Category Archives: Nagercoil

வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Kanyakumari-people-support-port
குமரி மாவட்டத்தில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதலில் இனயத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த துறைமுகம் கன்னியாகுமரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும்–கீழ மணக்குடிக்கும் இடையே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த துறைமுகம் அமைக்கக்கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஒரு தரப்பினர் கன்னியாகுமரிக்கு வர்த்தக துறைமுகம் வேண்டும் என்று கோரி குமரி வர்த்தக துறைமுகம் ஆதரவு இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாகவும், இந்த துறைமுக திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தியும் குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதார போராட்டம் என்ற பெயரில் குமரி வர்த்தக துறைமுக ஆதரவு இயக்கம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பிற்பகலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துறைமுக ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் வரவேற்றார். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகம்மது இஸ்மாயில், குமாரதாஸ், அய்யாவழி இயக்க சுவாமி சிவச்சந்திரன், வக்கீல் பாலஜனாதிபதி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல், நாடார் மகாஜன சங்க தங்கராஜ் நாடார், கவிஞர் சதாசிவம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஐவர் தேவவரம், துறைமுக ஆதரவு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் டி.சி.மகேஷ், மண்டைக்காடு புதூரைச் சேர்ந்த மீனவர் ஜெஸ்டாலின் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது அவர்கள், “கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் அமைவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்பது குறித்தும், இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மாவட்டத்தின் வளர்ச்சி போன்றவை குறித்தும், துறைமுகத்தால் மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களும் அடையப் போகும் பயன்கள், மாவட்டத்துக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்“ என்பது குறித்து விளக்கி பேசினர். வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

Tens-of-thousands-of-people-demonstrate-in-support-kanyakumari-port

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் விரைவில் அழகான பாலங்களை காணப்போகிற நீங்கள், அழகான துறைமுகத்தையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். உலக வரைபடத்தில் கடலுக்குள் நீண்டு போகும் நாடுகள் மூன்று தான். அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கடலுக்குள் நீண்டு போகும் இடம் ஒன்று தான். அது உங்கள் கன்னியாகுமரி. கன்னியாகுமரியின் மேற்கிலும், கிழக்கிலும் கடல் இருக்கிறது. இந்த கடல் சார்ந்த வியாபாரங்கள் துறைமுகம் மூலமாகத்தான் நடக்கும். அப்படி நடந்தாக வேண்டும் என்றால் கட்டாயம் துறைமுகம் வந்தாக வேண்டும். துறைமுக திட்டத்துக்கு எதிராக செயல்படுபவர்களை ஜெயிலில் தூக்கி போடவேண்டும். அதற்கு தமிழக அரசு தைரியம் இழந்து நிற்கிறது. அந்த தைரியத்தை தமிழக அரசுக்கு நாம்தான் கொண்டுவர வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகவும் இதேபோல் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டம் என்ன ஆனது? கூடங்குளம் தற்போது குட்டி சிங்கப்பூர் போல் ஆகிவிட்டது. கூடங்குளம் அப்படி ஆனால் கன்னியாகுமரியும் அப்படி ஆக வாய்ப்புள்ளது. உங்களைப் போல இளைஞர்களால் கட்டாயம் துறைமுகத்தை கொண்டுவர முடியும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எந்த அளவு உணர்வும், உணர்ச்சியும் இருந்ததோ அதை நான் இங்கு பார்க்கிறேன்.

காமராஜருக்கு அடுத்தபடியாக ஜூனியர் காமராஜராக பொன்.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார். இவரைப்போன்ற அரசியல்வாதியை பார்க்க முடியாது. அவருக்காகத்தான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நான் இங்கு வந்திருக்கிறேன். கன்னியாகுமரி துறைமுகம் அமைந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு இயக்குனர் விசு பேசினார்.

