Tag Archives: Marthandam

Amma Unavagam inaugurated in Kanyakumari

Amma Uvavagam in kanyakumariMs. Jayalalithaa declared open four canteens (Amma Unavagam) in four municipalities of Kanyakumari district also through video-conferencing.

The canteens are in Vadaseri bus stand and on Kanyakumari Government Medical College Hospital premises here. The other two canteens are in the market in Padmanabhapuramn near Marthandam bus stand in Kuzhithurai and in Colachel town.

Nagercoil MLA Nanjil A. Murugesan, district panchayat chairman M.S. Saradhamani and Nagercoil municipal chairperson Meena Dev among others were present at Vadaseri.

Source : The Hindu

மார்த்தாண்டம்– ரெயில்நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு

Marthandam:ரெயில் நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைப்பணி

மார்த்தாண்டம்   பஸ் நிலையம் அருகில்  இருந்து குழித்துறை ரெயில் நிலையம் வழியாக ஐரேனிபுரத்திற்கு ஒரு சாலை செல்கிறது இந்த    சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை 500 மீட்டர் தூரம் சிமெண்டு தளம் அமைக்கவும், ரெயில் நிலையத்தில் இருந்து ஐரேனிபுரம் வரை தார்தளம் அமைக்கவும் நெடுஞ்சாலைதுறை சார்பில் ரூ. 1 கோடி அனுமதிக்கப்பட்டது.

அதன்படி ரெயில்நிலையம் பகுதியில் இருந்து ஐரேனிபுரம் வரை சாலையில் தார்போடும் பணி நடந்து முடிந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை சிமெண்டு  தளம் போட பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, அந்தபகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கவும், பக்க ஓடைகள் தரமானதாக  அமைக்கவும் வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் வேலை நிறுத்தப் பட்டது.

மீண்டும் தொடங்கியது

அதன் பின்னர், நேற்று மார்த்தாண்டம் ரெயில் நிலைய சாலை தொடங்கும் இடத்தில் சாக்கடை கால்வாய்  இணைப்பிற்காக சிமெண்டு குழாய் பதித்து சாலை பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனால், சிமெண்டு குழாய் போடுவதால் தரம் இருக்காது எனக்கூறி அந்த பகுதி மக்களும், ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ராமச்சந்திரன், நல்லூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், கழிவுநீர் ஓடையில் சிமெண்டு குழாய் பதிக்கும் பணியும், சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியும் தொடங்கியது.

Source : Daily thanthi

மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி

Marthandam flyover : மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.போக்குவரத்து நெருக்கடிகுமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக மார்த்தாண் டம் விளங்குகிறது. இங்கு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், மற்றும் தினசரி சந்தை போன்றவை அமைந்துள்ளன. மார்த்தாண் டம் பகுதிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.மார்த்தாண்டத்தில் அமைந் துள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக அமைந் துள்ளது. இதனால், எப் போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.தொடரும் போக்குவரத்து நெருக்கடியால், திருவனந்த புரம், கன்னியாகுமரி போன்ற முக்கியமான பகுதிகளுக்கும், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர் களும், ரெயில் நிலையத் திற்கு செல்பவர்களும், மாணவ- மாணவிகளும், பொதுமக்க ளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் கடும் போக்குவரத்து நெருக் கடியால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.மேம்பாலம்இந்தநிலையில் மார்த் தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மாற்று ஒருவழிப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.இதற்கிடையே மார்த்தாண் டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.அதன் ஒருகட்டமாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் மண் ஆய்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக ஆழ்துளை போடப்படும் எந்திரம் மூலம், ஊழியர்கள் மண் ஆய்வு செய்து வருகிறார்கள். மண் ஆய்வுப்பணி தொடங்கி உள்ளதால் மார்த் தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கலாம் என பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது

Source : Daily Thanthi