Category Archives: Nagercoil News

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர்களுக்கான பிரத்யேக மானிய கடன் பெற மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு

District Collector Mr. P. N. Sreedhar, E.A.P., called for special subsidized loan for Scheduled Tribes and Tribes.

Mega clean beach organized at Manakkudi Beach

A coastal clean-up exercise was held at Manakkudi near Nagercoil on Sunday to mark India’s election of the G20 president.

Called “My Beach, My Pride”, the exercise was initiated by the Minister of Dairy Development. Mano Thangaraj.

Students from various schools and colleges and volunteers collected and removed several hundred kilograms of discarded waste such as non-biodegradable plastic products and fishing nets. The minister called on the public and tourists visiting the area not to use single-use plastic products. He said, “If you bring non-perishable products into the area, place them carefully in the separate blogs set up for that purpose.” Many environmentally friendly products made from palm and fiber, such as hats, bags, purses, baskets and wallets, are displayed to encourage the public to use them.

Collector P.N. Sridhar, Superintendent of Police Hari Kiran Prasad, District Forest Officer Ilaiyaraja also participated in the river cleaning exercise.

Photo Credit:  jerin_abinow

பேருந்துநிலையங்களை தனியார்மயமாக்க தேவையில்லை!-வழிகாட்டும் நாகர்கோயில் நகராட்சி!

“உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தத்தளிப்பதால் பேருந்துநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போகிறோம்” என்ற தமிழக அரசின் அறிவிப்பு பலத்த சர்ச்சை விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், “உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை சரிசெய்து வருமானத்தை பெருக்கினால்… அரசாங்கமே பேருந்துநிலையங்களை சிறப்பாக நடத்திட முடியும்” என்று உணர்த்தியதோடு உயர்நீதிமன்றத்தால் பாராட்டையும் பெற்றிருக்கிறது நாகர்கோயில் நகராட்சி.

“பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் அங்கு விற்பனை செய்யும் பொருட்களின் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி விற்பனை செய்வார்கள். பேர்ந்து நிலையத்தில் நிற்பதற்குக்கூட கட்டணம் வசூலிக்கும் அவலநிலை வரலாம். இதன்மூலம், பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றக் குமுறல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வெடித்துக்கொண்டிருக்க, நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு நாகர்கோயில் நகராட்சி அப்படியென்ன செய்திருக்கிறது?

இதுகுறித்து, சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் பொ.சோமசுந்தரம் நம்மிடம், “உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தத்தளிப்பதால்தான் பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், நாகர்கோயிலிலுள்ள பேருந்துநிலைய வருமானம் கடந்த வருடங்களைவிட இந்த வருடம் 4 மடங்காக அதிரிகரித்திருக்கிறது. இப்படி, தமிழகம் முழுக்க உள்ள பேருந்துநிலையங்களில் நியாயமான வாடகைகளை வசூலித்து வருமானத்தை பெருக்கினாலே தனியாரைவிட சிறப்பாக நடத்துவதோடு பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று ஆச்சர்யப்படுத்துகிறவர், அதுகுறித்து நம்மிடம் விளக்கினார்.

“நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்டு சுமார் 343 கடைகள் உள்ளன. இந்த, கடைகளை குறைந்த வாடகைக்கட்டணத்தில் வாடகைக்கு எடுத்தவர்கள் பெரும்பாலானோர் பல மடங்கு கூடுதல் கட்டணத்திற்கு உள்வாடகை விட்டுக்கொண்டிருப்பது நடைமுறையில் உள்ளது. 2018 மார்ச்-31 ந்தேதி  கடைகளின் வாடகை ஒப்பந்தம் முடிவடைவதால் மூன்று மாதத்திற்கு முன்பே அதாவது 2017  டிசம்பர்-28 ந்தேதி நகராட்சி நிர்வாகத்தால் ஏலம் அறிவிக்கப்பட்டது.

