Category Archives: Knayakumari district News

450 crore by ISRO: International standard space and science park at Kumari

nagercoilinfo

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சுமார் 450 கோடியில், சிறிய விண்கலம் உள்பட அதிநவீன தொழில்நுட்பத்துடன், விண்வெளி மற்றும் விஞ்ஞான பூங்கா அமைகிறது. கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் என்றாலும், இங்கு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை கவர எவ்வித வசதியும் ஏற்படுத்தி தரப்படவில்லை. பல திட்டங்கள் பல கோடிகளை முடக்கி ஏற்படுத்தினாலும், அவை செயல்படாமல் சுற்றுலா பயணிகளுக்கு பயன் இன்றி முடங்கி ேபாய்கிடக்கின்றன. இந்நிலையில், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி, சுற்றுலா வளர்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். இதற்கேற்ப மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரிந்துரைப்படி, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆய்வு செய்து சென்றார். இதனை தொடர்ந்து முட்டம் கலங்கரை விளக்கத்தில் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டது.

திருவள்ளுவர் சிலைக்கு பாலம் உள்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவும் சுற்றுலா வளர்ச்சி பணிகள் பற்றி சிறப்பு குழு அமைத்து பல்வேறு ஆலோசனைகள் செய்து வருகிறார். இதற்கிடையே,  கன்னியாகுமரியில், இஸ்ரோ சார்பில் விண்வெளி மற்றும் விஞ்ஞான பூங்கா அமைய உள்ளது.  இதற்காக அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சஜித் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், இஸ்ரோ சார்பில் புதியவன் உள்ளிட்ட அதிகாரிகளும், யாருக்கும் இடையூறு இல்லாத வகையில், இடம் தேர்வு செய்து, கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே இந்த திட்டம் குறித்து கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது தெரிவித்ததாவது:சர்வதேச தரத்தில், அமைய உள்ள இந்த திட்டத்தில், 200 பேர் அமரும் வகையில் பிளானட்டோரியம் அமைக்கப்படும். இதன் நடுவில் அனைத்து கோள்களும் கொண்ட விண்வெளி பாதை (கேலக்ஸி) அமைக்கப்பட்டு, பூமி பந்து சுழல்வதுபோல் அமைக்கப்படும்.
*பிரபஞ்சம் உருவான வரலாறு, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது எப்படி, மழை பெய்வது எப்படி என்பது குறித்த விளக்க கண்காட்சி இடம் பெறும்.

* விண்கலத்தில் செல்லும் அனுபவத்தை மாணவர்கள், பாமர மக்கள் உணரும் வகையில், சிறிய நிஜ விண்கலம் அமைக்கப்படுகிறது. மாணவர்கள், பார்வையாளர்கள் இதன் உள்ளே சென்று விண்கலத்தில் செல்லும் போது ஏற்படும் அனுபவத்தை நிஜமாக அனுபவிக்கலாம்.

* செயற்கை கோள்கள், விமானம், விண்கலம், ராக்கெட், ஜெட் போன்றவை எவ்வாறு இயங்குகிறது என்பதனை விளக்கும் வகையில் நிஜ விமானங்கள் மற்றும் உதிரிபாகங்களை கொண்டு கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
* இங்கு அமைக்கப்படும் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள், செயற்கை கோள்கள் மற்றும் விண்கலங்களை பார்வையிடலாம்.
* நியூட்டன் விதிகள் உள்பட முக்கிய விஞ்ஞான விதிகள் பற்றி செயல் வழியாக மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
* இந்த பூங்காவிற்கு வந்து திரும்பும்போது, அவர்களுக்கு வான்வெளி பற்றி முழுமையாக அறியும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
* இந்த பூங்காவிற்கு வரும் யாரும் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் பார்வையிடலாம்.
* இஸ்ரோ சார்பில் அமைக்கப்படும் இந்தியாவின் முதல் பூங்கா இதுதான். கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபும் பிளானட்டோரியத்தை விட நவீனமாக, சர்வதேச தரத்தில் அமைய உள்ளது.
* இதற்காக 450 கோடி வரை செலவு ஆகலாம் என திட்டமிடப்பட்டு, அதற்கான நிதியும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
கலெக்டரின் ஒப்புதலுக்கு பின்னர், நிலம் இஸ்ரோவிற்கு வழங்கப்பட்டதும் இந்த திட்டம் குறித்து, முறைப்படி இஸ்ரோ தலைவர் சிவன் அல்லது பிரதமர் அறிவிக்கலாம் எனத்தெரிகிறது. இதற்கு சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

 Source : Dinakaran News

 

Accident Near Vattakottai in kanyakumari District

கன்னியாகுமரி மாவட்டம் வட்ட கோட்டை சந்திப்பு நான்கு வழி சாலையில் Rohini College of Engineering & Technology கல்லூரி வாகனமும் , டெம்போவும் மோதியது.

