Heavy traffic in marthandam kanyakumari district

marthandam-traffic

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினம்தோறும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் கள் ஆமை வேகத்தில் சிரயான்குழி முதல் குழித்துறை வரை சுமார் மூன்று கிலோமீட்டர் செல்ல ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகின்றது.

 
 சதாரணமாக காலை எட்டு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை தொடரும் இந்த அவலத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி விருந்து நகர் உட்பட பல மாவட்டங்களை சேர்த்த விமானபயணிகளும் சிக்கி பல நேரங்களில் விமானங்களை தவற விடுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் விடியற்காலையிலே மார்த்தாண்டத்தை தாண்டி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் பயணத்தில் கவனம் செலுத்தும் கட்டாய சூழலுக்கு தள்ளபட்டுள்ளனர் இது போன்று அரசு அலுவலர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் இருமாநிலத்தை சேர்ந்த பலதரப்பினர் சுற்றுலா பயணிகள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இங்கு சாதாரண நாட்களில் ஒரு மணிநேரமும் சீசன் நாட்களில் இரண்டு மூன்று மணிநேரம் வரை டிராபிக் ஜாம் பகுதியில் சிக்கி சூட்டையும் புகையையும் உணவாக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
 
 இந்த மூன்று கிலோமீட்டர் பகுதிகளில் விபத்து நடக்காத நாட்களே இல்லை உயிர் பலி நடக்காத வாரமே இல்லை பாதசாரிகளுக்கு நடக்க பாதையே இல்லை ராஜவழிபாதை என்று அழைக்கப்பட்ட 120 அடி சாலை பம்மம் முதல் தட்டாகுடி இறக்கம் வரை தற்போது 20 அடி மட்டும் காணபடுகின்றது வர்தகர்கள் இந்த எல்லைக்குள் சுமார் இருநூற்று ஐம்பது க்கும் குறைவான அளவு இருப்பர் அவர்களுக்கு கடைகள் வாடகைக்குக் கொடுத்தவர்கள் நூற்றுக்கும் குறைவானவர்கள் இவர்களின் கடைகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் சில இடம் இடிக்கப்பட்டு விடும் என்பதற்காக சங்கம் என்ற பெயரில் வர்த்தகர்கள் பாதிக்கபடுவார்கள் என்ற புரளியை கிளப்பி பெரும் முதலாளிகள் குளிர்காய பார்கின்றனர். 
marthandam-traffic-kk
 
 நெல்லை திருவனந்தபுரம் சென்னை போன்ற பகுதிகளில் ஏறாளமான மேம்பாலங்கள் வந்ததால் எந்த வர்த்தகர்களுக்கும் வியாபாரம் பதிப்பு ஏற்படவில்லை மாறாக வியாபாரம் வளர்ச்சியே கண்டுள்ளது மாவட்ட வளர்ச்சிக்கு தடை நிற்கும் முதலாளித்துவ சக்தி களுக்கும் சந்தரப்பவாத அரசியல் கட்சிகளுக்கும்பாடம் புகட்டவும் நம் தலைமுறை போக்குவரத்து நெரிசல் இன்றி இலக்கை அடைய மேம்பாலம் தேவை சிந்தித்து செயல்பட அன்பு வேண்டுகோள்.

ஐ.அருள் குமார்
கன்னியாகுமரி மாவட்ட பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *