The KanyaKumari District Six students in the state Second-ranked In SSLC

குமரி மாவட்டத்தை சேர்ந்த  6 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் 2-வது இடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குமரி மாவட்டத்தில் 6 பேர் 498 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்துள்ளனர்

இவர்களில் 3 பேர் நாகர்கோவில் புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான அனுருத்ஸ்ரீ கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ரியா வில்சன் : 498 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்த புனித அல்போன்சா பள்ளியின் மற்றொரு மாணவி ரியா வில்சன். இவரும் மாணவர் அனுருத்ஸ்ரீயைப் போல மொழிப்பாடங்களில் தலா 99, பிற பாடங்களில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார்

ரிட்டு ஷெரின்:  498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்த புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இன்னொரு மாணவி ரிட்டு ஷெரின் தமிழ் தவிர பிற பாடங்கள் அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அபர்ணா: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அபர்ணா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

லட்சுமி: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள டி.வி.டி. மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லட்சுமி 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

லிட்டில் ஷர்மியா: தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லிட்டில் ஷர்மியா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், குமரி மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்

nagercoil1-sslc-result nagercoil-sslc-result1

nagercoil-sslc-result2

nagercoil-sslc-result

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *