Category Archives: Nagercoil News

நாகர்கோவிலில் 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கி மாணவர் சாவு ஓடும் பஸ்சில் இறங்க முயன்ற போது பரிதாபம்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஓடும் பஸ்சில் இறங்க முயன்றபோது 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். பஸ்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதி பஸ் நிலையத்தில் கிடையாது. இதுபோன்ற காரணங்களால் பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் நுழையவே திக்குமுக்காடி செல்வது வழக்கம். இதுபோக பிரேக் பிடிக்காத அரசு பஸ்களால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சம்பவமும் நிகழ்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் வடசேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அரசு பஸ் ஒன்று அண்ணா பஸ் நிலையத்துக்குள் வந்தது. அந்த பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது ஒரு வாலிபர் பஸ்சில் இருந்து இறங்க முயன்றதாக தெரிகிறது. இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார்.

பஸ்களின் இடையில் சிக்கி சாவு

அப்போது பஸ் நிலையத்தில் 1-வது நடைமேடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கும், கன்னியாகுமரி சென்ற பஸ்சுக்கும் இடையில் வாலிபர் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். இதை பார்த்த பஸ்சின் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். பஸ்களின் இடையில் சிக்கிய வாலிபர், நசுங்கியபடி உயிருக்காக போராடினார்.

அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பயணிகள் அலறினர். என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்து பஸ்சை இயக்கி அப்புறப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

மாணவர்

இதுபற்றிய தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த வாலிபர் யார்? என்பது தெரியாமல் இருந்தது. அதைத்தொடர்ந்து வாலிபர் வைத்திருந்த பர்சை போலீசார் சோதனையிட்டனர்.

அதில் ஒரு வாக்காளர் அட்டை இருந்தது. அதில், தடிக்காரன்கோணம் பால்குளத்தை சேர்ந்த மோகன் மகன் அனில்குமார் (வயது 22) என்பது எழுதப்பட்டிருந்தது. இதனால் பலியானவர் அனில்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியான அனில்குமார் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் விடுமுறை நாட்களில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் வேலையை முடித்து விட்டு நேற்று ஊருக்கு செல்வதற்காக அண்ணா பஸ்நிலையம் வந்த போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். Nagercoil அண்ணா பஸ்நிலையத்தில் பஸ்களுக்கு இடையில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Regards,
Prem Kumar
F5ive Technologies
Ph: 9894785885

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலை வாயுடன் அபூர்வ வகை குளத்து மீன்

kanyakumar-fishகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு கோணம் என்னும் ஊரில் உள்ள குளத்தில் சில நபர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வலையில் பிடிப்பட்ட அபூர்வ மீன் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீனின் தலை பகுதி முதலை வாய் போலவும், உடல் பகுதி மீன் போலவும் அமைந்திருந்தது. இம்மீனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

இது குறித்து மீன்வள ஆர்வலர்கள் கூறுகையில், ‘இது முதலைக்கும் மீனுக்கும் பிறந்ததாக இருக்கலாம்’ என்று கருதுகின்றனர்.

பாம்பு வகை மீன்கள் உள்ள நிலையில் முதலை வகை மீன்கள் உருவாகியிருப்பது மக்களை  வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Accidents often occur near Arumanai incident has been turned on by the faulty buses

அருமனை அருகே பழுதடைந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் சம்பவம் நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் ஒன்று உத்திரம்கோடு என்ற இடத்தில் திடீரென பழுதானது. அந்த சமயத்தில் பஸ் மேடான பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனால் அந்த பஸ் பின்னோக்கி வந்தது. பிரேக்கும் பிடிக்காததால் பஸ், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்தனர்.

1592015_arumanai news

இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ் அருமனை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பஸ்சை நேற்று ஊழியர்கள் பணிமனைக்கு எடுத்து சென்றனர். அருமனை நெடுங்குளம் சந்திப்பில் சென்ற போது பிரேக் பிடிக்காததால் பஸ் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதடைந்த பஸ்களால் ஏற்படும் விபத்து பிரச்சினைக்கு தீர்வு காண போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The Centre would soon build a major port at Colachel in the southernmost tip of Tamil Nadu at an estimated cost of Rs 21,000 crore

குளச்சல் துறைமுகத்தை ரூ.21 ஆயிரம் கோடி செலவில் விரிவுபடுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

11986455_1055179671158902_9133821982529444229_n

தமிழக அரசு பதில்கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. குளச்சல் துறைமுகத்தை பெரிய அளவிலான துறைமுகமாக அமைக்க தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். தற்போது தமிழக அரசின் சார்பில் குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்க வேண்டும்.சாலை, ரெயில் போக்குவரத்துதுறைமுகத்துக்கு சாலை இணைப்பு மற்றும் ரெயில் வசதி ஏற்படுத்துவதற்கான ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்வதற்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆய்வுகள் முடிந்து 2 மாதங்களுக்குள் அறிக்கை கிடைக்கும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்காக 4 வழி சாலை திட்ட பணிகள் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. குளச்சல் துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பயன் அடையும்.குளச்சல் துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் 3 கட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக சுமார் ரூ.7ஆயிரம் கோடி, 2-வது கட்டமாக ரூ.6 ஆயிரம் கோடி, 3-வது கட்டமாக ரூ.7 ஆயிரத்து 500 கோடி மத்திய அரசால் நிதி ஓதுக்கீடு செய்யப்படும்.

அந்நிய செலாவணி அதிகரிக்கும்செயல்பாட்டுக்கு வரும்போது குளச்சல் துறைமுகத்தில் இருந்து பல நாடுகளுக்கும் சரக்கு ஏற்றுமதி செய்ய வழி ஏற்படும். ஆண்டுக்கு சுமார் 17 லட்சம் டன் சரக்கு இந்த துறைமுகம் மூலமாக கையாளப்படும். தென்மாவட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் உடனடியாக தேவையான 500 ஏக்கர் நிலத்தை கடலில் மண்ணை நிரப்பி ஏற்படுத்த திட்டம் உள்ளது. தற்போது ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.1,500 கோடி அந்நிய செலாவணி இழப்பில் இருந்து மீட்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் குளச்சல் துறைமுகம் மூலமாக ஏற்படும். இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Colachel

Source : Dailythanthi

Colachel Port to Compete Colmbo Port

சர்வதேச அளவில், கொழும்பு துறைமுகத்திற்கு போட்டியாக, குளச்சல் துறைமுகத்தை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மாநில அரசு போக்கு காட்டி வருவதோடு, மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பழமையான இயற்கை துறைமுகமாக, குமரி மாவட்டத்தில் உள்ள, குளச்சல் துறைமுகம் உள்ளது. நீண்ட காலமாகவே, இந்தத் துறைமுகம் முக்கியத்துவம் இழந்து காணப்படுகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் உகந்ததாகவும், குமரியை, நாட்டின் முதல்நிலை மாவட்டமாக மாற்றவும், குளச்சல் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது.’அடுத்த ஆண்டு முதல், குளச்சலில் வர்த்தக துறைமுகம் செயல்படும்’ என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. ‘நிலப்பரப்பில், ஒரு சதுர அடி கூட வேண்டாம்; கடல் பகுதியிலேயே துறைமுகத்தை அமைக்க முடியும்’ என, மாநில அரசிடம் தெரிவித்துள்ளது.

MSC

குளச்சல் துறைமுகத்தின் சாத்தியக்கூறுகளை கண்டறிய, இரண்டு தனியார் நிறுவனங்கள், மார்ச்சில் ஆய்வு நடத்தின. குளச்சல் கடற்கரையில் இருந்து, 2 கி.மீ., நீளத்துக்கு பாலம் அமைத்து, நடுக்கடலில், 900 ஏக்கர் பரப்பளவில், செயற்கை நிலத்திட்டையை உருவாக்கி, சிங்கப்பூர் தொழில்நுட்பம் போன்று, கப்பல்களை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்கள், குளச்சல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்ரிக்காவுக்கும் சரக்குகளை கப்பலில் ஏற்றிச் செல்ல முடியும். இதன் மூலம் சர்வதேச அளவில் சரக்குகளைக் கையாளுவதில் முன்னணியில் உள்ள கொழும்புவை, இந்தியா முந்த அதிக வாய்ப்புள்ளது.

