Category Archives: Knayakumari district News

Kanyakumari Fishing: தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்

colachel-fish

தடைகாலத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற சின்னமுட்டம் மீனவர்கள் வலையில் உயர் ரக மீன்கள் சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

தடைகாலம்

ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் ஆகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் மற்றும் மீன் பிடி கப்பல்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அழிந்து விடும் என கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி நள்ளிரவு வரை, தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல இந்த ஆண்டுக்கான தடை காலம் கடந்த 29-ந்தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் மாதா வணக்கம் திருவிழா நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.

மீன் பிடிக்க சென்றனர்

இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் தடைகாலத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சின்னமுட்டத்தில் இருந்து 250 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

காலையில் இருந்து மாலை வரை மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு புறப்பட்டனர். மாலை 6.30 மணி முதல் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு மீனவர்களின் படகுகள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து வரிசையாக படகுகள் வந்தன.

உயர் ரக மீன்கள் சிக்கின

உடனே மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை 50 கிலோ எடையுள்ள பாக்ஸ் மற்றும் குட்டைகளில் எடுத்துக்கொண்டு தலையில் சுமந்தபடி ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

கரைக்கு திரும்பிய மீனவர்களின் வலையில் உயர் ரக மீன்களான நெய் மீன், பாறை, கணவாய் மற்றும் நவரை, கோவாஞ்சி, வெளமின், பண்டாரி, பூ மீன், சாளை ஆகியவை ஏராளமாக சிக்கி இருந்தன. இவற்றில் கணவாய், நவரை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

போட்டி போட்டு ஏலம்

மீன் ஏலக்கூடத்தில் குமரி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் ஏராளமானவர்கள் மீன்களை ஏலம் எடுக்க காத்து இருந்தனர்.

மீன்கள் ஏலக்கூடத்துக்கு வந்ததும், அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 50 கிலோ எடை கொண்ட நவரை பாக்ஸ் ரூ.2 ஆயிரத்துக்கும், 10 கிலோ எடை கொண்ட பண்டாரி ஒரு மீன் ரூ.3,500-க்கு ஏலம் போனது. புள்ளி கணவாய் 10 கிலோ ரூ.5 ஆயிரத்துக்கும் போனது. பாறை மீன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது.

விலை கட்டுப்படியாகவில்லை

கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த கன்னியாகுமரி மீனவர் சிலுவை கூறியதாவது:-

45 நாள் தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்றோம். மீன்கள் அதிக அளவு கிடைத்தது. ஆனால் நவரை, கணவாய் போன்ற மீன்கள் குறைவாகவே கிடைத்தன. ஆனால் விலை கட்டுப்படியாகவில்லை. நாங்கள் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவதற்கு டீசல் மற்றும் மீனவர்களுக்கான கூலியே அதிகமாகிறது. இதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு மீனவர் சிலுவை கூறினார்.

அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வியாபாரி செல்வம் கூறியதாவது:-

சின்னமுட்டத்துக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக வந்தேன். மீன்கள் அதிகம் கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் அதன் விலையும் அதிகமாக உள்ளது. நவரை ஒரு பாக்ஸ் ரூ.1,500-க்கு ஏலம் எடுப்போம். ஆனால் இந்த முறை ரூ.2 ஆயிரத்துக்கு எடுத்தோம்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

kanyakumari : அரை நூற்றாண்டு வரலாறு அடிபட்டு போனது

சில தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே, ஆட்சி அமைக்கும் என்ற, ‘ராசி’ உண்டு. அந்த வகையில், அரை நுாற்றாண்டாக இந்த ராசி உடைய முக்கியமான தொகுதி, கன்னியாகுமரி.
கடந்த, 1971ம் ஆண்டு முதல், இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே, மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது.

3114

1971ல் நடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ராஜா பிள்ளை வெற்றி பெற்றார்; கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைந்தது.பின், தி.மு.க.,வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவங்கி, 1977ல் சட்டசபை தேர்தலை சந்தித்தார். 1977 முதல், 84 வரை, கன்னியாகுமரி தொகுதி, அ.தி.மு.க., கோட்டையாகவே இருந்தது.அதன்பின், 1989ல் நடந்த தேர்தலில், மீண்டும் இங்கு தி.மு.க., வேட்பாளராக சுப்பிரமணிய பிள்ளை வெற்றி பெற, தி.மு.க., ஆட்சி அமைத்தது. 1991 தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற, ஜெயலலிதா, முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார்.