5,000 ரூபாய்க்கு கடையை வாடகைக்கு எடுத்துவிட்டு, மாதம் 2 லட்சரூபாய்வரை எல்லாம் உள்வாடகைக்கு விடுகிறார்கள். அதற்கு, நேரடியாகவே ஏலம் எடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு வாடகை கொடுத்துவிடலாம். இதன்மூலம், உள்வாடகைக்கு இருக்கிறோம் என்ற பயமும் பதட்டமும் இல்லாமல்  உரிமையாளர்கள் என்ற எண்ணம் ஏற்படும். எப்போது, விரட்டிவிட்டு வேறு யாரையாவது கொண்டுவந்துவிடுவார்கள் என்று உள் வாடகைக்குவிட்டவர்களுக்கும் பயப்படத்தேவையில்லை.  இதைவிடக்கொடுமை, நாகர்கோயில் பேருந்துநிலையத்திலுள்ள கடைகளுக்கு முன்பு ஒருமுறை ஏலம் விடப்படப்போது, தனியார் கடைகளுக்கு 30 சதவீதம் வாடகை ஏற்றமும் போக்குவரத்துத்துறை அலுவகத்திற்கு 100 சதவீத வாடகை ஏற்றமும் இருந்ததை சுட்டிக்காட்டி போக்குவரத்துறைதான் மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறது அதற்கு 100 சதவீதம் வாடகையை பாகுபாடாக கூட்டியிருக்கிறீர்களே என்று உயர்நீதிமன்ற மிகுந்த வருத்தம் தெரிவித்தது.

அரசாங்கத்தின் இடத்திலேயே உள் வாடகையில் இருக்கும் கடைக்காரர்கள் கொடுக்கும் வாடகை, பேருந்துநிலையத்தில் விற்பனையில் கிடைக்கும் வருமானம் இதையெல்லாம் கருத்தில்கொண்டு கடைகளின் மாத வாடகையை  அதிரடியாக உயர்த்தி ஏலம் விட்டார்கள்.

இதனால், நாகர்கோயில் நகராட்சி கடைகள் மூலம் 1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 144 ரூபாய் மட்டுமே வந்துகொண்டிருந்த வருட வருமானம் தற்போது 4 கோடியே 62 லட்சத்து  6 ஆயிரத்து 564 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதேபோல், கடைக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட்  தொகையும்  8 கோடியே 92 லட்சத்து  6 ஆயிரத்து 564 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

மேலும்,‘ஏற்கனவே, இருந்த கடைக்காரர்களுக்கே வாடகைக்கு விடவேண்டும். அதுவும், பழைய தொகையிலேயே வாடகைக்கு விடவேண்டும்’ என்று பழைய வாடகைக்கடைக்காரர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்கள். அப்போதுதான்,  ‘நகராட்சி நிர்வாகம் கடைகளுக்கான வாடகையை உயர்த்தியது சரியே. இந்த, நகராட்சி நிர்வாகம்போல் ஆங்காங்கேயுள்ள ஒரு சில நகராட்சி நிர்வாகங்கள் விதி விலக்குகளே’ என்று பாராட்டியதோடு நாகர்கோயில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்து வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது” என்றார்.

நாகர்கோயில் நகராட்சிபோல உள்ளாட்சி அமைப்பிலுள்ள ஒவ்வொரு நகராட்சியும் மாநகராட்சியும் முறைகேடுகளை தடுத்து வரி, வாடகைகளை  முறையாக வசூலித்தாலே தமிழகத்திலுள்ள எந்த பேருந்துநிலையத்தையும் தனியாரிடம் தாரை வார்க்காமல் அரசாங்கமே திறம்பட நடத்தமுடியும்.

Source : https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/no-need-privatize-bus-stations-municipal-corporation-nagercoil

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறை கட்டியுள்ளார்

நித்திரவிளை: நித்திரவிளை அருகே பெண் ஒருவர் தனக்குத் தானே கல்லறை கட்டியுள்ளார். குமரி மாவட்டம் சூழால் ஊராட்சியில் தமிழக – கேரள எல்லையை ஒட்டியுள்ள பல்லுக்குழி மேலவிளை பகுதியை சேர்ந்தவர் அப்பியான் மகள் ரோசி (55). திருமணமாகவில்லை. சிறுவயதில் இருந்தே முந்திரி ஆலைகளில் ரோசி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அக்கம்பக்கத்து வீடுகளில் உதவிகளுக்கும் சென்று வந்துள்ளார்.

