Category Archives: Knayakumari district News

The Centre would soon build a major port at Colachel in the southernmost tip of Tamil Nadu at an estimated cost of Rs 21,000 crore

குளச்சல் துறைமுகத்தை ரூ.21 ஆயிரம் கோடி செலவில் விரிவுபடுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

11986455_1055179671158902_9133821982529444229_n

தமிழக அரசு பதில்கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவிலான துறைமுகமாக அமைக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். தற்போது தமிழக அரசின் சார்பில் குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்க வேண்டும்.சாலை, ரெயில் போக்குவரத்துதுறைமுகத்துக்கு சாலை இணைப்பு மற்றும் ரெயில் வசதி ஏற்படுத்துவதற்கான ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்வதற்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆய்வுகள் முடிந்து 2 மாதங்களுக்குள் அறிக்கை கிடைக்கும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்காக 4 வழி சாலை திட்ட பணிகள் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. குளச்சல் துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பயன் அடையும்.குளச்சல் துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் 3 கட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக சுமார் ரூ.7ஆயிரம் கோடி, 2-வது கட்டமாக ரூ.6 ஆயிரம் கோடி, 3-வது கட்டமாக ரூ.7 ஆயிரத்து 500 கோடி மத்திய அரசால் நிதி ஓதுக்கீடு செய்யப்படும்.

அந்நிய செலாவணி அதிகரிக்கும்செயல்பாட்டுக்கு வரும்போது குளச்சல் துறைமுகத்தில் இருந்து பல நாடுகளுக்கும் சரக்கு ஏற்றுமதி செய்ய வழி ஏற்படும். ஆண்டுக்கு சுமார் 17 லட்சம் டன் சரக்கு இந்த துறைமுகம் மூலமாக கையாளப்படும். தென்மாவட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் உடனடியாக தேவையான 500 ஏக்கர் நிலத்தை கடலில் மண்ணை நிரப்பி ஏற்படுத்த திட்டம் உள்ளது. தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.1,500 கோடி அந்நிய செலாவணி இழப்பில் இருந்து மீட்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் குளச்சல் துறைமுகம் மூலமாக ஏற்படும். இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Colachel

Source : Dailythanthi

Colachel Port to Compete Colmbo Port

சர்வதேச அளவில், கொழும்பு துறைமுகத்திற்கு போட்டியாக, குளச்சல் துறைமுகத்தை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மாநில அரசு போக்கு காட்டி வருவதோடு, மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பழமையான இயற்கை துறைமுகமாக, குமரி மாவட்டத்தில் உள்ள, குளச்சல் துறைமுகம் உள்ளது. நீண்ட காலமாகவே, இந்தத் துறைமுகம் முக்கியத்துவம் இழந்து காணப்படுகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் உகந்ததாகவும், குமரியை, நாட்டின் முதல்நிலை மாவட்டமாக மாற்றவும், குளச்சல் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது.’அடுத்த ஆண்டு முதல், குளச்சலில் வர்த்தக துறைமுகம் செயல்படும்’ என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. ‘நிலப்பரப்பில், ஒரு சதுர அடி கூட வேண்டாம்; கடல் பகுதியிலேயே துறைமுகத்தை அமைக்க முடியும்’ என, மாநில அரசிடம் தெரிவித்துள்ளது.

MSC

குளச்சல் துறைமுகத்தின் சாத்தியக்கூறுகளை கண்டறிய, இரண்டு தனியார் நிறுவனங்கள், மார்ச்சில் ஆய்வு நடத்தின. குளச்சல் கடற்கரையில் இருந்து, 2 கி.மீ., நீளத்துக்கு பாலம் அமைத்து, நடுக்கடலில், 900 ஏக்கர் பரப்பளவில், செயற்கை நிலத்திட்டையை உருவாக்கி, சிங்கப்பூர் தொழில்நுட்பம் போன்று, கப்பல்களை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்கள், குளச்சல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்ரிக்காவுக்கும் சரக்குகளை கப்பலில் ஏற்றிச் செல்ல முடியும். இதன் மூலம் சர்வதேச அளவில் சரக்குகளைக் கையாளுவதில் முன்னணியில் உள்ள கொழும்புவை, இந்தியா முந்த அதிக வாய்ப்புள்ளது.

குளச்சலில் துறைமுகம் அமைந்தால், அப்பெருமை தமிழகத்தைச் சேரும். இதனால், கன்னியாகுமரி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களும் வளர்ச்சி பெறும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கிடையில், குமரி மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் துறைமுகம், மீன் பதனிடும் நிலையம் கட்டித்தரும்படி, தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை, அனைத்து கடலோரக் கிராமங்களிலும் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, குளச்சல் துறைமுகம் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஏற்கனவே துாத்துக்குடி, விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகம் இருக்க, மேலும் குளச்சலையும் வர்த்தக துறைமுகமாக மாற்ற வேண்டாம் என்ற கருத்தும் நிலவுகிறது. குளச்சல் வர்த்தக துறைமுகமாக மாறினால், தங்களின் நலன் பாதிக்கும் என, மீனவர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள், மீனவர்களின் கருத்தை கேட்டு, துறைமுகத்தை அமைக்க வேண்டியது அவசியம்.

இயற்கையாகவே ஆழமானது!

