Category Archives: Nagercoil News

போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் நகர தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 Encroachments removed at nagercoilஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Nagercoil :நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நகர தெருக்களிலும் பிளாட்பாரங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில், நகரசபை கமிஷனர் ராமமூர்த்தி ஆலோசனைப்படி நகரமைப்பு அதிகாரி கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் கெபின்ஜாய், துர்காதேவி, சந்தோஷ்குமார், மகேஸ்வரி மற்றும் ஊழியர்கள் நேற்று, நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்புடன்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஆனைப்பாலம் கரியமாணிக்கபுரம் பகுதியில் நடந்தபோது ரோட்டோரம் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் வடிவீஸ்வரம் பெருமாள்கோவில் தெரு, ஆசாரிமார் வடக்குத்தெரு, வடசேரி குன்னுவிளை, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊழியர்களின் துணையோடு ராட்சத எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காமாட்சி அம்மன் கோவில் தெருவில் ஒரு பெட்டிக்கடை முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

நகரில் இதுபோல ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source : Dinathanthi

‘Nethili Fish’ dried and salted in Colachel by Fisherman’s

nethili-colachelகுளச்சல் (Colachel) மீனவர்களின் வலைகளில் அதிகமாக நெத்தலி மீன் கிடைத்தும், அதற்கான விலை போகாததால், கடற்கரை மணல் பரப்பில் நெத்தலி மீன்கள் உலரவைக்கப்பட்டு கருவாடாக்கப்படுகிறது.

நெத்தலி மீன்

குளச்சல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. விசைப்படகு மூலம் மீன் பிடிப்பது வருகிற 15–ந்தேதியுடன் முடைவடைய இருப்பதாகவும், அதன்பிறகு 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைக்காலமாகும்.

கடந்த சில மாதங்களாக நெத்தலி மீன் சீசன் காலமாகும். கடலில் கட்டுமரம் மற்றும் பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் நெத்தலி மீன்களை ஏராளமாக பிடித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதிகளான கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, குறும்பனை, வாணியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்தன. அவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குறைந்த விலைக்கே ஏலம் எடுத்து சென்றனர். மீனவர்களின் வலையில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்த போதிலும் அவை எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கருவாடாகிறது

இதைத்தொடர்ந்து மீனவர்களிடம் தேங்கிய நெத்தலி மீன்களை, குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவ பெண்கள் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தனர். பின்னர் அவற்றை கருவாடாக்க குளச்சல் கடற்கரை மணற்பரப்பில் உலர வைத்து உள்ளனர். கடலில் நெத்தலி மீன்கள் அதிக அளவில் கிடைத்தும் விலை போகாததால் தற்போது கருவாடாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலர வைத்துள்ள மீன்கள் கருவாடானதும் அவற்றை பெண்கள் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். அந்த வியாபாரிகள் அவற்றை வாங்கி தூத்துக்குடி, திருச்சி, கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

Source : Dinathanthi

Pon Radhakrishnan – இந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

Pon Radhakrishnan Review Bridgeஇந்து மாணவர்கள்  கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து  வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆய்வு

மார்த்தாண்டத்தை (Marthandam)  அடுத்த பயணம் – திக்குறிச்சி ஆற்று இணைப்புபாலம் ரூ. 5½ கோடி செலவில் புதிதாக அமைக்கப் படுகிறது.  இதன் இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாலம் பணியை ஆய்வு செய்தார்.

அந்த இணைப்பு பாலத்தின் அருகில்,  2–வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்ளது.  பாலம் கட்டும் பணி நடந்த போது ஆற்று தண்ணீர், கோவிலின் உள்ளே புகாமல் இருப்பதற்கு வைக்கப் பட்டிருந்த தடுப்பு கற்கள் அகற்றப்பட்டது.  இதனால், ஆற்று வெள்ளம் சிவாலய சுவற்றில் மோதி, சுவர் சேதமடைந்துள்ளது.

இந்தநிலையில், பாலம் பணியை பார்வையிட வந்த மத்திய மந்திரியிடம்,  கோவிலை பாதுகாக்கும் வகையில்  தடுப்புசுவர் கட்டவும்,   சிவாலய  ஓட்டம் நடைபெறும் போது புனிதநீராடுவதற்கு வசதியாக படித்துறை அமைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.   இதற்கு மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவித்தார்.

கல்வி உதவித்தொகை

காங்கிரஸ் கட்சி, இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். காங்கிரசார்,  தங்களின் கட்சியை சேர்ந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து கூறி சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுவதற்கு வலியுறுத்த வேண்டும். இந்து மாணவர்கள்  கல்வி உதவித் தொகைக்காக மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இவ்வாறு அவர் தெரிவித் தார்.