 

வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு


குமரி மாவட்டத்தில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முதலில் இனயத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த துறைமுகம் கன்னியாகுமரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும்–கீழ மணக்குடிக்கும் இடையே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த துறைமுகம் அமைக்கக்கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஒரு தரப்பினர் கன்னியாகுமரிக்கு வர்த்தக துறைமுகம் வேண்டும் என்று கோரி குமரி வர்த்தக துறைமுகம் ஆதரவு இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில் கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாகவும், இந்த துறைமுக திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தியும் குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதார போராட்டம் என்ற பெயரில் குமரி வர்த்தக துறைமுக ஆதரவு இயக்கம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பிற்பகலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துறைமுக ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் வரவேற்றார். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகம்மது இஸ்மாயில், குமாரதாஸ், அய்யாவழி இயக்க சுவாமி சிவச்சந்திரன், வக்கீல் பாலஜனாதிபதி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் வெற்றிவேல், நாடார் மகாஜன சங்க தங்கராஜ் நாடார், கவிஞர் சதாசிவம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஐவர் தேவவரம், துறைமுக ஆதரவு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் டி.சி.மகேஷ், மண்டைக்காடு புதூரைச் சேர்ந்த மீனவர் ஜெஸ்டாலின் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது அவர்கள், “கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் அமைவதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்பது குறித்தும், இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மாவட்டத்தின் வளர்ச்சி போன்றவை குறித்தும், துறைமுகத்தால் மாவட்டத்தின் அனைத்து தரப்பு மக்களும் அடையப் போகும் பயன்கள், மாவட்டத்துக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்“ என்பது குறித்து விளக்கி பேசினர். வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் விரைவில் அழகான பாலங்களை காணப்போகிற நீங்கள், அழகான துறைமுகத்தையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். உலக வரைபடத்தில் கடலுக்குள் நீண்டு போகும் நாடுகள் மூன்று தான். அதில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கடலுக்குள் நீண்டு போகும் இடம் ஒன்று தான். அது உங்கள் கன்னியாகுமரி. கன்னியாகுமரியின் மேற்கிலும், கிழக்கிலும் கடல் இருக்கிறது. இந்த கடல் சார்ந்த வியாபாரங்கள் துறைமுகம் மூலமாகத்தான் நடக்கும். அப்படி நடந்தாக வேண்டும் என்றால் கட்டாயம் துறைமுகம் வந்தாக வேண்டும். துறைமுக திட்டத்துக்கு எதிராக செயல்படுபவர்களை ஜெயிலில் தூக்கி போடவேண்டும். அதற்கு தமிழக அரசு தைரியம் இழந்து நிற்கிறது. அந்த தைரியத்தை தமிழக அரசுக்கு நாம்தான் கொண்டுவர வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகவும் இதேபோல் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டம் என்ன ஆனது? கூடங்குளம் தற்போது குட்டி சிங்கப்பூர் போல் ஆகிவிட்டது. கூடங்குளம் அப்படி ஆனால் கன்னியாகுமரியும் அப்படி ஆக வாய்ப்புள்ளது. உங்களைப் போல இளைஞர்களால் கட்டாயம் துறைமுகத்தை கொண்டுவர முடியும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எந்த அளவு உணர்வும், உணர்ச்சியும் இருந்ததோ அதை நான் இங்கு பார்க்கிறேன்.

காமராஜருக்கு அடுத்தபடியாக ஜூனியர் காமராஜராக பொன்.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார். இவரைப்போன்ற அரசியல்வாதியை பார்க்க முடியாது. அவருக்காகத்தான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நான் இங்கு வந்திருக்கிறேன். கன்னியாகுமரி துறைமுகம் அமைந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு இயக்குனர் விசு பேசினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

14 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி அசத்தல்: தேசிய இளைஞர் விருதுக்கு குமரி இளம்விஞ்ஞானி தேர்வு

14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் விஞ்ஞானி மாஷா நசீம் தேசிய இளைஞர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மாஷா நசீம்(24). மாஷா நசீம் சிறுவயதில் இருந்தே ஏராளமான அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கி வந்துள்ளார். இதையடுத்து மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் தேசிய இளைஞர் விருதுக்கு இவரை தேர்வு செய்துள்ளது. வரும் ஜனவரி 12 முதல் 17-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

