Category Archives: Knayakumari district News

Man killed by electricity while repairing AC for Raymond Showroom near nagercoil

நாகர்கோவில் அருகே ரேமண்ட் துணிக்கடையில் குளிரூட்டும் எந்திரத்தை சரிபார்த்துக்கொண்டிருந்த கேரளா மாநிலத்தைச்சேர்ந்த வாலிபர் முருகன் மின்சாரம் தாக்கி பலி நேசமணிபோலிசார் விசாரணை.

18011177_788283271334948_1109993328119338374_n

 

18010910_788283298001612_7682154495822507063_n

Accident near Thuckalay : 3 year old girl & driver’s death

Ambulance-near-Nagercoil-accident

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனை அருகே பனவிளையைச் சேர்ந்தவர் அபுஜாசிம் (வயது 33). இவர் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஐஷா பேகம் (29). இவர்களுக்கு அர்ஷியா ஜஸ்னா (3), அல்பிஷா எஸ்னா (1½) என்ற பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்தநிலையில் அர்ஷியா ஜஸ்னா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாள். இதையடுத்து அவளுக்கு நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஆம்புலன்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு ஸ்கேன் எடுக்கச் சென்றனர்.

சிறுமி–டிரைவர் சாவு

ஆம்புலன்ஸில் சிறுமி அர்ஷியா ஜஸ்னாவுடன், அவளுடைய தந்தை அபுஜாசிம், ஆஸ்பத்திரி நர்சான ஆரல்வாய்மொழி பொய்கை நகரைச் சேர்ந்த ஏஞ்சல் கிறிஸ்டி (22) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை சுசீந்திரம் அருகில் உள்ள நல்லூர் இளையநயினார் குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ்பாபு (23) என்பவர் ஓட்டினார். சிறுமிக்கு ஸ்கேன் எடுத்தபிறகு, ஸ்கேன் அறிக்கையை காண்பிப்பதற்காக அதே ஆம்புலன்சில் அவர்கள் வெள்ளமடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் தேரேகால்புதூர் அருகே ஒரு பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்புலன்சை ஓட்டிய டிரைவர் பெனிக்ஸ்பாபு, சிறுமி அர்ஷியா ஜஸ்னா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். மேலும் சிறுமியின் தந்தை அபுஜாசிம், நர்ஸ் ஏஞ்சல் கிறிஸ்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சோகம்

விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்–இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், மோகன்குமார், மணிவண்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விபத்தில் இறந்த சிறுமி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார், டிப்பர் லாரியின் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகில் உள்ள பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது விபத்து நடந்த பகுதி, அடிக்கடி விபத்து நடைபெறக்கூடிய பகுதி என போலீசாரால் கண்டறியப்பட்டு ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய பிரதிபலிப்பு விளக்குகள் அமைக்கப்பட்ட பகுதியாகும். இருப்பினும் அதே இடத்தில் நேற்று நடந்த விபத்தில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

 

Source Dailythanthi

Another accident in Thuckalay killed one in Car – Mini Bus Collision

Accident in Thuckalay

 

After the very sorrowful incident of 5 College students (Ayyappa College for Women) killed in an accident last week in thuckalay nagercoil, another accident in took place today killed one person in a Car – Mini Bus Collision. Below accident photos from the spot

தக்கலை அருகே மினி பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிவி காமெடி நடிகர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். வங்கி ஊழியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவனந்தபுரம் அருகே உள்ளது பேயாடு செறுவாறை மகாவிஷ்ணு கோயில். இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக கோயில் நிர்வாகிகள் காரில் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வந்தனர். அங்கு தேவையான பூக்களை வாங்கினர்.  அவற்றை கொண்டு செல்வதற்காக மற்றொரு காரில் செறுவாறை பேயாடு பகுதியை சேர்ந்த அனிஷ்குமார் (31), குமார் (21) ஆகியோரும் வந்தனர். காரை அனிஷ்குமார் ஓட்டினார். பூக்களுடன் அவர்கள் திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களது காருக்கு பின்னால் கோயில் நிர்வாகிகளின் கார் சென்றது. நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் தக்கலை பஸ் நிலையம் அருகே ஆர்டிஓ அலுவலக பகுதியில் வரும்போது அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை பஸ் நிலையம் நோக்கி வந்த மினி பஸ்சும்- பூக்களுடன் சென்ற காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி அனிஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து நடந்ததும் மினிபஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மினிபஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த அனிஷ்குமார் உடலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பல முயற்சிகள் செய்தும் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் நொறுங்கி கிடந்த காரை முன்னும் பின்னுமாக 2 வாகனங்களில் கட்டி இழுத்து,  உடலை மீட்டு தக்கலை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மினிபஸ் டிரைவர் குமாரபுரம் புளியறைவிளையை சேர்ந்த ஜஸ்டின் கிறிஸ்டோபர்(40) மீது தக்கலை போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த அனிஷ்குமார் ஒரு சமையல் கலைஞர் மற்றும் மிமிக்ரி கலைஞர். மலையாள டிவி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குமார் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இருவரும் கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். விபத்தில் சிக்கி டிவி காமெடி கலைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Thuckalay Accidient

 

accident in Thuckalay

accident near nagercoil

accident in Thuckalay kanyakumari district

Nagercoil Sudalaimuthu Krishnan (NSK) சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை

நாகர்கோவிலின் அடையாளங்களில் ஒன்று ‘மதுர பவனம்’. மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கான்கிரீட் வீடும் அதுதான். கம்பீரமான அந்த வீட்டை இப்போது புனரமைக்கக் கூட வசதியின்றி தவிக்கின்றனர் கலைவாணரின் வாரிசுகள்.

N._S._Krishnan

நாகர்கோவில், ஒழுகினசேரி யில் பிறந்த, நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ் ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தனது தொடக்க காலங்களில் நாடகக் கொட்டகையில் சோடா விற்பனையாளராகவும், டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கி போடுபவராகவும், வில்லுப்பாட்டு மற்றும் நாடக கலைஞராகவும், பல தொழில்கள் செய்து, தனது திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர் என்.எஸ்.கே.

திரைப்படங்களில் நகைச்சுவை யுடன், கருத்துகளையும் விதைத்த வருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் கொடுத்தவர் பம்மல் கே.சம்பந்த முதலியார். ஈகை பண்பிலும் என்.எஸ்.கே. சிறந்தவர். அப்படிப்பட்டவரின் வீடு இன்று குடும்பத்தினரின் வறுமையால் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

அண்ணா, எம்ஜிஆர் தங்கினர்

என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள் உமைய பார்வதி கூறும் போது, ‘‘நாகர்கோவிலில் ‘இன்ப கனவு’என்ற நாடகம் நடந்த போது, சென்னையில் இருந்து நடிகர்கள் வந்திருந்தனர். நாடகத்தைப் பார்க்க எம்ஜிஆரும் வந்திருந்தார். அப்போது இந்த வீட்டில் எம்ஜிஆர் 12 நாட்கள் தங்கியிருந்தார். ஒரே மக்கள் கூட்டம். மாடியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து எம்ஜிஆர் கையசைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாவும் இங்கு வந்துள்ளார். அவர் படுத் திருந்த கட்டிலை, அவர் ஞாபக மாக இப்போதும் பராமரித்து வருகிறோம்.

உலகத்திலேயே 2 நகைச்சுவை நடிகர்களுக்குத்தான் சிலை உண்டு. ஒன்று சார்லி சாப்ளின், மற்றொன்று கலைவாணர். எம்ஜிஆர்தான் நாகர்கோவிலில் கலைவாணருக்கு சிலை வைத் தார். காந்தியின் மீது அதிக பற்று கொண்டவர் கலைவாணர். காந்தி இறந்த செய்தி கேட்டு 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். நாகர்கோவில் பூங்காவில் காந்தி நினைவு ஸ்தூபி அமைத்தார்.

மாமாவோட, காலத்துக்கு பின், என் கணவர் என்.எஸ்.கே.கோலப் பனுக்கு திரைத்துறையில் நடிக்க எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக வந்தார். ஆனால், இளவயதிலேயே என் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த 22-வது நாளில் எம்ஜிஆரும் மறைந்தார்.

எங்கள் வீட்டில் இறப்பு நடந்து 41 நாட்கள் ஆகாததால் போகக்கூடாது என பலர் சொன்னார்கள். ஆனால், நாங்கள் ஊருக்குத் தெரியாமல் குடும்பத்தோடு சென்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

கலைவாணரும், என் கணவரும் இறந்த பின் எங்கள் குடும்பம் வறுமையில் விழுந்தது. எனக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள். பிள்ளைகளும் தாத்தா, அப் பாவைப் போல சினிமா துறையில் வர வேண்டும் என முயற்சிக் கின்றனர். ஆனாலும் ஜொலிக்க முடியவில்லை. உண்மையான பேரன்களுக்கு இன்னும் திரைத் துறை கனவாகவே உள்ளது’’ என்றார்.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணர் குடும்பம் கஷ்டப்படுவது குறித்து நடிகர் ரஜினிக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி மூலம் இக்குடும்பத்தை தொடர்புகொள்ள சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் ஏனோ உதவியை மறுத்து விட்டனர்.

கமல்ஹாசன் கலைவாணர் மீது அதீத பற்று கொண்டவர். இப்போதும் என்.எஸ்.கே. குடும்பத்தினர் சென்னை சென்றால் கனிவோடு விசாரிப்பாராம். 5 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வந்துள்ளார். வீட்டை வாசலில் இருந்து பார்த்ததுமே கண்கலங்கியுள்ளார்.

nagercoil-s-k

Source: Tanil Hindu – http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article9397789.ece?homepage=true

வில்லுக்குறி குளம் சுத்தப்படுத்தும் பணி முடிவடைந்தது

nagercoilinfo

கடந்த ஒன்றரை மாதங்களாக வில்லுக்குறி குளம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதில் சந்தோஷமான காரியம் என்னவென்றால் இந்த குளத்தை சுத்தப்படுத்தும் பணி 20/11/2016 அன்றோடு முடிவடைந்தது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை 12 ஆண்டுகளாக முட் புதர்களும் செடி கொடிகள் ஆக்கிரமித்து வைத்திருந்தன. இதை சுத்தபடுத்துவது மிகுந்த சவாலான காரியம்மாக இருந்தது.

இதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்திய ஸ்க்ரீனர் குழுமத்தை சேர்ந்த ஜஸ்டின் , ஆன்ஷியோ அவர்கள், நண்பர் பிலெஸ்து மற்றும் இயற்கை உடன் ஒரு பயணம் கிளப் நிறுவனர் பிரதீஷ், மற்றும் நம் பேஜ் உறுப்பினர்கள் ஆல்ஜின், லிங்கேஷ், கணேஷ், அனந்து மற்றும் நண்பர்கள்(கன்னியாகுமரி மீம்ஸ்) அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எங்களுக்கு உதவியவர்கள்:

Indian Dental Association, Marthandam.
Makkal paathai.
SRKBV School Managing Director.
Kumaran Petroleum.
Tata Hitachi, JCB, Hyundai operators and owners.
Professor. Neelakandan and his brother (Locals).
Thinamani Newspaper.

மேலும் அடுத்த கட்டத்திற்கு இதனை வெற்றிகரமாக கொண்டு செல்வோம்.
இயற்கையை பாதுகாப்போம்.

– Team Kanyakumari memes.

Kanyakumari : INTACH volunteers clean Pazhayar river

Pazhayarriver-cleaning-intach

Pazhayar, a major river flowing in Kanniyakumari district and source of irrigation for farmers in its vicinity has become polluted due to the draining of sewage and unmindful dumping of garbage.
The worst stretch is between Ozhuginasery flyover and Suchindram as drainage is being let into it. This has resulted growth of weeds such as water Hyacinth and it blocks the free flow of water.
Pollution has prevented people living on its banks from using the river for their personal chores.
The Nagercoil Chapter of INTACH has begun an initiative to clean the river with the cooperation of civil society, said its Convener R.S. Lal Mohan.
Over 30 volunteers from Bhairavi Foundation, Aam Aadmi Party and Consumer Protection Centre have lent a helping hand to clean the river for about a kilometre from Suchindram Bridge to Ozhuginasery flyover, Dr. Lal Mohan said.
He added that the cleaning process would be carried out every Sunday between 9 a.m. and 3 p.m.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறை கட்டியுள்ளார்

நித்திரவிளை: நித்திரவிளை அருகே பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறை கட்டியுள்ளார். குமரி மாவட்டம் சூழால் ஊராட்சியில் தமிழக – கேரள எல்லையை ஒட்டியுள்ள பல்லுக்குழி மேலவிளை பகுதியை சேர்ந்தவர் அப்பியான் மகள் ரோசி (55). திருமணமாகவில்லை. சிறுவயதில் இருந்தே முந்திரி ஆலைகளில் ரோசி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அக்கம்பக்கத்து வீடுகளில் உதவிகளுக்கும் சென்று வந்துள்ளார்.

nagercoil-news

 இதில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி மேலவிளை பகுதியில் ஏழரை சென்ட் இடம் வாங்கி, அதில் சிறிய வீடு வைத்து தனியாக வசித்து வருகிறார். மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் முந்திரி ஆலைக்கு செல்லாமல் இந்த பணிக்கு சென்று வந்தார். விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலைக்கு சென்றதால் சூழால் ஊராட்சி சார்பில் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவரை உறவினர்கள் யாரும் கண்டுக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

 மேலும் சிலர் நீ இறந்தால் உன்னை யார் அடக்கம் செய்வார்கள் என்று கிண்டலாக கேட்டுள்ளனர். இதனால் தனக்குத்தானே கல்லறை கட்ட திட்டமிட்ட ரோசி சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்லறை கட்டி வைத்துள்ளார். கடந்த மாதம் இதற்கான பணி தொடங்கியுள்ளார். தேவையான ஆழத்தில் பள்ளம் தோண்டி, கீழ்பகுதியில் இருந்தே கல்லால் கட்டி எழுப்பி மேலே அழகாக கடப்பா கல் பதித்து தனது படம், பெயரை பொறித்து சிலுவையும் அமைத்துள்ளார்.

