Pon Radhakrishnan in Kanyakumari district at the opening ceremony of Punnavilai Mutharamman Temple Art Gallery

கன்னியாகுமரி மாவட்டம் புன்னவிளை முத்தாரம்மன் கோயில் கலையரங்கம் திறப்பு விழாவில் (பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ஒதுக்கீடு) குதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ஒதுக்கீடு)

Pon Radhakrishnan (3)

Pon Radhakrishnan : Allocated 10 lakhs from the Member of the Parliamentary Committee for Development

பொன். இராதாகிருஷ்ணன் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நீதியில் இருந்து 10 லட்சம் ஒதுக்கீடு செய்து  கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து  கொண்டார்

Pon Radhakrishnan

what can be eaten as a substitute for rice and wheat?

கேழ்வரகு… ஒர் பார்வை….கண்டிப்பாக முழுவதுமாக படியுங்கள்..

Sprouted Finger Millet

அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில், சர்வதேச அளவில் இன்றைக்கு கேழ்வரகுதான். அப்படி என்ன கேழ்வரகுக்குச் சிறப்பு?

ஆரியம், கேழ்வரகு, கேவுரு, ராகி, கேப்பை… இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்படும் கேழ்வரகு, அடிப்படையில் அரிசியைப் போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் உணவு தானிய மாகும்.

இட்லி, தோசை, இடியாப்பம் என நெல் அரிசியில் செய்யும் அத்தனை பண்டங் களையும் இதிலும் செய்ய முடியும். ஆனால், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. இதில் விவசாயிகளுக்கு நன்மை இருக்கிறது,

சரி சாப்பிடும் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இருக்கிறது…

உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக் காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் இதன் முதல் விசேஷம். கேழ்வரகுக்கு உரம் போட்டால்தான் ஆபத்து. வேகமாக செடி உயர வளர்ந்து, கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனாலேயே உர நிறுவனங்களின் பாச்சா, கேழ்வரகில் அதிகம் பலிக்கவில்லை என்பதால், எந்தக் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியமாக நாம் கேழ்வரகை நம்பி வாங்கலாம்.

”கேழ்வரகு பிறந்த இடம் தமிழகம் அல்ல என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழக நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடை யது கேழ்வரகு.

இங்கு பல நூற்றாண்டு காலப் பின்னணி கேழ்வரகுக்கு இருக்கிறது. நாட்டுக் கேழ்வரகிலேயே வெண்ணிறக் கேழ்வரகு, கறுப்புக் கேழ்வரகு, நாகமலைக் கேழ்வரகு, மூன்று மாதக் கேழ்வரகு, தேன்கனிக் கோட்டைக் கேழ்வரகு என்று ஏறத்தாழ 60 வகைகள் இருக்கின்றன.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் கேழ்வரகுத் திருவிழா எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது”.

அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங் களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம். பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ் வரகில் உண்டு.

ஆனால், பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும். இதனாலேயே எல்லோருக்கும் நல்ல தானியம் கேழ்வரகு என்றாலும், வளரும் குழந் தைகளுக்கும், மாதவிடாய்க் கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிகமிக அவசிய மான உணவு கேழ்வரகு.

குழந்தை ஒரு வயதைத் தொடும்போது கேழ் வரகை ஊறவைத்து முளைகட்டி, பின் உலர்த்திப் பொடி செய்து, அதில் கஞ்சி காய்ச்சிக் கொடுத் தால், சரியான எடையில் குழந்தை போஷாக்காக வளரும்.

ஆந்திர மாநிலத்தில் வறுமையில் பீடித்திருந்த கிராமங்களில் இந்திய முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பினர் (AID) ஒரு வயதில் இருந்து எட்டு வயது வரை உள்ள – மெலிந்துபோன நலிந்த ஊட்டச் சத்து இல் லாத குழந்தைகளுக்கு – இந்த முளை கட்டிய கேழ்வரகை தினசரி உணவாகக் கொடுத்து வந்தனர். ஓர் ஆண்டு முடிவில் 51 சதவிகிதக் குழந்தைகள் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

”மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான ஊட்டச் சத்தை வழங்க கேழ்வரகுக் கஞ்சிக்கு இணை ஏதும் கிடையாது” என்றார்கள் அந்த அமைப்பினர்.

