Category Archives: Nagercoil News

97.27% Pass Percentage registered by Class 10th of Kanyakumari District.

2015 பத்தாம் வகுப்பு தேர்வில், மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 97.27%  சதவீதத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

Kanyakumari District 10th result 2015

Source : Tamil Hindu

 

Kanyakumari student selected for EDT Programme in US

Masha Nazeem of Eraviputhoor Kadai in Kanyakumari district, who is doing Master of Technology course at SRM University, has been selected for the prestigious Entrepreneurship Development Training Programme in the United States.

She is one among the eight students selected by Motwani Jadeja Foundation (MJF), headquartered in California, for the Rajeev Circle Fellowship. The annual fellowship is offered by the MJF to bright students from various nations.

As part of this fellowship, the selected students from India would take part in Entrepreneurial Development Training Programmes in Google, Face Book, E-Bay, Auto Desk and Twitter from May 10 to 30.

Masha Nazeem has been selected for the fellowship for her innovative service rendered to school students under the Masha Innovation Centre, which was inaugurated by the then Collector Nagarajan. As many as four school students of Masha Innovation Centre have been selected for national-level competitions on inventiveness and creativity.

Ms. Nazeem said that the EDP training would help her take the centre to the national level to popularise science among school students.

She started designing science projects at the age of nine and has invented 12 science models. She has got five national and two international awards.

Source : The Hindu

மார்த்தாண்டம்– ரெயில்நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு

Marthandam:ரெயில் நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைப்பணி

மார்த்தாண்டம்   பஸ் நிலையம் அருகில்  இருந்து குழித்துறை ரெயில் நிலையம் வழியாக ஐரேனிபுரத்திற்கு ஒரு சாலை செல்கிறது இந்த    சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை 500 மீட்டர் தூரம் சிமெண்டு தளம் அமைக்கவும், ரெயில் நிலையத்தில் இருந்து ஐரேனிபுரம் வரை தார்தளம் அமைக்கவும் நெடுஞ்சாலைதுறை சார்பில் ரூ. 1 கோடி அனுமதிக்கப்பட்டது.

அதன்படி ரெயில்நிலையம் பகுதியில் இருந்து ஐரேனிபுரம் வரை சாலையில் தார்போடும் பணி நடந்து முடிந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை சிமெண்டு  தளம் போட பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, அந்தபகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கவும், பக்க ஓடைகள் தரமானதாக  அமைக்கவும் வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் வேலை நிறுத்தப் பட்டது.

மீண்டும் தொடங்கியது

அதன் பின்னர், நேற்று மார்த்தாண்டம் ரெயில் நிலைய சாலை தொடங்கும் இடத்தில் சாக்கடை கால்வாய்  இணைப்பிற்காக சிமெண்டு குழாய் பதித்து சாலை பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனால், சிமெண்டு குழாய் போடுவதால் தரம் இருக்காது எனக்கூறி அந்த பகுதி மக்களும், ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ராமச்சந்திரன், நல்லூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், கழிவுநீர் ஓடையில் சிமெண்டு குழாய் பதிக்கும் பணியும், சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியும் தொடங்கியது.

Source : Daily thanthi

மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி

Marthandam flyover : மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.போக்குவரத்து நெருக்கடிகுமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக மார்த்தாண் டம் விளங்குகிறது. இங்கு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், மற்றும் தினசரி சந்தை போன்றவை அமைந்துள்ளன. மார்த்தாண் டம் பகுதிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.மார்த்தாண்டத்தில் அமைந் துள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக அமைந் துள்ளது. இதனால், எப் போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.தொடரும் போக்குவரத்து நெருக்கடியால், திருவனந்த புரம், கன்னியாகுமரி போன்ற முக்கியமான பகுதிகளுக்கும், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர் களும், ரெயில் நிலையத் திற்கு செல்பவர்களும், மாணவ- மாணவிகளும், பொதுமக்க ளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் கடும் போக்குவரத்து நெருக் கடியால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.மேம்பாலம்இந்தநிலையில் மார்த் தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மாற்று ஒருவழிப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.இதற்கிடையே மார்த்தாண் டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.அதன் ஒருகட்டமாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் மண் ஆய்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக ஆழ்துளை போடப்படும் எந்திரம் மூலம், ஊழியர்கள் மண் ஆய்வு செய்து வருகிறார்கள். மண் ஆய்வுப்பணி தொடங்கி உள்ளதால் மார்த் தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கலாம் என பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது

Source : Daily Thanthi

நாகர்கோவில்: முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை சீர் செய்யும் சராசரி மனிதர்

Nagercoil: கொட்டும் மழை, அடிக்கின்ற வெயில் என மாறி, மாறி மிரட்டும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில், நாகர்கோவிலின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களோடு கைகோர்த்து, முழுக்க, முழுக்க சேவை மனப்பான்மையோடு போக்குவரத்தை சீர் செய்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த விஜயன் (50). அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 3 ஆண்டுகளாக என்பதுதான் ஆச்சர்யம்.

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த விஜயனிடம் பேசினோம். `நாகர் கோவிலை அடுத்துள்ள சித்திரை திருமகாராஜபுரம் என்னோட சொந்த ஊரு. திருமணம் ஆகல்ல. அம்மா, அப்பா இருந்த வரைக்கும் தனியார் நிறுவன செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். அவங்க இறந்த பின்னாடி எனக்கு பணத் தேவை குறைஞ்சிடுச்சு.