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், 1996ல் தி.மு.க.,வின் சுரேஷ்ராஜனும், 2001ல், அ.தி.மு.க.,வின் தளவாய் சுந்தரமும், 2006ல், சுரேஷ்ராஜனும், 2011ல், கே.டி.பச்சைமாலும் வெற்றி பெற்றனர். அப்போதெல்லாம் அவர்கள் சார்ந்த கட்சிகளே ஆட்சி பீடத்தில் அமர்ந்தன.
பிரிந்த ஜாதி ஓட்டுகள்தொகுதியில் பெரும்பான்மையாக வெள்ளாளர் சமுதாயத்தினர் தான் உள்ளனர். அதனால் தான், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே, தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகள் நிறுத்தி வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2011ல் முதல் முறையாக, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கே.டி.பச்சைமால் நிறுத்தப்பட்டார்.

குளச்சல் தொகுதியைச் சேர்ந்த அவர், இங்கு வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனார். அப்போது, இந்த தொகுதியில் போட்டியிட்ட வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க., பாணியை பின்பற்றி, இம்முறை கன்னியாகுமரி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக கிறிஸ்தவ நாடாரான ஆஸ்டின் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து, வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் போட்டியிட்டார்.

இதில், அரை நுாற்றாண்டு வரலாற்றை மாற்றும் வகையில், மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்க, தொகுதியில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரமும், பா.ஜ., வேட்பாளர் மீனா தேவும் போட்டியிட்டதால், ஜாதி ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வின் நாடார் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பாகி விட்டது.

தி.மு.க., – அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம், 5,912 ஓட்டுகள் தான். ஆனால், பா.ஜ., வேட்பாளரோ, 24 ஆயிரத்து, 638 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் பெரும் பங்கு, வெள்ளாள சமுதாயத்தினரின் ஓட்டுகள் என்பதை மறுக்க முடியாது.

Voter Awareness Programme Conducted in nagercoil

Helium balloon with a message in Nagercoil

13055553_486586408205905_6416131708034373598_n

As part of Systematic Voters’ Education and Electoral Participation Programme (SVEEP), the Election Department launched an illuminated helium balloon near Anna bus stand here on Thursday.

Launching the balloon, District Election Officer and Collector Sajjansingh R. Chavan said that it would help raise awareness of ethical voting.

The balloon, with the mark ‘May 16’ to remind voters of their democratic duty, was launched to ensure 100 per cent voting.

Efforts were also on to get all those above 18 years of age enrolled as voters through students who had been identified as ‘college ambassadors.

Various programmes – distribution of pamphlets, screening of awareness documentaries and cultural programmes – were organised by the administration to motivate voters to exercise their franchise without fail, Mr. Chavan said.

The district administration had identified two more places for launching the helium balloon, officials said.

Later, Mr. Chavan administered a pledge to NSS volunteers of Hindu College and flagged off an awareness rally at Elluvilai panhayat union office.

District Revenue Officer S. Elango, Nagercoil Returning Officer and RDO S. Madhiyazhagan, Mahalir Thittam Project Director T. Sadayappa Vinayaka Murthy and others were present.

80-year-old NRI Walks from Kanyakumari to Delhi for Charity

nagercoil-delhi

An 80-year-old NRI based in the UK today concluded his 3,000-km walk from Kanyakumari to Delhi to spread awareness about blindness and raise funds.

Balwant Singh Grewal was received at the India Gate here by Urban Development Minister M Venkaiah Naidu who felicitated him for his accomplishment.

Grewal said his walk has generated substantial awareness about blindness. At a gurudwara in Nagpur, about 200 women came forward to donate their eyes, he claimed.

Naidu termed his initiative as “inspiring and commendable” and said it would inspire many to come forward to donate eye.

The minister said the government has been taking several measures for the benefit of the differently-abled to make them realise their inherent potential.

Grewal, who heads the UK-based charity India Association, started the walk on October 26 last year. The fund he collected during the course of his walk will be donated to ‘Saksham’, an organisation working for the cause of the blind, and the Prime Minister’s National Relief Fund.

Heavy traffic in marthandam kanyakumari district

marthandam-traffic

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினம்தோறும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் கள் ஆமை வேகத்தில் சிரயான்குழி முதல் குழித்துறை வரை சுமார் மூன்று கிலோமீட்டர் செல்ல ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகின்றது.

 
 சதாரணமாக காலை எட்டு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை தொடரும் இந்த அவலத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி விருந்து நகர் உட்பட பல மாவட்டங்களை சேர்த்த விமானபயணிகளும் சிக்கி பல நேரங்களில் விமானங்களை தவற விடுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் விடியற்காலையிலே மார்த்தாண்டத்தை தாண்டி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் பயணத்தில் கவனம் செலுத்தும் கட்டாய சூழலுக்கு தள்ளபட்டுள்ளனர் இது போன்று அரசு அலுவலர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் இருமாநிலத்தை சேர்ந்த பலதரப்பினர் சுற்றுலா பயணிகள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இங்கு சாதாரண நாட்களில் ஒரு மணிநேரமும் சீசன் நாட்களில் இரண்டு மூன்று மணிநேரம் வரை டிராபிக் ஜாம் பகுதியில் சிக்கி சூட்டையும் புகையையும் உணவாக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
 
 இந்த மூன்று கிலோமீட்டர் பகுதிகளில் விபத்து நடக்காத நாட்களே இல்லை உயிர் பலி நடக்காத வாரமே இல்லை பாதசாரிகளுக்கு நடக்க பாதையே இல்லை ராஜவழிபாதை என்று அழைக்கப்பட்ட 120 அடி சாலை பம்மம் முதல் தட்டாகுடி இறக்கம் வரை தற்போது 20 அடி மட்டும் காணபடுகின்றது வர்தகர்கள் இந்த எல்லைக்குள் சுமார் இருநூற்று ஐம்பது க்கும் குறைவான அளவு இருப்பர் அவர்களுக்கு கடைகள் வாடகைக்குக் கொடுத்தவர்கள் நூற்றுக்கும் குறைவானவர்கள் இவர்களின் கடைகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் சில இடம் இடிக்கப்பட்டு விடும் என்பதற்காக சங்கம் என்ற பெயரில் வர்த்தகர்கள் பாதிக்கபடுவார்கள் என்ற புரளியை கிளப்பி பெரும் முதலாளிகள் குளிர்காய பார்கின்றனர். 
marthandam-traffic-kk
 
 நெல்லை திருவனந்தபுரம் சென்னை போன்ற பகுதிகளில் ஏறாளமான மேம்பாலங்கள் வந்ததால் எந்த வர்த்தகர்களுக்கும் வியாபாரம் பதிப்பு ஏற்படவில்லை மாறாக வியாபாரம் வளர்ச்சியே கண்டுள்ளது மாவட்ட வளர்ச்சிக்கு தடை நிற்கும் முதலாளித்துவ சக்தி களுக்கும் சந்தரப்பவாத அரசியல் கட்சிகளுக்கும்பாடம் புகட்டவும் நம் தலைமுறை போக்குவரத்து நெரிசல் இன்றி இலக்கை அடைய மேம்பாலம் தேவை சிந்தித்து செயல்பட அன்பு வேண்டுகோள்.

ஐ.அருள் குமார்
கன்னியாகுமரி மாவட்ட பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்

நாகர்கோவிலில் 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கி மாணவர் சாவு ஓடும் பஸ்சில் இறங்க முயன்ற போது பரிதாபம்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஓடும் பஸ்சில் இறங்க முயன்றபோது 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். பஸ்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதி பஸ் நிலையத்தில் கிடையாது. இதுபோன்ற காரணங்களால் பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் நுழையவே திக்குமுக்காடி செல்வது வழக்கம். இதுபோக பிரேக் பிடிக்காத அரசு பஸ்களால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சம்பவமும் நிகழ்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் வடசேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அரசு பஸ் ஒன்று அண்ணா பஸ் நிலையத்துக்குள் வந்தது. அந்த பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது ஒரு வாலிபர் பஸ்சில் இருந்து இறங்க முயன்றதாக தெரிகிறது. இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார்.