சமீபத்திய ஆய்வுகளில் மூட்டு வலி முதல் ஆண்மைக் குறைவு வரை பல நோய்களுக்குக் கேழ்வரகு உணவு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு. இனிமேலும் கேழ்வரகைத் தவிர்ப்பீர்களா என்ன?

இந்த கேழ்வரகு என்ற ராகியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-7.1%, கொழுப்பு-1.29%, உலோகம்-2.24%, கால்ஷியம்-0.334%, பாஸ்பரஸ்-0.272%, அயன்-5.38%, விட்டமின் ஏ-70.

அரிசியில் உள்ள சத்துக்கள்

புஷ்டி-6.85%, கொழுப்பு-0.55%, உலோகம்-0.05%, கால்ஷியம்-0.007%, பாஸ்பரஸ்-0.108%, அயன்-1.02%, விட்டமின் ஏ-0.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது.

மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன.

PaniVaraguArisi

சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும்.

இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன.

இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது.

இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.

உடலுக்கு வலிமை தரும்
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.

கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவாக எடுக்கும்.

உஷ்ணத்தை குறைக்கும்

ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது.

இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால் ,சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது .
.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .உடல் சூட்டை தனிக்கும் .

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால் ,சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும் .

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும் .கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும் .
கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது .

இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ,அடை ,புட்டாக , செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது .கூழாக குடிக்கும் போது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும்.

கொலஸ்டிராலை குறைக்கும் .இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .இதில் அதிக அளவு கால்சியம் ,இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம் .

பசியின் பொது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர்.

கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்ளுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும் .

நிலங்களிலும் ,வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது .உடலில் இருக்கும் தேவை அற்ற கெட்ட கொழுப்பை அகற்ற மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது .கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன.

இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.

இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.இயற்கையாய் இயற்கையோடு வாழ..!

இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..
ரத்த சோகையை குணப்படுத்தும் கேழ்வரகு.

கோதுமைக்கு இணையான சத்துக்கள் கொண்ட ராகியில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், பூப்பெய்த பெண்கள் மற்றும் வயதான பெண்கள் கேழ்வரகினை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.

பசியை அடக்கி, சோர்வை நீக்கி உடலுக்கு வலு சேர்ப்பதால் பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கும் கேழ்வரகை கூழாக்கி வழங்கி வருகின்றனர்.

கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் தாய்பாலுக்கு இணையான சத்துக்களை கொடுக்கிறது.

வயலுக்கு சென்று வந்த நம் முன்னோர்களும் கேழ்வரகு கூழ் குடித்து காலை முதல் மாலை வரை உற்சாகமாக பணி செய்து வந்ததும் உண்டு.

இந்த தானியத்தை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் நோய்க்கான தேநீர் செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு.

கேழ்வரகு கதிரில் உள்ள இலை தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் நீர் விட்டு, கேழ்வரகு கதிர், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த தேநீரை தினமும் எடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய் காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்த கசிவு நீங்கும். வெள்ளைப்படுதல் நோயினால் உடல் உருக்கப்படுவது தவிர்க்கப்படும்.

குழந்தைகளுக்கு பலம் தரும் கேழ்வரகு பால் கஞ்சி:

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு (முளைக்கட்டியது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, காய்ச்சிய பால்.

முளைகட்டிய கேழ்வரகை அரைத்து பால் எடுக்கவும். அதனை வானலியில் ஊற்றி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்து கூழ் போல் வந்ததும், அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

அரிசியை விட அதிக சத்துக்களை கொண்டுள்ள கேழ்வரகை குழந்தைகளுக்கு கொடுப்பதால் நீண்ட நேரம் பசி அடங்கும்.
கெட்ட கொழுப்புகளை வெளித்தள்ளி, நல்ல கொழுப்புகளை உடலில் சேர்க்கிறது.

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு உருண்டை:

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, வெள்ளரி விதை, நெய், உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்.

கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து அடை போல் தட்டி வெயிலில் காயவைத்து தயார் செய்து கொள்ளவும். இந்த அடையை நீர் விடாமல் பொடித்து கொள்ளவும். அதனுடன் வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும். இந்த கலவையுடன் சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக செய்து கொள்ளவும். இந்த உருண்டையை பூப்பெய்திய பெண்களுக்கு செய்து கொடுத்து வருவதால் உடல் பலம் பெறும்.

இரும்பு சத்து நிறைந்த கேழ்வரகு ரத்த சோகை மட்டுமல்லாது பற்கள், தலைமுடி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது

Health Benefits of Turmeric

[quote]Every morning a pinch of Turmeric with honey can keep you away from doctors.[/quote]

turmeric-powder

Usually most of all us use Turmeric for cooking…
Let us now see the golden benefits of Turmeric Powder:

Prevent Cancer:

Eating Turmeric powder everyday kill the Cancer cells, Also it stops Tumour cells growth.

Kill Germs:

Even a wounds can be cured by applying Turmeric powder on it. Usually Turmeric has an effect of killing bacteria, Virus and fungi. Turmeric Powder will maintain and strengthen the Immune system by killing the bacteria and viruses.

Control Diabetes:

Keeping Insulin at normal level..Pinch of Turmeric Powder will keep away from diabetes.

Control Cholesterol level:

Regular intake of turmeric powder will reduce the cholesterol level and body weight will be maintained by breaking down the fat.

Airport Project Discussion with Suresh Prabhu Minister

kanyakuari-airport-disscussion

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள்  இன்று(20/09/2018) டெல்லியில்மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களை மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டி வலியுறுத்தினார்.
அதற்குஉரிய நடவடிக்கை எடுப்பதாக மத்தியஅமைச்சர்திரு.சுரேஷ் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பேருந்துநிலையங்களை தனியார்மயமாக்க தேவையில்லை!-வழிகாட்டும் நாகர்கோயில் நகராட்சி!

nagercoilinfo

“உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தத்தளிப்பதால் பேருந்துநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போகிறோம்” என்ற தமிழக அரசின் அறிவிப்பு பலத்த சர்ச்சை விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், “உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை சரிசெய்து வருமானத்தை பெருக்கினால்… அரசாங்கமே பேருந்துநிலையங்களை சிறப்பாக நடத்திட முடியும்” என்று உணர்த்தியதோடு உயர்நீதிமன்றத்தால் பாராட்டையும் பெற்றிருக்கிறது நாகர்கோயில் நகராட்சி.

“பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் அங்கு விற்பனை செய்யும் பொருட்களின் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி விற்பனை செய்வார்கள். பேர்ந்து நிலையத்தில் நிற்பதற்குக்கூட கட்டணம் வசூலிக்கும் அவலநிலை வரலாம். இதன்மூலம், பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றக் குமுறல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வெடித்துக்கொண்டிருக்க, நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு நாகர்கோயில் நகராட்சி அப்படியென்ன செய்திருக்கிறது?

இதுகுறித்து, சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் பொ.சோமசுந்தரம் நம்மிடம், “உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தத்தளிப்பதால்தான் பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், நாகர்கோயிலிலுள்ள பேருந்துநிலைய வருமானம் கடந்த வருடங்களைவிட இந்த வருடம் 4 மடங்காக அதிரிகரித்திருக்கிறது. இப்படி, தமிழகம் முழுக்க உள்ள பேருந்துநிலையங்களில் நியாயமான வாடகைகளை வசூலித்து வருமானத்தை பெருக்கினாலே தனியாரைவிட சிறப்பாக நடத்துவதோடு பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று ஆச்சர்யப்படுத்துகிறவர், அதுகுறித்து நம்மிடம் விளக்கினார்.

“நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்டு சுமார் 343 கடைகள் உள்ளன. இந்த, கடைகளை குறைந்த வாடகைக்கட்டணத்தில் வாடகைக்கு எடுத்தவர்கள் பெரும்பாலானோர் பல மடங்கு கூடுதல் கட்டணத்திற்கு உள்வாடகை விட்டுக்கொண்டிருப்பது நடைமுறையில் உள்ளது. 2018 மார்ச்-31 ந்தேதி  கடைகளின் வாடகை ஒப்பந்தம் முடிவடைவதால் மூன்று மாதத்திற்கு முன்பே அதாவது 2017  டிசம்பர்-28 ந்தேதி நகராட்சி நிர்வாகத்தால் ஏலம் அறிவிக்கப்பட்டது.