Pon Radhakrishnan

Source : Dinathanthi

கன்னியாகுமரியில் இருந்து, கேரளாவுக்கு வந்துகொண்டிருந்த காய்கறிகளுக்கு, கேரளா தடை

nagercoil-vegetable

Nagercoil :

கன்னியாகுமரியில் (Kanyakumari) இருந்து, கேரளாவுக்கு வந்துகொண்டிருந்த காய்கறிகளுக்கு, கேரளா தடைவிதித்து விட்டது. மேலும், ஒட்டுமொத்தமாக, தமிழக காய்கறிகளுக்கு தடை விதிப்பது குறித்தும், கேரளா ஆலோசித்து வருகிறது.மத்திய அரசிடம் புகார்:இந்நிலையில், தமிழக காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்தாக உள்ளது என்றும், அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, தமிழகத்தில், காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது’ என, டில்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், கேரளா புகார் கூறி உள்ளது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ரசாயன உரத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக, கேரள அரசு கூறி வருகிறது.இதனால், தமிழக காய்கறிகள் உற்பத்தியாகும் இடங்களில், கேரள தோட்டக்கலைத் துறையினர், கடந்த மாதம் ஆய்வு நடத்தினர்.பின், அக்கு-ழு அளித்த அறிக்கையின்படி, கேரள உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அனுபமா,தமிழக வேளாண் உற்பத்தித்துறை கமிஷனர் ராஜேஷ் லக்கானிக்கு கடி-தம் எழுதினார்.அதில், ‘பூச்சிக்கொல்லி மருந்துக-ளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தாத பட்சத்தில், இருமாநில மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்’ என கூறியிருந்தார்.

பேச்சிப்பாறை(Pechiparai) அணைத்தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டது

Pechiparai Damபாசனத்துக்காக திறக்கப்பட்ட பேச்சிப்பாறை அணைத்தண்ணீர் தோவாளை சானலுக்கு வந்து சேர்ந்தது. 216 கனஅடி திறப்பு குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் ஆகிய அணைகள் உள்ளன. இதில் முக்கடல் அணையைத்தவிர மற்ற அணைகள் அனைத்தும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டிலும், குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் முக்கடல் அணை நாகர்கோவில் நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் பாசனத்துக்காக ஜூன் மாதம் திறக்கப்பட்டு, பிப்ரவரி மாத இறுதியில் மூடப்படுவது வழக்கம். இந்தநிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. கோடை மழை தொடர்ந்து பெய்ததின் காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 40.58 அடியாக இருந்தது. முதல்நாளான நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று கூடுதலாக 16 கன அடி தண்ணீர், அதாவது 216 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விவசாயிகள் மும்முரம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் தோவாளை சானல் தொடங்கும் பகுதியான செல்லந்துருத்தியை தாண்டி காட்டுப்புதூருக்கு வந்தது. மாலையில் சீதப்பால் பகுதிக்கு வந்து சேர்ந்தது.

அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியை மேற்கொள்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் பணியை விவசாயிகள் தொடங்கினர். விரைவில் நடவுப்பணியை மேற்கொள்வார்கள் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.67 அடியாக உள்ளது. அணைக்கு 79 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சிற்றார்-1 அணை நீர்மட்டம் 17.06 அடியாகவும்,
சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 17.16 அடியாகவும்,
பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும்,
மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் முழுகொள்ளளவான 54.12 அடியாகவும் உள்ளன. இந்த அணைக்கு 4 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த 4 கன அடி தண்ணீரும் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

Source : Dinathanthi

Pechiparai Dam (Pechiparai Reservoir) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது.இது மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலக்கட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது.இதன் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவ்வணை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள் ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள்

Source : Wikipedia

முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு

kanyakumariKanyakumari : முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நேற்று ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆராட்டு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 23–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை, சொற்பொழிவு, வாகன பவனி, சப்பர ஊர்வலம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. 10–ந் திருவிழாவான நேற்று காலையில் முக்கடல் சங்கமத்தில் உற்சவ அம்மனுக்கு (பகவதி அம்மனுக்கு) கடலில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி காலையில் பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு பூஜை, வழிபாடு, மஞ்சள் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கடலில் ஆராட்டு நடந்தது.

கிழக்கு வாசல் திறப்பு

இதில் கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, கீழ்சாந்திகள் சீனிவாசன் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ஆண்டுக்கு 5 முக்கிய நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கொண்டு வரப்பட்டு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், பக்தர்களும் அந்த வழியாக கோவிலுக்குள் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், சென்னையை சேர்ந்த தட்சயாக ஆராய்ச்சியாளர் எம்.கே. பிரதீப் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Source : Daily thanthi

Food Safety Raids on hotels and restaurants in Nagercoil

Food RideNagercoil : Food Safety officials and municipal authorities conducted a surprise raid on hotels, restaurants and roadside eateries in Meenakshipuram here on Tuesday.