பஸ்களின் இடையில் சிக்கி சாவு

அப்போது பஸ் நிலையத்தில் 1-வது நடைமேடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கும், கன்னியாகுமரி சென்ற பஸ்சுக்கும் இடையில் வாலிபர் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். இதை பார்த்த பஸ்சின் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். பஸ்களின் இடையில் சிக்கிய வாலிபர், நசுங்கியபடி உயிருக்காக போராடினார்.

அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பயணிகள் அலறினர். என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்து பஸ்சை இயக்கி அப்புறப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

மாணவர்

இதுபற்றிய தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த வாலிபர் யார்? என்பது தெரியாமல் இருந்தது. அதைத்தொடர்ந்து வாலிபர் வைத்திருந்த பர்சை போலீசார் சோதனையிட்டனர்.

அதில் ஒரு வாக்காளர் அட்டை இருந்தது. அதில், தடிக்காரன்கோணம் பால்குளத்தை சேர்ந்த மோகன் மகன் அனில்குமார் (வயது 22) என்பது எழுதப்பட்டிருந்தது. இதனால் பலியானவர் அனில்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியான அனில்குமார் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் விடுமுறை நாட்களில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் வேலையை முடித்து விட்டு நேற்று ஊருக்கு செல்வதற்காக அண்ணா பஸ்நிலையம் வந்த போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். Nagercoil அண்ணா பஸ்நிலையத்தில் பஸ்களுக்கு இடையில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Regards,
Prem Kumar
F5ive Technologies
Ph: 9894785885

Accident Near Alagiyamandapam in Kanyakumari district

குமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே நடந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி. 3 பேரும் 2 இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது நிலைதடுமாறி வேன் மீது விழுந்து  விபத்து. 2 இருசக்கர வாகனங்களும் ஒன்றையொன்று விரட்டி சென்றதே விபத்திற்கு காரணம் என தகவல்.

Alagiyamandapam-accident

Alagiyamandapam-accident2

Alagiyamandapam-accident1

Alagiyamandapam-accident3

கன்னியாகுமரியில் ரூ.2,766 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம்; மத்திய மந்திரி நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா மார்த்தாண்டத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கின்றனர்.

மேம்பாலங்கள்

தமிழ்நாடு-கேரளா எல்லையில் காரோட்டில் இருந்து வில்லுக்குறி வரையில் 27.250 கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலையில், 4 வழிச்சாலை அமைக்கவும், வில்லுக்குறியில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரை, 42.703 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கவும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலம் கட்டவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டது.

அதேபோல திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 31.800 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதன்படி, காரோடு முதல் வில்லுக்குறி வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,274.34 கோடியும், வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரையிலும் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,041.98 கோடியும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ.286.95 கோடியும், திருப்பூர் முதல் அவினாசிபாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.162.72 கோடியும் ஒதுக்கி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டம் வகுத்தது.

அடிக்கல் நாட்டு விழா

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு அடிக்கல் நடுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதேபோல தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர்.

Source : Dinathanthi

Accidents often occur near Arumanai incident has been turned on by the faulty buses

அருமனை அருகே பழுதடைந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் சம்பவம் நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் ஒன்று உத்திரம்கோடு என்ற இடத்தில் திடீரென பழுதானது. அந்த சமயத்தில் பஸ் மேடான பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனால் அந்த பஸ் பின்னோக்கி வந்தது. பிரேக்கும் பிடிக்காததால் பஸ், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்தனர்.

1592015_arumanai news

இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ் அருமனை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பஸ்சை நேற்று ஊழியர்கள் பணிமனைக்கு எடுத்து சென்றனர். அருமனை நெடுங்குளம் சந்திப்பில் சென்ற போது பிரேக் பிடிக்காததால் பஸ் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதடைந்த பஸ்களால் ஏற்படும் விபத்து பிரச்சினைக்கு தீர்வு காண போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.