 இவரை அடக்கம் செய்யவேண்டுமானால் ேமல் பகுதியை கழட்ட தேவையில்லை. தலை பகுதிக்கு கீழே வெளிப்பகுதியில் சிறிது பள்ளம் தோண்டினால் உள்ளே உள்ள பள்ளம் தெரியும். பெட்டியில் உடலை வைத்து தள்ளினால் உள்ளே சென்று விடும். இந்த அமைப்பில் அவர் தனக்கான கல்லறையை அமைத்து வைத்துள்ளார் இது குறித்து ரோசி கூறுகையில், “எனது ஊர் பல்லுக்குழி அருகே உள்ள செறுகுழி. எனது பெற்றோருக்கு நான் ஆறாவது மகள். ஐந்து சகோதரிகளுக்கும், தம்பிக்கும் திருமணம் நடந்து. அவர்கள் தனியாக வசிக்கின்றனர். இறக்கும் போது யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்று கருதி எனக்கு நானே கல்லறை கட்டிக்கொண்டேன் என்றார்.

Two injured in bus accident near kulasekaram

kulasekharam-bus-accident

 

குலசேகரத்தில் அதிவேகமாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தாய், மகள் படுகாயம். காயமடைந்தவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Arunachala college bus accident near kulasekaram. The Mother and daughter injured. Both were admitted to the nearest hospital for treatment.

Heavy rain in kanyakumari district

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

nagercoil-rain
 தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விடாமல் கன மழை கொட்டி வருவதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

 
நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பலத்த மழை காரணமாக பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழையின் காரணமாக வள்ளியாறு, பரளியாறு, குழித்துறையாறு, சுசீந்திரம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது.
தொடர் கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
nagercoil-rain1
தொழிலாளர்கள் தவிப்பு 
குமரியில் பெய்து வரும் தொடர்மழையினால் மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை, தோவளை, இராமனாதிச்சன்புதூர் உள்ளிட்ட இடங்களில் செங்கல்சூளை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.
வேலையிழப்பு 
குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
 திற்பரப்பு அருவியில் வெள்ளம் 
குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்த மழையினால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவியில் குளிக்கசுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியூர்களிலிருந்து அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
 படகு போக்கு வரத்து நிறுத்தம்
 கன்னியாகுமரி கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Thiruvattar : திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் டீக்கடைக்குள் புகுந்தது 7 பேர் படுகாயம்

Luxury-car-ran-erratically-near-Thiruvattar-tikkataikkul_nagercoilinfo

திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

டீக்கடைக்குள் புகுந்த கார்

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தாணவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (வயது 26). இவர் சொகுசு காரில் அழகியமண்டபத்தில் இருந்து மாத்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். காரில் ஜஸ்டின் ராஜ் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் கும்மாளம் இட்டபடி காரில் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் கார் வேர்கிளம்பி அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே சொகுசு கார், அந்த பகுதியில் ரோட்டோரம் இருந்த தங்கையா (71) என்பவருடைய டீக்கடைக்குள் புகுந்தது.

7 பேர் படுகாயம்

இந்த விபத்தில் தங்கையா, டீக்கடைக்குள் இருந்த வீயன்னூரை சேர்ந்த பால்ராஜ் (48) மற்றும் சசிகுமார் (45), கடைக்கு வெளியில் நின்ற  பூவங்கோடை சேர்ந்த மனோன்மணி (60), வேர்கிளம்பியை சேர்ந்த ரகு (40), அருவிக்கரையை சேர்ந்த ஜோன்ஸ் (40), காரை ஓட்டிவந்த ஜஸ்டின் ராஜ் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.

இதில் மனோன்மணி, ரகு, ஜோன்ஸ், தங்கையா, ஜஸ்டின் ராஜ் ஆகிய 5 பேரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பால்ராஜ், சசிகுமார் ஆகிய 2 பேரும் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஜஸ்டின் ராஜ் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.