• Home
  • About
    • History
    • Pin Code
  • News
    • Health
      • Yoga
  • Tourism
  • Entertainment
  • Sports
    • Kabbadi
    • Cricket
  • Contact US
  • follow
    • Facebook

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்!

Nov 22, 2016 Health 0


உணவுதான் அமுதமும் விஷமும் ஆகிறது.நாம் உண்ணும் உணவே நம் பெரும்பாலானநோய்களுக்குக் காரணம். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலம்ஆரோக்கியத்தை நம் வசமாக்காலாம்.

veg

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோய்.நம்முடைய உடலில் தினசரி புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அழிக்கிறது. ‘சில உணவுகளுக்குப் புற்றுநோயைத்தடுக்கும் ஆற்றல் உண்டு’ என்கின்றன ஆய்வுகள். புற்றுநோயைத் தடுக்கும் 30 உணவுகள்என்னென்ன என்று பார்ப்போம்.

மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள், முதன்மையானது. இதில் உள்ளபாலிஃபீனால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. குர்க்குமின்என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. புற்றுநோய் உருவாகக்காரணமான புண்களை ஆற்றும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.

பூண்டு: பூண்டில் உள்ள கந்தகம் (Sulfur)  உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள பைட்டோகெமிக்கல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை. மேலும், புற்றுநோயால் வயிற்றில் ஏற்படும் கட்டிகளைக் குறைக்க பூண்டு உதவுகிறது.

இஞ்சி: பசியைத் தூண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர நோய்எதிர்ப்பு சக்தி கூடும். இஞ்சியின் காரத் தன்மைக்குக் காரணமான ‘ஜிஞ்சரால்’ புற்றுநோய்செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அழிக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும்ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது.

எள்: எள்ளில் தாமிரமும் கால்சியமும் நிறைவாக உள்ளன. வைட்டமின் பி மற்றும் இ, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம், புரதச்சத்து போன்றவையும் உள்ளன. தேன் மற்றும் எள்ளை ஒன்றாகக் கலந்து, தினமும் சாப்பிட்டுவர, தேனில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும். எள் வயிற்றில் உள்ள புண்ணைக்குணமாக்கும். இதில் உள்ள துத்தநாகம் தோல் புற்றுநோயைத் தடுக்கும்.

பட்டை: இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நம் உடலுக்குத்தேவையான எதிர்ப்புச் சக்தியைத் தந்து, நுரையீரல் புற்றுநோய் உட்பட சில வகைபுற்றுநோய்களையும் வராமல் காக்கிறது.

மிளகு: மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் மற்றும் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. மிளகில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, புற்றுநோய்செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

முளைகட்டிய பயறு: இதில் லைசின் எனப்படும் அமினோ அமிலம் அதிக அளவில்உள்ளது. சல்ஃபோராபேன் என்ற ரசாயனம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. பயறாகச்சாப்பிடுவதைக் காட்டிலும், முளைகட்டி பயறாகச் சாப்பிடும்போது, அதில்சல்ஃபோராபேன் அளவு 50 சதவிகிதம் அதிகரிக்கிறதாம். முழுப் பலனையும் பெற, முளைகட்டிய பயறைப் பச்சையாகச் சாப்பிடுவதே சிறந்தது.

பச்சைப் பட்டாணி: இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கோமெஸ்ட்ரோல்(coumestrol) என்ற நுண் ஊட்டச்சத்து இருப்பதால் ரத்தப் புற்றுநோய், நுரையீரல்புற்றுநோய், ஆசனவாய்ப் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காக்கிறது. ஒரு கப்பச்சைப் பட்டாணியில் 10 மி.கி அளவுக்கு கோமெஸ்ட்ரோல் உள்ளது. பச்சைப்பட்டாணியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல்தடுக்கலாம்.

முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸில் இருக்கும் நியூட்ரியன்ட்ஸ் புற்றுநோய் செல்களின்வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும். முட்டைக்கோஸில் காணப்படும் இன்டோல்-3-கார்பினோல் (Indole -3-carbinol) மார்பகப் புற்றுநோயிலிருந்துப் பாதுகாக்கிறது.