குளச்சலில் துறைமுகம் அமைந்தால், அப்பெருமை தமிழகத்தைச் சேரும். இதனால், கன்னியாகுமரி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களும் வளர்ச்சி பெறும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கிடையில், குமரி மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் துறைமுகம், மீன் பதனிடும் நிலையம் கட்டித்தரும்படி, தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை, அனைத்து கடலோரக் கிராமங்களிலும் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, குளச்சல் துறைமுகம் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஏற்கனவே துாத்துக்குடி, விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகம் இருக்க, மேலும் குளச்சலையும் வர்த்தக துறைமுகமாக மாற்ற வேண்டாம் என்ற கருத்தும் நிலவுகிறது. குளச்சல் வர்த்தக துறைமுகமாக மாறினால், தங்களின் நலன் பாதிக்கும் என, மீனவர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள், மீனவர்களின் கருத்தை கேட்டு, துறைமுகத்தை அமைக்க வேண்டியது அவசியம்.

இயற்கையாகவே ஆழமானது!

குளச்சல் துறைமுக சாத்தியக்கூறு குறித்து நிபுணர்கள் கூறியதாவது:ஆசியாவிலேயே, இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்தது குளச்சல் துறைமுகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டுமானால், 14 அடிக்கு ஆழப்படுத்த, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்.ஆனால், குளச்சல் துறைமுகம், இயற்கையாகவே நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது. துாத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது. ஒரு கி.மீட்டருக்குக் குறைவான துாரத்திலேயே, 15 மீட்டர் ஆழம் உள்ளது. மேலும், குளச்சல் துறைமுகம் சர்வதேச கப்பல் வழித் தடத்திற்கு மிகவும் அருகில் உள்ளதால், கப்பல்கள் எளிதாக வந்து செல்லும். இவ்வாறு நிபுணர்கள் கூறினர்

Source: Dinamalar

NAGERCOIL GETS 10 NEW BUSES

Tamil Nadu Chief Minister Ms. Jayalalithaa ordered 10 new buses to Ranithottam depot in Nagercoil replacing old buses through video-conferencing from Chennai on June 18th. And the region may get additional 48 busses before December of this year

New buses to NagercoilIn the inaugural function, Mr. Ravindran, General Manager of Nagercoil Region TNSTC, informed that Nagercoil Region in Tirunelveli Division of the TNSTC is topper in revenue earnings in the State. He added it earned Rs. 1.42 crore last year.

There are 819 buses was operating in TNSTC Nagercoil Region including rural and and inter-State routes. It operates 301 buses on mofussil routes, 38 on inter-State routes from Nagercoil. And 480 buses on town routes.

Details of routes where old buses got replaced as follows:

  • Nagercoil-Thiruvananthapuram,
  • Kanyakumari-Thiruvananthapuram,
  • Kaliyakkavilai-Salem,
  • Marthandam-Coimbatore,
  • Kanyakumari-Rameswaram,
  • Nagercoil-Kodaikanal,
  • Nagercoil-Tirunelveli,
  • Kanyakumari-Palani and
  • Nagercoil-Tirupur

Collector Sajjan Singh R. Chavan, TNSTC officials and leaders of local bodies participated in the inaugural function.

It is remarkable to know that one of the old buses which been replaced is 10 years old!

New Source – The Hindu

The work on the Rs 31 lake in Nagercoil road inaugurated mayor Meena Dev

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்பணி தொடங்கியதில் இருந்து நகரின் சாலை ஒவ்வொன்றும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளிக்கின்றன. தார்சாலைகளாக இருந்த அனைத்தும் குண்டும், குழியுமான நிலையில் படுகோரமாகவும், கிராமப்புறங்களில் உள்ள மண் சாலைகளைப் போன்றும் காட்சி அளிக்கின்றன. மழைகாலங்களில் சேறும், சகதியுமாகவும், வெயில் காலத்தில் சாலையில் செல்வோர் முகத்தில் புழுதிவாரி தூற்றுவதாகவும் சாலைகள் அமைந்து விட்டன.

meena dev

இதனால் சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணமாக உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து டபிள்யூ.சி.சி. சந்திப்பு செல்லும் சாலையும், கற்கோவில் பகுதியில் இருந்து டதி பள்ளிக்கு வரும் சாலையும் சீரமைக்கப்பட்டன. அதையடுத்து பாதாள சாக்கடை பணி முதன் முதலாக தொடங்கப்பட்ட பகுதி அமைந்துள்ள ராமன்புதூர் சந்திப்பு முதல் தட்டான்விளை வழியாக ஆயுதப்படை முகாம் சாலை வரையில் ரூ.31 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. இந்த பணியை நகரசபை தலைவர் மீனாதேவ்(Meena Dev) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா(BJP) மாவட்ட துணைத்தலைவர் தேவ், நகர தலைவர் ராகவன், பொதுச்செயலாளர் அஜித்குமார், கவுன்சிலர் ரமேஷ், தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் சதாசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Source : dailythanthi

Extensive rain in Kanyakumari District affects Normal Life

Widespread rain and downpour in many parts of Kanyakumari district affected normal life as many low-lying areas were inundated.

