும் நேற்று இடி– மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. 15 நிமிடம் அல்லது அரை மணி நேர இடைவெளியில் நாள் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தால் நாகர்கோவில் நகரில் உள்ள கேப்ரோடு, செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் ரோடு, கோட்டார் ரெயில்வே ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடு, கோர்ட்டு ரோடு, ஒழுகினசேரி ரோடு, வடசேரி ரோடு, வெட்டூர்ணிமடம் ரோடு உள்ளிட்ட நகரின் அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சாக்கடை கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் அமைந்துள்ள தெருக்கள் அனைத்திலும் கால்வாய்கள் மற்றும் வடிகால்களை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். சில பகுதிகளில் பாய்ந்தோடிய வெள்ளம் ஆட்டோக்களை கவிழ்க்கும் வகையில் ஓடியது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தன. நாகர்கோவில் ஏழகரம் ராமர்காலனி பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் அந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று குடியேறினர்.

நாகர்கோவில் செந்தூரான் நகர் 5–வது தெரு பகுதியில் செட்டிகுளம் வாய்க்கால் தண்ணீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின்போது சீறிப்பாய்ந்து வந்த மழை வெள்ளம் அந்த தடுப்புச்சுவரின் 200 அடி நீளத்துக்கு உடைத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. தற்போது  2 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் புகுந்த பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு மீண்டும்  வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளின் வெளி வாசல் வரை சென்று நின்றது. இதனால் மக்கள் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் தூங்காமல் விடிய– விடிய விழித்திருந்தனர்.

இதேபோல் காந்தி காலனி, செட்டிகுளம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர், பறக்கிங்கால், ஆஸ்ராமம், கரியமாணிக்கபுரம் போன்ற பகுதிகளில் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. இந்த மழை தொடர்ந்து பெய்தால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப்பகுதி மக்கள் எப்போது வெள்ளம் புகுமோ? என்ற அச்சத்துடனேயே வீடுகளில் வசித்து வருகின்றனர். மேலும் பழையாறு உள்ளிட்ட ஆறுகளிலும், பாசன வாய்க்கால்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான குளங்களும் நிரம்பி வருகின்றன.மழையால் பார்வதிபுரம் பகுதியில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து அதனை அகற்றியதும் போக்குவரத்து சீரானது.

12½ செ.மீ. மழை

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 57.2, பெருஞ்சாணி– 37.8, சிற்றார் 1– 38.8, சிற்றார் 2– 42.4, பொய்கை– 14.2, மாம்பழத்துறையாறு– 76, முக்கடல்– 95, நாகர்கோவில்– 114.2, பூதப்பாண்டி– 38, சுருளோடு– 51.4, கன்னிமார்– 72.5, ஆரல்வாய்மொழி– 14.2, பாலமோர்– 21.5, மயிலாடி– 79.6, கொட்டாரம்– 125.8, இரணியல்– 7, அடையாமடை– 93, குளச்சல்– 32, குருந்தங்கோடு– 66.6, அடையாமடை– 41, கோழிப்போர்விளை– 82, திற்பரப்பு– 95 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது. இதில் அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 12½ செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

முக்கால் அடி உயர்வு

இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 729 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 166 கன அடி தண்ணீரும், சிற்றார்–1 அணைக்கு 99 கன அடி தண்ணீரும், சிற்றார்–2 அணைக்கு 135 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 15 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

எனவே பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 35.30 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.85 அடியாகவும், சிற்றார்–1 அணை நீர்மட்டம் 13.91 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 14 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 7.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 54.12 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 4.70 அடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவுடன் இருப்பதால் அணைக்கு வரும் 15 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 3.90 அடியாக இருந்தது. மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒரே நாளில் முக்கால் அடிக்கு மேல் உயர்ந்து நேற்று 4.70 அடியாக உயர்ந்தது.

Kanyakumari student selected for EDT Programme in US

03KGRAMHI-Stude_MA_2394541eMasha Nazeem of Eraviputhoor Kadai in Kanyakumari district, who is doing Master of Technology course at SRM University, has been selected for the prestigious Entrepreneurship Development Training Programme in the United States.

She is one among the eight students selected by Motwani Jadeja Foundation (MJF), headquartered in California, for the Rajeev Circle Fellowship. The annual fellowship is offered by the MJF to bright students from various nations.

As part of this fellowship, the selected students from India would take part in Entrepreneurial Development Training Programmes in Google, Face Book, E-Bay, Auto Desk and Twitter from May 10 to 30.

Masha Nazeem has been selected for the fellowship for her innovative service rendered to school students under the Masha Innovation Centre, which was inaugurated by the then Collector Nagarajan. As many as four school students of Masha Innovation Centre have been selected for national-level competitions on inventiveness and creativity.

Ms. Nazeem said that the EDP training would help her take the centre to the national level to popularise science among school students.

She started designing science projects at the age of nine and has invented 12 science models. She has got five national and two international awards.

Source : The Hindu