குளச்சல் துறைமுக சாத்தியக்கூறு குறித்து நிபுணர்கள் கூறியதாவது:ஆசியாவிலேயே, இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்தது குளச்சல் துறைமுகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டுமானால், 14 அடிக்கு ஆழப்படுத்த, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்.ஆனால், குளச்சல் துறைமுகம், இயற்கையாகவே நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது. துாத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது. ஒரு கி.மீட்டருக்குக் குறைவான துாரத்திலேயே, 15 மீட்டர் ஆழம் உள்ளது. மேலும், குளச்சல் துறைமுகம் சர்வதேச கப்பல் வழித் தடத்திற்கு மிகவும் அருகில் உள்ளதால், கப்பல்கள் எளிதாக வந்து செல்லும். இவ்வாறு நிபுணர்கள் கூறினர்

Source: Dinamalar

The work on the Rs 31 lake in Nagercoil road inaugurated mayor Meena Dev

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்பணி தொடங்கியதில் இருந்து நகரின் சாலை ஒவ்வொன்றும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளிக்கின்றன. தார்சாலைகளாக இருந்த அனைத்தும் குண்டும், குழியுமான நிலையில் படுகோரமாகவும், கிராமப்புறங்களில் உள்ள மண் சாலைகளைப் போன்றும் காட்சி அளிக்கின்றன. மழைகாலங்களில் சேறும், சகதியுமாகவும், வெயில் காலத்தில் சாலையில் செல்வோர் முகத்தில் புழுதிவாரி தூற்றுவதாகவும் சாலைகள் அமைந்து விட்டன.

meena dev

இதனால் சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணமாக உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து டபிள்யூ.சி.சி. சந்திப்பு செல்லும் சாலையும், கற்கோவில் பகுதியில் இருந்து டதி பள்ளிக்கு வரும் சாலையும் சீரமைக்கப்பட்டன. அதையடுத்து பாதாள சாக்கடை பணி முதன் முதலாக தொடங்கப்பட்ட பகுதி அமைந்துள்ள ராமன்புதூர் சந்திப்பு முதல் தட்டான்விளை வழியாக ஆயுதப்படை முகாம் சாலை வரையில் ரூ.31 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. இந்த பணியை நகரசபை தலைவர் மீனாதேவ்(Meena Dev) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா(BJP) மாவட்ட துணைத்தலைவர் தேவ், நகர தலைவர் ராகவன், பொதுச்செயலாளர் அஜித்குமார், கவுன்சிலர் ரமேஷ், தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் சதாசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Source : dailythanthi

Airport Project Proposal In The District Of Kanyakumari

LOCATION

A Proposed  Airport Project is presented to setup in 700 Acres of land in Kanyakumari  District, the Southern Tip  of India in Tamilnadu and bordering the capital district of Kerala ,Thiruvanathapuram, at an estimated  cost of around Rs 2000 crores.

kanyakumari airport

Project

  • State Government of Tamilnadu is proposed to participate in the project with minority stake and nominating Chairman to the board.
  • The airport will be privately owned and managed.
  • The runway length will be of 3100×45 meters with PCN 45 F/B/W/T.
  • The terminal building is designed to handle 1000 passengers at a time.
  • This aero polis is being developed along with SEZ, Multi-specialty hospital, Shopping Mall, Star Hotels and an International School.
  • The Kanyakumari  International Airport is designed to cater Airbus A-320 / Boeing 747 like aircraft.

Employment Potential

This International Airport Project will generate direct employment to 1500 and indirect employment to more than 6000.

INFLUENTIAL ZONE

  • Airport location is close to multiple tourism destinations such as Kovalam,Sucheendram, and Kanyakumari and southern residents of NRIs of Thiruvananthapuram and Tirunelveli.
  • Only one hour drive away from Kovalam, the hot spot tourist destination of beach loving foreign tourists with annual visitors  of around 20 Millions (as per Government data for the year 2011) and the proposed Airport will provide infrastructure to tourist who wish to travel by air.
  • The majority of NRI passengers and NRK passengers of Trivandrum and Madurai Airport originate within 100 K.Ms. radius of this site. 20% of the  air traffic is hailing from the influential zone of this airport.
  • It is expected to serve two districts in Tamilnadu state and two districts of Kerala. This shall be referred as influential zone. Out of the foreign and domestic tourists’ arrival to Tamilnadu and Kerala, these four districts together accounts for about 21 per cent of foreign tourists and 14 per cent domestic tourists

TRAFFIC

  • Forecast of Indian air traffic concluded that the domestic passenger throughput would grow at an average annual rate of around 12% between FY-12 and FY-17. The domestic passenger throughput is expected to touch around 209 million by FY-17 from 106 million in FY-11. Similarly, international passenger throughput is estimated to grow at an average annual rate of 8% to reach 60 million passengers by FY-17 from 38 million in FY-11.
  • Global comparison of air travel penetration shows that India (at 0.04 air-trips per capita per annum i.e. 4 out of 100 is travelling by air every year) stands far behind the developed countries like US and Australia (2 air-trips per capita per annum). China’s domestic traffic is five times the size of India’s despite having a population just 10% larger. There is significant growth potential as high as 50 times for the Indian civil aviation industry as economy grows, disposable incomes rise and the value of time becomes more precious.
  • TN  has about  8.75% on overall population of India, the International aircraft movement in  TN  is 15.28% of overall international aircraft movement of India in the year 2011- 12.
  • During the year 2011-12, the total number of air passenger to TN is 197.42 Lakhs out of 16.23 Crores air passengers in throughout India. It means 12% of overall air passenger of India hails from TN.
  • Air Traffic has multiplied 5 times in the last 8 years in TN. It has increased from 8 Million to 20 Million passengers.
    Madurai, Trivandrum and Trichy  Airports in TN and Kerala are ranked as the 17th, 11th and 23th busiest Airport in the country respectively.
  • In all the other three southern states (Tamil Nadu, Andhra Pradesh and Karnataka), one airport viz. Chennai, Hyderabad and Bangalore is catering to 80% of the airtraffic of the state. This venturfe will  evenly spread the air travel users throught the states.

Source :-  http://jjtassociates.in/pages/airport/home