The officials, headed by Deputy Food Safety Officer Salodisan, seized and destroyed food items prepared and kept in unhygienic condition.

Expired packets of food ingredients, found in the kitchens of some hotels, were destroyed.

The officials also seized food items that did not have proper labels and adulterated tea powder.

An investigation was launched to find out the origin of adulterated tea powder.

A few hotels were given two weeks’ time to improve the hygiene standard of the kitchens.

Caution notices were issued to some shops for not maintaining hygiene on their premises.

Source : The Hindu

Nagercoil town free from water scarcity

நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

Mukkadal-dam-topview

கோடைகாலத்தில் முக்கடல் அணை நிரம்புவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிகழ்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்கான ஒரே ஆதாரம் முக்கடல் அணை. குடிநீருக்காகவே பயன்படுத்தப்படும் ஒரே அணையும் இதுதான். நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 3 பக்கம் மலைகளால் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 25 அடி ஆகும்.

25 அடி என்பது அணையின் தரைமட்ட அளவில் இருந்து கணக்கிடப்பட்ட ஆழம் அல்ல. 25 அடிக்கும் கீழே மைனஸ் நிலையில் 20 அடி ஆழம் உள்ளது. 25 அடிக்கும் கீழே நீர்மட்டம் குறையும்போது நீர் கலங்கலாக இருக்கும். சேறும், சகதியுமாக இருக்கும். எனவே, அணையின் நீர்மட்டம் 25 அடி என்றே கருதப்படுகிறது.

இந்த 25 அடி கொள்ளளவையும் முக்கடல் அணை ஆண்டுதோறும் எட்டுவது இயல்புதான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் அது நிறைவேறாமலும் போயிருக்கிறது. இந்த நிலையில் முக்கடல் அணையின் நேற்றைய நீர்மட்டம் 21.10 அடியாகும். இது, அணையின் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கதான நீர்மட்டம் ஆகும்.

21 அடியை தாண்டியது அதாவது, தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் முக்கடல் அணை, முழு கொள்ளளவான 25 அடியை எட்டுவது வழக்கம். ஆனால் கோடை காலத்தில் 20 அடியை தாண்டுவது என்பது எப்போதாவது நிகழும் சம்பவம். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இதைப்போல கோடைகாலத்தில் நீர்மட்டம் 21 அடியை தாண்டி இருக்கிறது. அந்த நிலை அணையில் தற்போது நிகழ்ந்திருக்கிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 21.10 அடியாகும். கடந்த சில ஆண்டுகளில், கோடைகாலத்தில் முக்கடல் அணையில் தண்ணீர் வற்றி நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் இன்னல்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடே இல்லாமல் கோடைகாலம் முடிய இருப்பதையும், அதே நேரத்தில் முக்கடல் அணையில் நீர்மட்டம் 21 அடியை தாண்டியதை எண்ணியும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், அணை வற்றும்போது அணையை தூர்வாரி தண்ணீர் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Source : Dinathanthi

Amma Unavagam inaugurated in Kanyakumari

Amma Uvavagam in kanyakumariMs. Jayalalithaa declared open four canteens (Amma Unavagam) in four municipalities of Kanyakumari district also through video-conferencing.

The canteens are in Vadaseri bus stand and on Kanyakumari Government Medical College Hospital premises here. The other two canteens are in the market in Padmanabhapuramn near Marthandam bus stand in Kuzhithurai and in Colachel town.

Nagercoil MLA Nanjil A. Murugesan, district panchayat chairman M.S. Saradhamani and Nagercoil municipal chairperson Meena Dev among others were present at Vadaseri.

Source : The Hindu

The KanyaKumari District Six students in the state Second-ranked In SSLC

குமரி மாவட்டத்தை சேர்ந்த  6 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் 2-வது இடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குமரி மாவட்டத்தில் 6 பேர் 498 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்துள்ளனர்

இவர்களில் 3 பேர் நாகர்கோவில் புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான அனுருத்ஸ்ரீ கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ரியா வில்சன் : 498 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்த புனித அல்போன்சா பள்ளியின் மற்றொரு மாணவி ரியா வில்சன். இவரும் மாணவர் அனுருத்ஸ்ரீயைப் போல மொழிப்பாடங்களில் தலா 99, பிற பாடங்களில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார்

ரிட்டு ஷெரின்:  498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்த புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இன்னொரு மாணவி ரிட்டு ஷெரின் தமிழ் தவிர பிற பாடங்கள் அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அபர்ணா: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அபர்ணா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

லட்சுமி: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள டி.வி.டி. மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லட்சுமி 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

லிட்டில் ஷர்மியா: தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லிட்டில் ஷர்மியா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், குமரி மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்

nagercoil1-sslc-result nagercoil-sslc-result1

nagercoil-sslc-result2

nagercoil-sslc-result