5,000 ரூபாய்க்கு கடையை வாடகைக்கு எடுத்துவிட்டு, மாதம் 2 லட்சரூபாய்வரை எல்லாம் உள்வாடகைக்கு விடுகிறார்கள். அதற்கு, நேரடியாகவே ஏலம் எடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு வாடகை கொடுத்துவிடலாம். இதன்மூலம், உள்வாடகைக்கு இருக்கிறோம் என்ற பயமும் பதட்டமும் இல்லாமல்  உரிமையாளர்கள் என்ற எண்ணம் ஏற்படும். எப்போது, விரட்டிவிட்டு வேறு யாரையாவது கொண்டுவந்துவிடுவார்கள் என்று உள் வாடகைக்குவிட்டவர்களுக்கும் பயப்படத்தேவையில்லை.  இதைவிடக்கொடுமை, நாகர்கோயில் பேருந்துநிலையத்திலுள்ள கடைகளுக்கு முன்பு ஒருமுறை ஏலம் விடப்படப்போது, தனியார் கடைகளுக்கு 30 சதவீதம் வாடகை ஏற்றமும் போக்குவரத்துத்துறை அலுவகத்திற்கு 100 சதவீத வாடகை ஏற்றமும் இருந்ததை சுட்டிக்காட்டி போக்குவரத்துறைதான் மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறது அதற்கு 100 சதவீதம் வாடகையை பாகுபாடாக கூட்டியிருக்கிறீர்களே என்று உயர்நீதிமன்ற மிகுந்த வருத்தம் தெரிவித்தது.

அரசாங்கத்தின் இடத்திலேயே உள் வாடகையில் இருக்கும் கடைக்காரர்கள் கொடுக்கும் வாடகை, பேருந்துநிலையத்தில் விற்பனையில் கிடைக்கும் வருமானம் இதையெல்லாம் கருத்தில்கொண்டு கடைகளின் மாத வாடகையை  அதிரடியாக உயர்த்தி ஏலம் விட்டார்கள்.

இதனால், நாகர்கோயில் நகராட்சி கடைகள் மூலம் 1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 144 ரூபாய் மட்டுமே வந்துகொண்டிருந்த வருட வருமானம் தற்போது 4 கோடியே 62 லட்சத்து  6 ஆயிரத்து 564 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதேபோல், கடைக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட்  தொகையும்  8 கோடியே 92 லட்சத்து  6 ஆயிரத்து 564 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

மேலும்,‘ஏற்கனவே, இருந்த கடைக்காரர்களுக்கே வாடகைக்கு விடவேண்டும். அதுவும், பழைய தொகையிலேயே வாடகைக்கு விடவேண்டும்’ என்று பழைய வாடகைக்கடைக்காரர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்கள். அப்போதுதான்,  ‘நகராட்சி நிர்வாகம் கடைகளுக்கான வாடகையை உயர்த்தியது சரியே. இந்த, நகராட்சி நிர்வாகம்போல் ஆங்காங்கேயுள்ள ஒரு சில நகராட்சி நிர்வாகங்கள் விதி விலக்குகளே’ என்று பாராட்டியதோடு நாகர்கோயில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்து வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது” என்றார்.

நாகர்கோயில் நகராட்சிபோல உள்ளாட்சி அமைப்பிலுள்ள ஒவ்வொரு நகராட்சியும் மாநகராட்சியும் முறைகேடுகளை தடுத்து வரி, வாடகைகளை  முறையாக வசூலித்தாலே தமிழகத்திலுள்ள எந்த பேருந்துநிலையத்தையும் தனியாரிடம் தாரை வார்க்காமல் அரசாங்கமே திறம்பட நடத்தமுடியும்.

Source : https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/no-need-privatize-bus-stations-municipal-corporation-nagercoil

450 crore by ISRO: International standard space and science park at Kumari

nagercoilinfo

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுமார் 450 கோடியில், சிறிய விண்கலம் உள்பட அதிநவீன தொழில்நுட்பத்துடன், விண்வெளி மற்றும் விஞ்ஞான பூங்கா அமைகிறது. கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் என்றாலும், இங்கு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை கவர எவ்வித வசதியும் ஏற்படுத்தி தரப்படவில்லை. பல திட்டங்கள் பல கோடிகளை முடக்கி ஏற்படுத்தினாலும், அவை செயல்படாமல் சுற்றுலா பயணிகளுக்கு பயன் இன்றி முடங்கி ேபாய்கிடக்கின்றன. இந்நிலையில், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, சுற்றுலா வளர்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். இதற்கேற்ப மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரிந்துரைப்படி, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆய்வு செய்து சென்றார். இதனை தொடர்ந்து முட்டம் கலங்கரை விளக்கத்தில் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டது.