Kanyakumari-people-support-port1

 

Kanyakumari-people-support-port2

 

Kanyakumari-people-support-port3

 

Kanyakumari-people-support-port4

 

Kanyakumari-people-support-port5

 

Kanyakumari-people-support-port6

 

Kanyakumari-people-support-port7

 

Kanyakumari-people-support-port8

 

Kanyakumari-people-support-port9

 

Kanyakumari-people-support-port10

Kanyakumari-people-support-port11

 

Kanyakumari-people-support-port12

 

 

கன்னியாகுமரி கடலில் அணிவகுத்த டால்பின்கள்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கன்னியாகுமரி கரையோர கடல் பகுதியில் டால்பின்கள் நீந்திச் சென்றதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

dolphonjpg

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில், அரிய வகை மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உள்ள நாட்களில் டால்பின்கள் கரைப்பகுதிக்கு வந்து செல்லும் என்று, மீனவளத்துறையினர் தெரிவித்து வந்தனர். ஆனால் டால்பின்களை யாரும் பார்த்ததில்லை.

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு 50-க்கும் மேற்பட்ட டால்பின்கள், விவேகானந்தர் பாறை அருகில் இருந்து சின்னமுட்டம் துறைமுக பகுதிவரை அணிவகுத்து சென்றன. அவை கூட்டமாக செல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன. இதைக்கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவேகானந்தர் பாறைக்கு படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள், டால்பின்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பகல் 11 மணி வரை டால்பின்கள் நீந்திச் சென்றன.

குழந்தை போன்றது

மீனவர்கள் கூறும்போது, “கன்னியாகுமரி ஆழ்கடலில் டால்பின்கள் அதிகளவில் உள்ளன. சில நேரங்களில் ஒன்றிரண்டு டால்பின்கள் கரைப்பகுதிக்கு வருவதுண்டு. ஆனால் இம்முறை தான் 50-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கரைப்பகுதிக்கு வந்துள்ளன. அதேநேரம் டால்பின்கள் 3 மணி நேரத்துக்கும் மேல் கன்னியாகுமரி கடல் பகுதியில் தென்பட்டாலும் அவை குதிப்பதை பார்க்க முடியவில்லை.

டால்பின்களை மீனவர்களின் தோழனாக கருதுகிறோம். டால்பின்கள் வருகிறது என்றால், அவற்றின் பின்னால் உயர்ரக மீன்கள் அதிகளவில் பின்தொடர்ந்து வரும். இதனால் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் கிடைக்கும். டால்பின்கள் குழந்தை போன்றது என்பதால், வலையில் சிக்கினாலும் அவற்றை விட்டுவிடுவோம்” என்றனர்.

கடல் அதிர்வு காரணமா?

மீன்வளத்துறையினர் கூறும்போது, “கன்னியாகுமரி கடலில் டால்பின்கள் உள்ளன. ஆனால் அவற்றை பார்ப்பது அரிது. இரு ஆண்டுகளுக்கு பின் தற்போது இரு நாட்களாக டால்பின்கள் கரைப் பகுதிகளில் உலா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலுக்குள் ஏற்படும் வித்தியாசமான அதிர்வால் வழக்கமாக இருக்கும் இடங்களை விட்டு டால்பின்கள் கரைப் பகுதிக்கு வருவதுண்டு. அது கன்னியாகுமரி கடலிலும் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

Source : The Hindu

Man killed by electricity while repairing AC for Raymond Showroom near nagercoil

நாகர்கோவில் அருகே ரேமண்ட் துணிக்கடையில் குளிரூட்டும் எந்திரத்தை சரிபார்த்துக்கொண்டிருந்த கேரளா மாநிலத்தைச்சேர்ந்த வாலிபர் முருகன் மின்சாரம் தாக்கி பலி நேசமணிபோலிசார் விசாரணை.

18011177_788283271334948_1109993328119338374_n

 

18010910_788283298001612_7682154495822507063_n

5 College Students Killed in accident near Nagercoil

17457909_275643329530610_4009677207542899066_n

Ayyappa college Students killed in road accident

 

வேன் புலியூா்குறிச்சி என்ற இடத்தில் டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக வேகமாக வந்த வேன் கட்டுபாட்டை இழந்து திடீரென்று எதிரே வந்த கேரளா லாரி மீது வேகமாக மோதியது.
இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியதில் வேனில் இருந்த மாணவிகள் அன்பரசி, லீனா, ஷகீனா, சிவரஞ்சனி ஆகிய நான்கு போ் வேனுக்குள்ளே உடல் சிதைந்து பிணமானார்கள். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
விபத்து நடந்த சம்பவத்தை அறிந்து மற்ற மாணவிகளும் இறந்து போன மாணவிகளின் உறவினா்களும் சம்பவ இடத்தில் வந்து கதறி அழுதனா்.