She is also selected for EDT program in US on May 2015 

பர்குலர் அலாரம்

நான் 9-ம் வகுப்பு படித்த போது, 14 வயதில் பர்குலர் அலாரத்தை கண்டு பிடித்தேன். இதன் மூலம் வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்தால் எளிதாக கண்டுபிடிக்கலாம். அப்போதே எனது தந்தை காஜா நஷீம் என்னை ஊக்குவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் இன்று வரை தொடர்வதால் ஆர்வத்துடன் புதிய கண்டுபிடிப்புகளில் இறங்கினேன். எம்.டெக் படித்துள்ள நான் இதுவரை மொத்தம் 14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கியுள்ளேன். எனது முய்சிகளுக்கு கணவர் அப்துல் பாஷிக் உறுதுணை புரிகிறார். இதில் முக்கியமானது நெருப்பு இல்லாமல் மின்சாதனம் மூலம் அரக்கை பயன்படுத்தி சீல் வைக்கும் கருவி. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் இரு வாக்குச் சாவடி மையங்களில் இம்முறை அமல்படுத்தப்பட்டது.

தேடி வந்த விருதுகள்

எனது கண்டு பிடிப்புகளுக்காக ஜனாதிபதி விருது, சர்வதேச விருது ஆகியவற்றை இரண்டு முறையும், ஐந்து முறை தேசிய விருதும் பெற்றுள்ளேன்.

எனக்கு பின்னால் வரும் தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக மாஷா ஆக்கத்திறன் மையத்தையும் நிறுவினேன். இதன் மூலம் 6 பேர் இதுவரை பல்வேறு விருதுகள் பெற்றுள்ளனர்.

மறைந்த ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம் தான் எனக்கு ரோல் மாடல். 6 முறை அவரை நேரில் சந்தித்து எனது கண்டுபிடிப்புகள் பற்றி விளக்கியுள்ளேன். உச்சி முகர்ந்து அவர் என்னை பாராட்டினார். குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியும் எனது கண்டுபிடிப்புகளை கண்டு வியந்து என்னை மிகவும் பாராட்டினார். இதுவரை 100-க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பும் எடுத்துள்ளேன்.

நிறைவை தருகிறது

கடந்த 2016-ம் ஆண்டு மாநில இளைஞர் விருதை அப்போதைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றேன். இளம் தலைமுறைகளை ஊக்குவிப்பதால் தேசிய இளைஞர் விருதுக்கு என்னை தேர்வு செய்திருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது. வருங்காலங்களில் இன்னும் அதிகமான விஞ்ஞானிகளை உருவாக்குவதே லட்சியம் என்றார் அவர் .

Source :  Tamil Hindu

http://tamil.thehindu.com/tamilnadu/article21910873.ece

குரூப்-4 : குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கையை நவம்பர் 14ம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 13 என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயல் காரணமாக மின்சாரம் சுமார் ஒருவாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆன்லைனில் இந்த பணிக்கு பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை

இதனால் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை குமரி மாவட்டத்தினர் விடுத்தனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் நலனைக் கருதி குரூப்-4 தேர்விற்கு விண்ணபிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் 21ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Top 6 Famous Foods/Cuisines of Nagercoil

Nanjil Nadu (Nagercoil) cuisine is one among the famous cuisines of Tamil Nadu such as Chettinadu cuisine, Kongunadu cuisine and Tamil cuisine. Since, Nanjil Nadu being home for many Keralites there is no wonder of its richness with coconut oil and coconut as regular ingredients in all dishes and curry.

Delectable recipes prepared here is a mix of Kerala and Tamil Nadu traditions. Seafood, chicken, mutton, beef, banana, and jack fruit are widely available and commonly used among the people.

Here we are listed top 6 famous foods to tease your taste buds with delicious Nagercoil cuisines but not limited to.

1. Ulunthan Choru (Lentil Rice)

Image Credit – kitchenfrau

Ulunthan Choru made of lentil (Urad Dal) and white rice is one of the traditional dishes of Nagercoil. It is best served with Black chutney, egg avail, and Pappad. This is a nutritional and protein rich food good for kids and women. Some people eat this dish with ghee and jaggery as well. Ulunthan choru is ‘healthiness with taste’.

2. Vendhaya Kuzhambu (Fenugreek Stew)

It is a tangy flavored semi-thick stew made of Fenugreek seed. Though the Vendhaya Kuzhambu is prepared all over Tamil Nadu in different styles, in Nagercoil the stew is very unique in taste and preparation. If you are a lover of spicy stews this is definitely for you.

3. Kinnathappam (Plate cake)

Image Credit – Wikimedia

Kinnathappam is a famous traditional dessert prepared almost all in occasions of Nagercoil. Kinnathappam literally means ‘Plate cake’ where Kinnam is plate and appam is cake. It is a Nagercoil version of Pancake with white rice and coconut milk. Kinnathappam is the best source of energy as it includes carbohydrates and nutrition.