The PWD officials are closely monitoring the situation as the two major reservoirs in the district are getting a steady inflow. A flood warning looked imminent. Perunchani recorded a rainfall of 1.2 cm in the last 24 hours ending at 8 a.m. on Sunday.

Sea erosion and incursion were reported in coastal villages near Thengaipattinam, Azhikal, Pillaithope, Midalam, Kurumparai and Colachel two days ago. Now, the continuous rain not only hit the routine, but also resulted in traffic jams on many stretches. Production was suspended in salt pans and brick kilns.

Public Works Department officials said that storage level in Pechiparai dam was 45.73 ft (full level is 48 ft), with an inflow of 2,651 cusecs. In Perunchani, the storage level was 75 ft (77 ft), with an inflow of 2,107 cusecs and discharge of 2,845 cusecs. As much as 537 cusecs was discharged from Chittar dam.

With intermittent rain continuing in the district, officials have cautioned the people living near riverbanks to move to safer places. In low-lying areas, transport was cut off and roads had been badly damaged.

The worst-affected were faresrmers in the district as many had just sown seeds in their fields. The rains had washed away seeds sown in close to 100 hecta.

In Alamparai, a long stretch of 200 feet road was not severely damaged. Over 30 dwellings suffered damage in the rain in Samiathope. Officials maintained that there was no casualty, and the residents had been moved to safety.

Boat service suspended

For the third consecutive day, boat service to Thiruvalluvar statue in Kanyakumari remained suspended due to heavy wind accompanied by rain, the officials said. Triveni Sangamam, Sunset Park and Vivekanandar Memorial witnessed a huge turnout of tourists.

Source: The Hindu

Rain and Drizzle expected to be continue in Kanyakumari District

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளம் பொங்கிப் பாய்ந்தது.

சாரல் மழை

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைவெயில் தெரியாத அளவுக்கு அவ்வப்போது மழை பெய்து மண்ணை குளிர வைத்து விட்டது. இடை இடையே இடியுடன் கனமழை பெய்ததால் அணைகளும் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 வாரமாக வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சாரல்மழை இதமாக பெய்கிறது. சாரல்மழை நேற்றும் பல இடங்களில் பெய்தது. சில இடங்களில் சற்று பலமாக மழை பெய்தது.

கோழிப்போர்விளையில் அதிகம்பேச்சிப்பாறை-10.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார் (1) – 18.2, சிற்றார் (2) – 11.6, பொய்கை-5.4, மாம்பழத்துறையாறு-20, இரணியல்-4.2, ஆனைக்கிடங்கு-18, குளச்சல்-10, குருந்தன்கோடு-23.6, அடையாமடை-13, கோழிப்போர்விளை-40.5, முள்ளங்கினாவிளை-38, புத்தன்அணை-15.4, திற்பரப்பு-24, நாகர்கோவில்-14.8, பூதப்பாண்டி-1.5, சுருளோடு-13, பாலமோர்-6.5, மயிலாடி-10.2, கொட்டாரம்-20.2.மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 40.5 மி.மீட்டரும், அதற்கு அடுத்தபடியாக முள்ளங்கினாவிளையில் 38 மி.மீ., திற்பரப்பில் 24 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

tiruparappu

திற்பரப்பில் வெள்ளம்

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நேற்று வினாடிக்கு 246 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 131 கனஅடியும், சிற்றார் (1) அணைக்கு 100 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 10 கனஅடியும் தண்ணீர் வந்தது. பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து 216 கனஅடியும், பெருஞ்சாணி மற்றும் சிற்றார் (1) அணைகளில் இருந்து தலா 100 கனஅடியும் தண்ணீர் வெளியேறியது. மாம்பழத்துறையாறு அணைக்கு வந்த 10 கனஅடி நீர் உபரிநீராக திறந்து விடப்பட்டது.

திற்பரப்பு பகுதியில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர்.

Malayalam is gradually eliminating from Kanyakumari

தமிழைப் போன்றே மலையாளமும் குமரி மாவட்டத்தின் அடையாளம்!

kanyakumari

தமிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழைத் திணிப்பது, குமரி மாவட்டத்திலிருந்து மலையாளத்தை அழித்தொழிப்பதற்குச் சமம். குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களை நசுக்குவது போன்றது அது!