17498731_1852425731638486_8779259093089092789_n

 

17458220_275643349530608_4407176082348485603_n

 

17342810_275643489530594_6465173394224844808_n

 

17457329_275643379530605_5574775276084619799_n

17498885_979831305486546_6003862578829658448_n

nagercoil accident

Nagercoil Sudalaimuthu Krishnan (NSK) சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை

நாகர்கோவிலின் அடையாளங்களில் ஒன்று ‘மதுர பவனம்’. மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கான்கிரீட் வீடும் அதுதான். கம்பீரமான அந்த வீட்டை இப்போது புனரமைக்கக் கூட வசதியின்றி தவிக்கின்றனர் கலைவாணரின் வாரிசுகள்.

N._S._Krishnan

நாகர்கோவில், ஒழுகினசேரி யில் பிறந்த, நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ் ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தனது தொடக்க காலங்களில் நாடகக் கொட்டகையில் சோடா விற்பனையாளராகவும், டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கி போடுபவராகவும், வில்லுப்பாட்டு மற்றும் நாடக கலைஞராகவும், பல தொழில்கள் செய்து, தனது திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர் என்.எஸ்.கே.

திரைப்படங்களில் நகைச்சுவை யுடன், கருத்துகளையும் விதைத்த வருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் கொடுத்தவர் பம்மல் கே.சம்பந்த முதலியார். ஈகை பண்பிலும் என்.எஸ்.கே. சிறந்தவர். அப்படிப்பட்டவரின் வீடு இன்று குடும்பத்தினரின் வறுமையால் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

அண்ணா, எம்ஜிஆர் தங்கினர்

என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள் உமைய பார்வதி கூறும் போது, ‘‘நாகர்கோவிலில் ‘இன்ப கனவு’என்ற நாடகம் நடந்த போது, சென்னையில் இருந்து நடிகர்கள் வந்திருந்தனர். நாடகத்தைப் பார்க்க எம்ஜிஆரும் வந்திருந்தார். அப்போது இந்த வீட்டில் எம்ஜிஆர் 12 நாட்கள் தங்கியிருந்தார். ஒரே மக்கள் கூட்டம். மாடியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து எம்ஜிஆர் கையசைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாவும் இங்கு வந்துள்ளார். அவர் படுத் திருந்த கட்டிலை, அவர் ஞாபக மாக இப்போதும் பராமரித்து வருகிறோம்.

உலகத்திலேயே 2 நகைச்சுவை நடிகர்களுக்குத்தான் சிலை உண்டு. ஒன்று சார்லி சாப்ளின், மற்றொன்று கலைவாணர். எம்ஜிஆர்தான் நாகர்கோவிலில் கலைவாணருக்கு சிலை வைத் தார். காந்தியின் மீது அதிக பற்று கொண்டவர் கலைவாணர். காந்தி இறந்த செய்தி கேட்டு 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். நாகர்கோவில் பூங்காவில் காந்தி நினைவு ஸ்தூபி அமைத்தார்.

மாமாவோட, காலத்துக்கு பின், என் கணவர் என்.எஸ்.கே.கோலப் பனுக்கு திரைத்துறையில் நடிக்க எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக வந்தார். ஆனால், இளவயதிலேயே என் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த 22-வது நாளில் எம்ஜிஆரும் மறைந்தார்.

எங்கள் வீட்டில் இறப்பு நடந்து 41 நாட்கள் ஆகாததால் போகக்கூடாது என பலர் சொன்னார்கள். ஆனால், நாங்கள் ஊருக்குத் தெரியாமல் குடும்பத்தோடு சென்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

கலைவாணரும், என் கணவரும் இறந்த பின் எங்கள் குடும்பம் வறுமையில் விழுந்தது. எனக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள். பிள்ளைகளும் தாத்தா, அப் பாவைப் போல சினிமா துறையில் வர வேண்டும் என முயற்சிக் கின்றனர். ஆனாலும் ஜொலிக்க முடியவில்லை. உண்மையான பேரன்களுக்கு இன்னும் திரைத் துறை கனவாகவே உள்ளது’’ என்றார்.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணர் குடும்பம் கஷ்டப்படுவது குறித்து நடிகர் ரஜினிக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி மூலம் இக்குடும்பத்தை தொடர்புகொள்ள சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் ஏனோ உதவியை மறுத்து விட்டனர்.