திருவள்ளுவர் சிலைக்கு பாலம் உள்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவும் சுற்றுலா வளர்ச்சி பணிகள் பற்றி சிறப்பு குழு அமைத்து பல்வேறு ஆலோசனைகள் செய்து வருகிறார். இதற்கிடையே,  கன்னியாகுமரியில், இஸ்ரோ சார்பில் விண்வெளி மற்றும் விஞ்ஞான பூங்கா அமைய உள்ளது.  இதற்காக அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சஜித் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், இஸ்ரோ சார்பில் புதியவன் உள்ளிட்ட அதிகாரிகளும், யாருக்கும் இடையூறு இல்லாத வகையில், இடம் தேர்வு செய்து, கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே இந்த திட்டம் குறித்து கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது தெரிவித்ததாவது:சர்வதேச தரத்தில், அமைய உள்ள இந்த திட்டத்தில், 200 பேர் அமரும் வகையில் பிளானட்டோரியம் அமைக்கப்படும். இதன் நடுவில் அனைத்து கோள்களும் கொண்ட விண்வெளி பாதை (கேலக்ஸி) அமைக்கப்பட்டு, பூமி பந்து சுழல்வதுபோல் அமைக்கப்படும்.
*பிரபஞ்சம் உருவான வரலாறு, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது எப்படி, மழை பெய்வது எப்படி என்பது குறித்த விளக்க கண்காட்சி இடம் பெறும்.

* விண்கலத்தில் செல்லும் அனுபவத்தை மாணவர்கள், பாமர மக்கள் உணரும் வகையில், சிறிய நிஜ விண்கலம் அமைக்கப்படுகிறது. மாணவர்கள், பார்வையாளர்கள் இதன் உள்ளே சென்று விண்கலத்தில் செல்லும் போது ஏற்படும் அனுபவத்தை நிஜமாக அனுபவிக்கலாம்.

* செயற்கை கோள்கள், விமானம், விண்கலம், ராக்கெட், ஜெட் போன்றவை எவ்வாறு இயங்குகிறது என்பதனை விளக்கும் வகையில் நிஜ விமானங்கள் மற்றும் உதிரிபாகங்களை கொண்டு கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
* இங்கு அமைக்கப்படும் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள், செயற்கை கோள்கள் மற்றும் விண்கலங்களை பார்வையிடலாம்.
* நியூட்டன் விதிகள் உள்பட முக்கிய விஞ்ஞான விதிகள் பற்றி செயல் வழியாக மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
* இந்த பூங்காவிற்கு வந்து திரும்பும்போது, அவர்களுக்கு வான்வெளி பற்றி முழுமையாக அறியும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
* இந்த பூங்காவிற்கு வரும் யாரும் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் பார்வையிடலாம்.
* இஸ்ரோ சார்பில் அமைக்கப்படும் இந்தியாவின் முதல் பூங்கா இதுதான். கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபும் பிளானட்டோரியத்தை விட நவீனமாக, சர்வதேச தரத்தில் அமைய உள்ளது.
* இதற்காக 450 கோடி வரை செலவு ஆகலாம் என திட்டமிடப்பட்டு, அதற்கான நிதியும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
கலெக்டரின் ஒப்புதலுக்கு பின்னர், நிலம் இஸ்ரோவிற்கு வழங்கப்பட்டதும் இந்த திட்டம் குறித்து, முறைப்படி இஸ்ரோ தலைவர் சிவன் அல்லது பிரதமர் அறிவிக்கலாம் எனத்தெரிகிறது. இதற்கு சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

 Source : Dinakaran News

 

Accident Near Vattakottai in kanyakumari District

கன்னியாகுமரி மாவட்டம் வட்ட கோட்டை சந்திப்பு நான்கு வழி சாலையில் Rohini College of Engineering & Technology கல்லூரி வாகனமும் , டெம்போவும் மோதியது.

accident near vattakottai

 