பிழைப்புக்காக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ஒரு சேவை யாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். முழுசா 3 வருஷம் தாண்டிடுச்சு.

தினமும் காலையில் 8 மணிக்கு வந்துடுவேன். 11 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். பின்னர் மாலை 5 மணிக்கு வந்து விட்டு இரவு 8 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். வேப்பமூடு, கோட்டாறு, செட்டிக்குளம் பகுதிகளில் மாறி, மாறி டியூட்டி பார்ப்பேன். பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் டீ, காபி, வடைன்னு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவாங்க. தினமும் இரவு நாகர்கோவிலில் இருக்கும் என்னோட மாமா வீட்டுல போய் படுத்துப்பேன்.

செக்யூரிட்டியா இருக்கும் போது வாங்குன காக்கி சட்டை, பேன்டை போட்டுக்குவேன். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் நின்று கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது சிலர் மதித்து நடப்பர். சிலர் வித்தியாசமாக கூட பார்த்துட்டு போவாங்க.

யார் எப்படி நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு இந்த வேலை திருப்தியாய் இருக்கிறது” என்றவர் சாலை சீரமைப்பு பணிகளில் மூழ்கினார்.

<span style=”display:none;”>The average person will smooth traffic on the main road junctions</span>

Mass Group Dance Competition – Kumari Thendral Ilayangar Narpani Mandram

Hi Everyone!

Mass Group Dance Competition on January 03, 2015 at Sathankarai, Colachel. The event was organized by Kumari Thendral Ilayangar Narpani Mandram. Hurry up !

 

500 year old tree in Keeriparai Forest, Nagercoil

The 500 year old tree  in Isandhimangalam main Road on the way to Keeriparai Forest, Nagercoil.

Photos contributed by Bala Mithu. Source – https://www.facebook.com/bala.mithun/posts/733738033367053

 

குளச்சல் துறைமுகத்துக்கு உதவி: உறுதியளித்தார் அமைச்சர் கட்காரி

ஆசியா கண்டத்திலேயே, குளச்சல் துறைமுகம் தான், இயற்கையான துறைமுகம். எனவே, அதை, மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும்,” என்று, அமைச்சர் நிதின் கட்காரி, உறுதியளித்தார்.

ராஜ்யசபாவில், வர்த்தக கப்பல் போக்குவரத்து திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கொண்டு வந்தார். அந்த மசோதா மீது காங்கிரஸ் சார்பில், சுதர்சன நாச்சியப்பன், பேசியதாவது: குளச்சல் துறைமுகத்தை, அரசு மேம்படுத்த வேண்டும். அங்கு, மாநில அரசு, நிறைய முதலீடு செய்துள்ளது. மத்திய அரசும், உதவி செய்ய வேண்டும். கொழும்பு துறைமுகத்துடன், போட்டிபோடும் அளவுக்கு வளரும், தூத்துக்குடி துறைமுகத்தை, மேலும் மேம்படுத்த வேண்டும். தவிர, ராமேஸ்வரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில், சிறிய அளவிலான, கப்பல் போக்குவரத்து, துவங்க வேண்டும். தமிழகத்தின், மூக்கையூர் என்ற இடத்தில், காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட துறைமுகத்தை, புனரமைத்து, மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சுதர்சன நாச்சியப்பன், பேசினார்.

விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், ‘குளச்சல் துறைமுகம், மிக மிக, முக்கியமான துறைமுகம். ஆசியாவிலேயே, மிகவும் இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்த துறைமுகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டும் என்றால், அங்கு ஆழப்படுத்த பணிகளை மேற்கொண்டாக வேண்டும். 12 அடி அல்லது 14 அடி ஆழப்படுத்துவதற்கேகூட, பல ஆயிரம் கோடி, நிதி செலவிட வேண்டும். இந்நிலையில், குளச்சல் துறைமுகம், நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது; கைவசம் உள்ள, அந்த துறைமுகத்தை மேம்படுத்த, மத்திய அரசு உதவி செய்து, அதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும்,” என்றார்

கன்னியாகுமரியில் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் ஏறிய எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல இன்று காலை 7 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையம் வந்தது. 2–வது பிளாட்பாரத்தில் நின்று பயணிகளை இறக்கி விட்ட பின்னர் இந்த ரெயில் 8 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட இருந்தது.

இதற்காக, என்ஜின் டிரைவரான மதுரையை சேர்ந்த சட்டநாதன் என்பவர் ரெயிலை 4–வதுபிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தார். அப்போது தண்டவாளத்தில் பின்னோக்கி வந்து கொண்டிருந்த ரெயில் திடீரென அங்கிருந்த தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பிளாட் பாரம் மீது ஏறியது.

இதில் ரெயிலின் கடைசி 2 பெட்டிகள் சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு பிளாட்பாரம் மீது ஏறி நின்றது. அதிர்ஷ்டவசமாக ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் ரெயில் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பிளாட் பாரம் மீது ஏறிய போது பயங்கர சத்தம் கேட்டது. இதைக் கேட்ட பயணிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி ரெயில் நிலைய மேலாளர் பெஸ்டஸ் வில்சன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பிளாட்பாரம் மீது ஏறிய ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து காலை 8 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட வேண்டிய ரெயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த ரெயிலில் செல்வதற்காக வந்திருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர்.

Source : maalaimalar