குமரி மாவட்டத்தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மலையாளிகள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம்குறித்துக் கவலைப்படும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. நேற்றுவரை மலையாளத்தில் பாடம் படித்துவந்த அக்குழந்தைகள், வேறுவழியில்லாமல் தமிழ் வழியில் பாடம் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இப்படியான ஒரு பிரச்சினை இருக்கிறது என்று பலருக்குத் தெரியாது என்பதுதான் வேதனை. இதுதொடர்பாக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நாமத்தான் தமிழ்நாட்டுக்க கூட சேந்தாச்சி இல்லியா… இனி எதுக்கு மலையாளம் படிச்சிக் கொடுக்கணும்? மலையாளம் படிக்க இஷ்டம் உள்ளவிய கேரளத்துக்குப் போகட்டு” என்றார். மாட்டுக்கறி உண்பவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லட்டும் என்று சொன்ன முக்தர் அப்பாஸ் நக்வியும், கிரிராஜ் சிங்கும்தான் நினைவுக்கு வந்தனர்.

தமிழைப் போன்றே மலையாளமும் குமரி மாவட்டத்தின் அடையாளம் என்பதைப் பார்க்க மறுப்பதன் உச்ச குரலே மேற்சொன்ன வாதம். உண்மையில், குமரி மாவட்டத்தில் மலையாள மொழியும் செந்தமிழும் கோலோச்சி, மாவட்டத்தின் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், வரலாற்று பூர்வமான இந்த உண்மைகளை நாம் அறியாமல் இருக்கிறோம். இளைய சமூகத்தினரிடம் இம்மாவட்ட வரலாறு தொடர்பான புரிதல் இல்லை என்பதுதான் அடிப்படைப் பிரச்சினை. குறிப்பாக, தமிழகப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்டரைப் பற்றிய வரலாறோ, தோள் சீலைப் போராட்டம்பற்றிய குறிப்புகளோ இல்லை. புதிய தலைமுறையினர், வேறு வழிகள் மூலம் அரைகுறை யாக அறிந்த்கொள்ளும் தகவல்கள் கூட, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்தவையாகவோ மிகைப்படுத்தப் பட்டவையாகவோ உள்ளன.

உறுதிசெய்யப்பட்ட ஒற்றுமை

1956 வாக்கில் குமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கக் கேட்டுத் தீவிரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அதை மலையாள மொழிக்கு எதிரான போராட்டமாகத் திசைதிருப்பும் முயற்சி நடந்தது. இம்மாவட்டத்தில் பல ஆண்டுகாலம் வாழ்ந்துவந்த மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சூழல் உருவானது. மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகத் தீவிரமாக இருந்த இத்தகைய போக்கு, மறைந்த முன்னாள் விளவங்கோடு எம்.எல்.ஏ-வான டி. மணியின் பெரு முயற்சியால் கைவிடப்பட்டது. அவரது தலைமையில் ‘ஐக்கிய கேரளம் ஜிந்தாபாத், ஐக்கிய தமிழகம் ஜிந்தாபாத்’ என்று ஒற்றுமைக்கான கோஷம் மார்த்தாண்டம், அருமனை மேல்புறம் பகுதிகளின் தெருக்களில் கேட்டது. குமரி மாவட்டத்தில் இருந்த மலையாளிகளும் தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழ்வதை இந்த கோஷம் உறுதிசெய்தது.

தொடர்ந்து, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், அந்தந்தப் பகுதிகளில் வாழும் சிறுபான்மை மொழி பேசும் மக்களின் உரிமைகள்பற்றிய பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து பல்வேறு குழுக்களை அமைத்து ஆய்வு செய்தது மத்திய அரசு. அந்தக் குழுக்களின் அறிவுறுத்தலின்படி 1965-ல் தமிழக அரசு, குமரி மாவட்டத்தில் சிறுபான்மை மொழிகள் பேசும் மக்களின் மொழியுரிமையைப் பாதுகாக்கவும், அவர்களின் கலாச்சாரம், வழிபாட்டு உரிமைகளை உறுதிப்படுத்தவும் வழிவகை செய்யும் அரசாணை ஒன்றை வெளியிட்டது.