Rohini College Bus accident

Rohini College Bus accident

Rohini College Bus accident

Rohini College Bus accident

வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Kanyakumari-people-support-port
குமரி மாவட்டத்தில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதலில் இனயத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த துறைமுகம் கன்னியாகுமரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும்–கீழ மணக்குடிக்கும் இடையே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த துறைமுகம் அமைக்கக்கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஒரு தரப்பினர் கன்னியாகுமரிக்கு வர்த்தக துறைமுகம் வேண்டும் என்று கோரி குமரி வர்த்தக துறைமுகம் ஆதரவு இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாகவும், இந்த துறைமுக திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தியும் குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதார போராட்டம் என்ற பெயரில் குமரி வர்த்தக துறைமுக ஆதரவு இயக்கம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பிற்பகலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துறைமுக ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் வரவேற்றார். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகம்மது இஸ்மாயில், குமாரதாஸ், அய்யாவழி இயக்க சுவாமி சிவச்சந்திரன், வக்கீல் பாலஜனாதிபதி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல், நாடார் மகாஜன சங்க தங்கராஜ் நாடார், கவிஞர் சதாசிவம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஐவர் தேவவரம், துறைமுக ஆதரவு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் டி.சி.மகேஷ், மண்டைக்காடு புதூரைச் சேர்ந்த மீனவர் ஜெஸ்டாலின் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது அவர்கள், “கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் அமைவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்பது குறித்தும், இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மாவட்டத்தின் வளர்ச்சி போன்றவை குறித்தும், துறைமுகத்தால் மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களும் அடையப் போகும் பயன்கள், மாவட்டத்துக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்“ என்பது குறித்து விளக்கி பேசினர். வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

Tens-of-thousands-of-people-demonstrate-in-support-kanyakumari-port

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் விரைவில் அழகான பாலங்களை காணப்போகிற நீங்கள், அழகான துறைமுகத்தையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். உலக வரைபடத்தில் கடலுக்குள் நீண்டு போகும் நாடுகள் மூன்று தான். அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கடலுக்குள் நீண்டு போகும் இடம் ஒன்று தான். அது உங்கள் கன்னியாகுமரி. கன்னியாகுமரியின் மேற்கிலும், கிழக்கிலும் கடல் இருக்கிறது. இந்த கடல் சார்ந்த வியாபாரங்கள் துறைமுகம் மூலமாகத்தான் நடக்கும். அப்படி நடந்தாக வேண்டும் என்றால் கட்டாயம் துறைமுகம் வந்தாக வேண்டும். துறைமுக திட்டத்துக்கு எதிராக செயல்படுபவர்களை ஜெயிலில் தூக்கி போடவேண்டும். அதற்கு தமிழக அரசு தைரியம் இழந்து நிற்கிறது. அந்த தைரியத்தை தமிழக அரசுக்கு நாம்தான் கொண்டுவர வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகவும் இதேபோல் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டம் என்ன ஆனது? கூடங்குளம் தற்போது குட்டி சிங்கப்பூர் போல் ஆகிவிட்டது. கூடங்குளம் அப்படி ஆனால் கன்னியாகுமரியும் அப்படி ஆக வாய்ப்புள்ளது. உங்களைப் போல இளைஞர்களால் கட்டாயம் துறைமுகத்தை கொண்டுவர முடியும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எந்த அளவு உணர்வும், உணர்ச்சியும் இருந்ததோ அதை நான் இங்கு பார்க்கிறேன்.

காமராஜருக்கு அடுத்தபடியாக ஜூனியர் காமராஜராக பொன்.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார். இவரைப்போன்ற அரசியல்வாதியை பார்க்க முடியாது. அவருக்காகத்தான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நான் இங்கு வந்திருக்கிறேன். கன்னியாகுமரி துறைமுகம் அமைந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு இயக்குனர் விசு பேசினார்.

Kanyakumari-people-support-port1

 

Kanyakumari-people-support-port2

 

Kanyakumari-people-support-port3

 

Kanyakumari-people-support-port4

 

Kanyakumari-people-support-port5

 

Kanyakumari-people-support-port6

 

Kanyakumari-people-support-port7

 

Kanyakumari-people-support-port8

 

Kanyakumari-people-support-port9

 

Kanyakumari-people-support-port10

Kanyakumari-people-support-port11

 

Kanyakumari-people-support-port12