கமல்ஹாசன் கலைவாணர் மீது அதீத பற்று கொண்டவர். இப்போதும் என்.எஸ்.கே. குடும்பத்தினர் சென்னை சென்றால் கனிவோடு விசாரிப்பாராம். 5 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வந்துள்ளார். வீட்டை வாசலில் இருந்து பார்த்ததுமே கண்கலங்கியுள்ளார்.

nagercoil-s-k

Source: Tanil Hindu – http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article9397789.ece?homepage=true

Kanyakumari : INTACH volunteers clean Pazhayar river

Pazhayarriver-cleaning-intach

Pazhayar, a major river flowing in Kanniyakumari district and source of irrigation for farmers in its vicinity has become polluted due to the draining of sewage and unmindful dumping of garbage.
The worst stretch is between Ozhuginasery flyover and Suchindram as drainage is being let into it. This has resulted growth of weeds such as water Hyacinth and it blocks the free flow of water.
Pollution has prevented people living on its banks from using the river for their personal chores.
The Nagercoil Chapter of INTACH has begun an initiative to clean the river with the cooperation of civil society, said its Convener R.S. Lal Mohan.
Over 30 volunteers from Bhairavi Foundation, Aam Aadmi Party and Consumer Protection Centre have lent a helping hand to clean the river for about a kilometre from Suchindram Bridge to Ozhuginasery flyover, Dr. Lal Mohan said.
He added that the cleaning process would be carried out every Sunday between 9 a.m. and 3 p.m.

Kanam Latex Pvt Ltd has started a project to clean Kanyakumari District

Kanam Latex Pvt Ltd has started a project to clean the Peruvilai tank in Parvathipuram junction, Nagercoil. Kanam Latex in association with the PWD, Aloor Panchayath and INTACH want to clean the tank and convert the water body into a clean lake. We appreciate Kanam Latex and their partners for allotting funds for this nobile cause.

These are people taking an effort to Make Kanyakumari District Great Again!

Peruvilai

Peruvilai-tank

Voter Awareness Programme Conducted in nagercoil

Helium balloon with a message in Nagercoil

13055553_486586408205905_6416131708034373598_n

As part of Systematic Voters’ Education and Electoral Participation Programme (SVEEP), the Election Department launched an illuminated helium balloon near Anna bus stand here on Thursday.

Launching the balloon, District Election Officer and Collector Sajjansingh R. Chavan said that it would help raise awareness of ethical voting.

The balloon, with the mark ‘May 16’ to remind voters of their democratic duty, was launched to ensure 100 per cent voting.

Efforts were also on to get all those above 18 years of age enrolled as voters through students who had been identified as ‘college ambassadors.

Various programmes – distribution of pamphlets, screening of awareness documentaries and cultural programmes – were organised by the administration to motivate voters to exercise their franchise without fail, Mr. Chavan said.

The district administration had identified two more places for launching the helium balloon, officials said.

Later, Mr. Chavan administered a pledge to NSS volunteers of Hindu College and flagged off an awareness rally at Elluvilai panhayat union office.

District Revenue Officer S. Elango, Nagercoil Returning Officer and RDO S. Madhiyazhagan, Mahalir Thittam Project Director T. Sadayappa Vinayaka Murthy and others were present.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குளச்சல் வர்த்தக துறைமுகம் வந்தே தீரவோண்டும் என்று போராட்டம்

nagercoil-port

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு அரசியல் சார்பு இல்லாமல், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு நடத்திய ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி…

nagercoil-colachalport

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த அனைத்து பொதுமக்களுக்கும் (கிறிஸ்த்தவ, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல உள்ளங்ககளுக்கும்) கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..!!!
–***குமரி. ஸ்ரீ மகேஷ் FB

mr gandhi-nagercoil