 இதில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி மேலவிளை பகுதியில் ஏழரை சென்ட் இடம் வாங்கி, அதில் சிறிய வீடு வைத்து தனியாக வசித்து வருகிறார். மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் முந்திரி ஆலைக்கு செல்லாமல் இந்த பணிக்கு சென்று வந்தார். விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலைக்கு சென்றதால் சூழால் ஊராட்சி சார்பில் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவரை உறவினர்கள் யாரும் கண்டுக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
 மேலும் சிலர் நீ இறந்தால் உன்னை யார் அடக்கம் செய்வார்கள் என்று கிண்டலாக கேட்டுள்ளனர். இதனால் தனக்குத்தானே கல்லறை கட்ட திட்டமிட்ட ரோசி சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்லறை கட்டி வைத்துள்ளார். கடந்த மாதம் இதற்கான பணி தொடங்கியுள்ளார். தேவையான ஆழத்தில் பள்ளம் தோண்டி, கீழ்பகுதியில் இருந்தே கல்லால் கட்டி எழுப்பி மேலே அழகாக கடப்பா கல் பதித்து தனது படம், பெயரை பொறித்து சிலுவையும் அமைத்துள்ளார்.
 இவரை அடக்கம் செய்யவேண்டுமானால் ேமல் பகுதியை கழட்ட தேவையில்லை. தலை பகுதிக்கு கீழே வெளிப்பகுதியில் சிறிது பள்ளம் தோண்டினால் உள்ளே உள்ள பள்ளம் தெரியும். பெட்டியில் உடலை வைத்து தள்ளினால் உள்ளே சென்று விடும். இந்த அமைப்பில் அவர் தனக்கான கல்லறையை அமைத்து வைத்துள்ளார் இது குறித்து ரோசி கூறுகையில், “எனது ஊர் பல்லுக்குழி அருகே உள்ள செறுகுழி. எனது பெற்றோருக்கு நான் ஆறாவது மகள். ஐந்து சகோதரிகளுக்கும், தம்பிக்கும் திருமணம் நடந்து. அவர்கள் தனியாக வசிக்கின்றனர். இறக்கும் போது யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்று கருதி எனக்கு நானே கல்லறை கட்டிக்கொண்டேன் என்றார்.

Two injured in bus accident near kulasekaram

 

குலசேகரத்தில் அதிவேகமாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தாய், மகள் படுகாயம். காயமடைந்தவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Arunachala college bus accident near kulasekaram. The Mother and daughter injured. Both were admitted to the nearest hospital for treatment.

Heavy rain in kanyakumari district

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விடாமல் கன மழை கொட்டி வருவதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
 
நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பலத்த மழை காரணமாக பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழையின் காரணமாக வள்ளியாறு, பரளியாறு, குழித்துறையாறு, சுசீந்திரம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது.
தொடர் கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தவிப்பு 
குமரியில் பெய்து வரும் தொடர்மழையினால் மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை, தோவளை, இராமனாதிச்சன்புதூர் உள்ளிட்ட இடங்களில் செங்கல்சூளை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.
வேலையிழப்பு 
குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
 திற்பரப்பு அருவியில் வெள்ளம் 
குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்த மழையினால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவியில் குளிக்கசுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியூர்களிலிருந்து அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
 படகு போக்கு வரத்து நிறுத்தம்
 கன்னியாகுமரி கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Voter Awareness Programme Conducted in nagercoil

Helium balloon with a message in Nagercoil

As part of Systematic Voters’ Education and Electoral Participation Programme (SVEEP), the Election Department launched an illuminated helium balloon near Anna bus stand here on Thursday.

Launching the balloon, District Election Officer and Collector Sajjansingh R. Chavan said that it would help raise awareness of ethical voting.

The balloon, with the mark ‘May 16’ to remind voters of their democratic duty, was launched to ensure 100 per cent voting.

Efforts were also on to get all those above 18 years of age enrolled as voters through students who had been identified as ‘college ambassadors.

Various programmes – distribution of pamphlets, screening of awareness documentaries and cultural programmes – were organised by the administration to motivate voters to exercise their franchise without fail, Mr. Chavan said.

The district administration had identified two more places for launching the helium balloon, officials said.

Later, Mr. Chavan administered a pledge to NSS volunteers of Hindu College and flagged off an awareness rally at Elluvilai panhayat union office.

District Revenue Officer S. Elango, Nagercoil Returning Officer and RDO S. Madhiyazhagan, Mahalir Thittam Project Director T. Sadayappa Vinayaka Murthy and others were present.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குளச்சல் வர்த்தக துறைமுகம் வந்தே தீரவோண்டும் என்று போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு அரசியல் சார்பு இல்லாமல், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு நடத்திய ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி…

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்த அனைத்து பொதுமக்களுக்கும் (கிறிஸ்த்தவ, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல உள்ளங்ககளுக்கும்) கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..!!!
–***குமரி. ஸ்ரீ மகேஷ் FB