தமிழ் கற்பித்தல் சட்டம்

இந்நிலையில், கடந்த 2014-15-ம் கல்வியாண்டு இறுதித் தேர்வின்போது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. மலையாள மொழி மட்டுமே அறிந்த மாணவர்களுக்குத் தமிழில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப் பட்டன. இவ்விஷயம் சர்ச்சைக்குள்ளானபோது, 2006-ல் தமிழக அரசு கொண்டுவந்த ‘தமிழ் கற்பித்தல் சட்ட’த்தையே நடைமுறைப்படுத்தியதாக விளக்கம் தரப்பட்டது. இந்தச் சட்டம், தமிழையும் ஆங்கிலத்தையும் கட்டாயப் பாடமாகவும், அவரவர் தாய்மொழியை விருப்பப் பாடமாகவும் கற்றுக்கொடுக்கக் கூறுகிறது. இது தாய்மொழிக் கல்வியைச் சிதைத்துவிடும் என்ற அச்சம், தமிழ் தவிர வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் உண்டாகியிருக்கிறது.

மறுக்கப்படும் உரிமை

குமரி மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மாணவர்கள் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். விருப்பப் பாடமாக மலையாளம் இருக்கும் சூழலில் வேறொரு சிக்கலையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. பல அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் செலவைக் குறைக்கும் நோக்கில் மலையாள மொழி கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதன் மூலம், தாய்மொழியில், குறிப்பாக மலையாளத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. இந்தச் சட்டம் 1965-ல் வெளியிடப்பட்ட அரசாணையை மீறும் வகையில் உள்ளது.

குமரியின் பூர்வகுடிகள்

குமரி மாவட்டத்தில், மலையாள மொழிக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள், அது நாயர் சமூகத்தினருக்கு மட்டுமேயான மொழி என்பதுபோல் வாதிடுகிறார்கள். உண்மை அதுவல்ல. மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் வசிக்கும் சில கடற்கரையோர கிராமங்களிலும், ஈழவர், தலித் ஏன் நாடார் சமூகங் களிலும்கூட கணிசமான எண்ணிக்கையில் மலையா ளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர். இன்றும் குமரி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அனைவருமே தலைமுறை தலைமுறையாக குமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இப்படியான ஒரு அசவுகரிய சூழலில், தமிழைப் போன்றே மலையாள மொழியும் குமரி மாவட்டத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் இணக்கக் கோரி நடந்த போராட்டத்தின்போது, மார்த்தாண்டத்தில் நடந்த போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் முதலில் பலியான பப்பு பணிக்கர் ஒரு மலையாளி. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், செய்குத்தம்பி பாவலரும் குமரி மாவட்டத்தின் பெயரைத் தமிழ் உலகுக்கு அறியச் செய்தவர்கள் என்றால், மலையாளத்தில் அம்சி நாராயண பிள்ளையும், தனது ஊரின் பெயரை வைத்தே அறியப்படும் திருநயினார்குறிச்சியும், ரமேசன் நாயரும் குமரி மாவட்டத்தின் பெயரை மலையாள உலகம் அறியச் செய்தவர்கள்.

இவர்களில் அம்சி நாராயணபிள்ளை எழுதிய ‘வரிக வரிக சகஜரே, சகன சமர சமயமாய்’ எனும் பாடல், ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் பாடப்பட்ட உணர்ச்சிமிக்க பாடல். திக்குறிச்சி சுகுமாரன் நாயரும், குலசேகரத்தை அடுத்த கமுகறை புருஷோத்தமன் நாயரும் மலையாளத் திரையுலகில் குமரி மாவட்டத்தின் பெருமையை நிலைபெறச் செய்தவர்கள். இன்றைய மலையாள சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் ஜே.சி.டேனியல் கூட அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழர்தான்!

தவிர்க்கப்பட வேண்டிய திணிப்பு

தமிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழைத் திணிப்பது, குமரி மாவட்டத்திலிருந்து மலையாளத்தை அழித்தொழிப்பதற்குச் சமம். குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களை நசுக்குவது போன்றது அது. தமிழக அரசு இதைச் செய்யுமானால், பிற மொழித் திணிப்புகளை எதிர்ப்பதற்குத் தார்மீகரீதியாக எந்த உரிமையும் அதற்கு இல்லை என்றே அர்த்தமாகும்.

ஜான் மோசஸ் ராஜ்,

தொடர்புக்கு: johnmosesraj@gmail.com

Source : tamilhindu