கேரட்: கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின் எல்லா வகைப் புற்றுநோய்களின்தீவிரத்தையும் குறைக்கிறது. வேகவைக்காத பச்சை கேரட்டாக எடுத்துக்கொள்வதுமிகவும் நல்லது.

தக்காளி: வைட்டமின் சி, லைக்கோபீன், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும். குறிப்பாக, ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

வெங்காயம் – வெங்காயத்தாள்: புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்து வெங்காயம்.வெங்காயத்தில் உள்ள அலிசின், கந்தகம் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும்ஆற்றல் பெற்றது. மேலும், வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவது நல்லது. வெங்காயத்தாளில் உள்ள கந்தகம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது. வைட்டமின்ஏ, இ, சி, கே, தயமின், தாமிரம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம்,மங்கனீஸ், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும்நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கானவாய்ப்பைக் குறைக்கிறது.

கீரைகள்: பச்சைக் கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், குடல்புற்றுநோயைத் தடுக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இதில் உள்ள வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஃபோலேட், நார்ச்சத்துக்கள் என அனைத்தும் இணைந்து புற்றுநோய் செல்களை அழிக்கின்றன. பொதுவாக ஆரஞ்சு நிறக் காய்கறி, பழங்கள் அனைத்தும் மார்பகப் புற்றுநோய், நுரையீரல்,பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

 

காளான்: இதிலுள்ள லெக்டின், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைகளில், உள்ளமோனோதெர்ஃபேன்கள் (Monoterpenes), புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன்களைஅழிக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்து உள்ள சிட்ரஸ் பழச்சாறுகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாய், தொண்டை மற்றும்வயிற்றில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கும்.

கிவிப் பழம்: ஃபோலிக் அமிலம், தாமிரம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, இ, கேநிறைந்தது. வைட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களைத் தடுக்கும். ரத்தசோகையைத்தடுக்கும். இதய நோய்களிலிருந்து காக்கும்.

ஆப்பிள்: உடல் உள் உறுப்புகளும் சுரப்பிகளும் செயல்பட உதவும் நுண்ணூட்டச்சத்துக்களும் பல்வேறு அமிலங்களும் ஆப்பிளில் உள்ளன. பச்சை ஆப்பிள்களில் உள்ளஆன்டிஆக்ஸிடன்ட், செல்களை புதுப்பிக்கும் செயலைத் தூண்டுகிறது. புற்றுநோயைஉருவாக்கும் செல்களைத் தடுக்கிறது.

சோளம்: மாவுச்சத்து,  நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின், தயமின்(Thiamine) மற்றும் நியாசின் ஆகியவை உடலில் உள்ளஉப்பைக் கரைக்கும். புற்றுநோய் செல்களின் பாதிப்பைத் தடுக்கும்.

செர்ரி: மெலட்டோனின் (Melatonin) எனும் நோய் எதிர்ப்புப் பொருள், புற்றுநோயைத்தடுக்கும். புளிப்பான செர்ரி பழத்தில் லூட்டின், ஸி-சாந்தின், பீட்டாகரோட்டின் போன்றஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.

மாதுளை: இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்,ரிபோஃப்ளேவின், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்களை கொண்டது. முதுமையைத்தடுக்கும்.மாதுளை, ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை கொண்டது.

பேரீச்சம் பழம்: வைட்டமின் ஏ, இ, பி காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பாதாம்: இதில் உள்ள வைட்டமின் பி, புற்றுநோயை எதிர்க்கும் சக்திகொண்டது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறு, இதயக் கோளாறு, சர்க்கரைநோய், ரத்தசோகை,ஆண்மைக் குறைவு மற்றும் பித்தப்பைக் கல் போன்ற பிரச்னைகளைக் களைவதிலும்பாதாம் பருப்பு துணைபுரிகிறது.

புரோகோலி: இண்டோல்-3-கார்பினோல் (Indole -3-carbinol), சல்ஃபோராபைன் உள்ளதால்மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ப்ராஸ்டேட் புற்றுநோயைக் குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி புற்றுநோயைஉருவாக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகளைத் தடுக்கும்.