4. Elay Appam

Image Credit – Azeeskitchen

Elay Appam, a much adored delicacy of Nagercoil, is an interesting sweet smelling dessert. In Tamil, Elay means Leaf. The mixture of rice flour, coconut, jaggery and other aromatic spices are wrapped with plantain leaf and steamed. You can feel the freshness and smell the sweet aroma of spices with plantain leaf.

5. Theeyal (Burnt Dish)

Image Credit – cucumbertown

Theeyal is a traditional vegetable stew, usually dark brown in color, served with plain white rice. Theeyal can be cooked with varieties of vegetables like drumstick, snake gourd, brinjal, pumpkin, black chenna or can be simply made with baby onions. Theeyal is a famous recipe you can find in almost every household of Nagercoil. It is an ideal food to take for picnic as “Kattu Saatham”.

6. Nanjil Fish Curry

Nagercoil cuisine cannot be complete without Nanjil Nadu Fish curry recipe. Nagercoil is best known for its seafood recipes. Nanjil Fish curry is the queen of all sea foods and a must have menu on your visit to Nagercoil. Traditional fish curry is cooked with grinded raw coconut called, ‘Pachai Thengai Curry’. The cooking style is more similar to Kerala cuisine. The special flavor and aroma of coconut oil lasts with your taste buds forever.


Accident Near aralvaimozhi in Kanyakumari district

நாகர்கோவில் அடுத்த ஆரால் வாய்மொழியில் சொகுசு கார் மற்றும் பால் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல் காரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலி 3 பேர் கவலைக்கிடமாக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

One die in bus Accident near kulasekaram

குமரி மாவட்டம் குலசேகரம் கல்லடிமாமூட்டில் காலை 8.15 மணி அளவில் நடந்த விபத்தில் புத்தன் கடையை சார்ந்த டிக் ஷன்ராஜ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார் அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய அருணாச்சலா வெள்ளிச் சந்தை கல்லூரி வாகனம் காவல்துறையினரால் மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில் பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிவேகமாக செல்வதே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

அதுமட்டுமில்லாது இந்த #அருணாச்சலா கல்லூரி வாகனம் ஏற்படுத்திய இரண்டாவது விபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அதிகாலையில் நடந்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Arunachala college bus accident near kulasekaram in second time. Before Mother and daughter injured in same Arunachala college bus.

Accident near manakudi one killed in st johns college bus

நேற்று மாலை மணக்குடி பாலம் செல்லும் வழியில் புனித ஜாண்ஸ் கலைகல்லூரி பேருந்து அதிவேகமாக வந்த வேளையில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து எதிர்முனை வளைவிலே வந்த நபரை தடத்திலே காலியாக்கியது. இதை வெளியில் வந்தால் கல்லூரி பெயருக்கு களங்கம் என மீடியா துறைக்கு ஒரு தொகையும்,வழக்கு போடாமல் இறந்த குடும்பத்திற்கு ஒரு தொகையும் செலுத்தி மறைத்துவிட்டனர். இறந்தவரின் குடும்பமோ மிக ஏழ்மை நிலை அன்றாட செலவிற்கு நடைபெறும் குடும்பம் குழந்தைகள் படிக்க கூட வழியில்லாத நிலை வேககட்டுப்பாட்டு கருவியை பொருத்தி வாகனத்தை அரசு அனுமதி பெற்றபின் அதை துண்டித்து வேகமாக பயன்படுத்தும் டிரைவர்கள் கண்டுகொள்ளாத அரசு,மறைக்க பேரம் பேசும் கல்லூரிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிகம் அதை விட விபத்து நடந்து இறந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை பணத்திற்கு விலை போகும் இந்த தமிழ்நாட்டை முகநூல் நண்பர்கள் பகிர்ந்து இவர்களின் கேவல செயல்களை கொஞ்சம் தட்டி கேளுங்கள் ஆர்.டி.ஒ கல்லூரி வாகனங்களை வெளித்தோற்றம் கண்டு அனுமதிக்காமல் ஆய்வு செய்து அனுமதிக்க,
மனிதன் இறந்தாலும் பரவாயில்லை கல்லூரி பெயரில் அக்கரை கொண்ட சுயநலமற்ற தன்னலவாதிகளை வருமானவரி சோதனைக்கு உட்படுத்தாமல் கருப்புபணமில்லா தமிழ்நாடும் பிறக்காது,இந்தியாவும் இருக்காது.

Source : Merlin Jacky fb