கிரீன் டீ: இதில் உள்ள கேட்டசின் என்ற பொருள், நுரையீரல், மார்பகம், ப்ராஸ்டேட்,குடல், சிறுநீர்ப்பை மற்றும் சருமப் புற்றுநோய்களைத் தடுக்கும். தினமும் ஒரு கப் டீசாப்பிடலாம்.

முட்டை: தினசரி ஒரு முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதால் மார்பகப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். முட்டையில் உள்ள கோலைன் என்றபுரதம் நரம்பு மண்டலப் பிரச்னைகளைக் குறைக்கிறது. மேலும் மூளையைக்கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும், நம் உடலில் உள்ள செல்களை சீராக இயக்கவும்உதவுகிறது.

மீன்: மீன்களில் உள்ள எண்ணெய் உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோயைக்குணமாக்கும். மீன்களில் உள்ள புரோலாக்ட்டின் என்ற சேர்மம் ரத்தப் புற்றுநோய்க்குக்காரணமான திசுக்களை அழிக்கும்.

ஆலிவ் எண்ணெய்:  ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு, புற்றுநோய்செல்லுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. ஆலிவ் எண்ணெயில் உள்ளபாலிஃபீனால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

அவகேடோ: உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பைஅதிகரிக்கும். புரதச்சத்து, மாவுச்சத்து மற்றும் லூட்டின் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட்நிறைந்திருப்பதால், ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும் பெண்களுக்குவரும் மார்பகப் புற்றுநோயையும் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம், ஒலியிக் அமிலம், வைட்டமின் கே உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். நரம்புமண்டலத்தை வலுப்படுத்தும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

டார்க் சாக்லேட்: இதில், கொக்கோ நிறைந்துள்ளது. கொக்கோவில் உள்ள பென்டாமெர்போன்ற ஃபிளேவனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும். புற்றுநோயில் இருந்துவிலகி இருக்க உதவும் மிக ருசியான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.


  • cancer
  • tweet
வில்லுக்குறி குளம் சுத்தப்படுத்தும் பணி முடிவடைந்தது Bhuvneshwar returns for last three Tests

Related articles
More in this category
  • what can be eaten as a substitute for rice and wheat?
    what can be eaten as a substitute for...

    Dec 18, 2018 0

  • Health Benefits of Turmeric
    Health Benefits of Turmeric

    Dec 16, 2018 0

  • Food is a Medicine, Dr. G. Sivaraman
    Food is a Medicine, Dr. G. Sivaraman

    Nov 23, 2016 0

  • Natural home remedies for Fever
    Natural home remedies for Fever

    Nov 07, 2016 0


Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Kanyakumari

This architectural pilgrim centre derive its name from the Virgin goddess Kanyakumari, to whom the temple is dedicated. Goddess Parashakti (Devi Kanya) did punishment to protect shiva's hand in a marriage. She sweared to remain a virgin as she couldn't attain her objective...

Read More>>

Temples

  • Chitharal Malaikovil – Chitharal Cave Temple, Kanyakumari
    Chitharal Malaikovil – Chitharal Cave Temple,...

    Dec 19, 2017 0

  • Padmanabhapuram Saraswathi Temple, Nagercoil, Kanyakumari
    Padmanabhapuram Saraswathi Temple, Nagercoil, Kanyakumari

    Dec 19, 2017 0

  • Mandaikadu Bhagavathi Amman Temple, Kanyakumari
    Mandaikadu Bhagavathi Amman Temple, Kanyakumari

    Dec 19, 2017 0

  • Keleswaram Mahadeva Temple in Kerala
    Keleswaram Mahadeva Temple in Kerala

    Dec 19, 2017 0

  • Vettuvenni Sastha Temple in Nagercoil
    Vettuvenni Sastha Temple in Nagercoil

    Dec 02, 2017 0

    Prev
  • 1
  • 2
  • Next
    Prev
  • Next
Copyright 2018 Nagercoilinfo.com / All rights reserved