Category Archives: Latest News

Accident near Thuckalay : 3 year old girl & driver’s death

Ambulance-near-Nagercoil-accident

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனை அருகே பனவிளையைச் சேர்ந்தவர் அபுஜாசிம் (வயது 33). இவர் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஐஷா பேகம் (29). இவர்களுக்கு அர்ஷியா ஜஸ்னா (3), அல்பிஷா எஸ்னா (1½) என்ற பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்தநிலையில் அர்ஷியா ஜஸ்னா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாள். இதையடுத்து அவளுக்கு நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஆம்புலன்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு ஸ்கேன் எடுக்கச் சென்றனர்.

சிறுமி–டிரைவர் சாவு

ஆம்புலன்ஸில் சிறுமி அர்ஷியா ஜஸ்னாவுடன், அவளுடைய தந்தை அபுஜாசிம், ஆஸ்பத்திரி நர்சான ஆரல்வாய்மொழி பொய்கை நகரைச் சேர்ந்த ஏஞ்சல் கிறிஸ்டி (22) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை சுசீந்திரம் அருகில் உள்ள நல்லூர் இளையநயினார் குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ்பாபு (23) என்பவர் ஓட்டினார். சிறுமிக்கு ஸ்கேன் எடுத்தபிறகு, ஸ்கேன் அறிக்கையை காண்பிப்பதற்காக அதே ஆம்புலன்சில் அவர்கள் வெள்ளமடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் தேரேகால்புதூர் அருகே ஒரு பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்புலன்சை ஓட்டிய டிரைவர் பெனிக்ஸ்பாபு, சிறுமி அர்ஷியா ஜஸ்னா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். மேலும் சிறுமியின் தந்தை அபுஜாசிம், நர்ஸ் ஏஞ்சல் கிறிஸ்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சோகம்

விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்–இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், மோகன்குமார், மணிவண்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விபத்தில் இறந்த சிறுமி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார், டிப்பர் லாரியின் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகில் உள்ள பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது விபத்து நடந்த பகுதி, அடிக்கடி விபத்து நடைபெறக்கூடிய பகுதி என போலீசாரால் கண்டறியப்பட்டு ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய பிரதிபலிப்பு விளக்குகள் அமைக்கப்பட்ட பகுதியாகும். இருப்பினும் அதே இடத்தில் நேற்று நடந்த விபத்தில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

 

Source Dailythanthi

colachel : மீனவர்கள் வலையில் 300 கிலோ எடைகொண்ட சுறா மீன்!

colachal-sura-fish

 

குளச்சலை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. அவர்கள் பிடித்து வரும் மீன்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடத்தில் ஏலம் விடப்படும்.

குளச்சலில் மீனவர்கள் வலையில் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.48 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

The Revival of Kanyakumari’s 2500 Ponds as a Youth Movement

Pond cleanup

This is Pratheesh K V. He owns a small provisional store in Kaatathurai. Sometime ago, he brought together a few of his friends and started இயற்கையுடன் ஒரு பயணம் இளைஞர்கள் இயக்கம் கன்யாகுமரி and initiated a Pond cleanup near his home town.
Sparked by pure enthusiasm and nothing else, not even a free cup of tea, the boys felt the headrush of achievement for the first time when they had it cleaned and restored to its pristine state. One spurred two and three and soon there were five ponds cleaned in one year.
The pond at Villukury that was cleaned in November last was his initiative too. And it was well supported by Justin & Anshino Brightlin of the Screener Magazine, Kanyakumari Memes & was funded by IMA Martandam
Now they have set eyes on another pond right opposite to the one they cleaned. Being in the middle of an agri-dense area, pond cleanups like these are going to prove beneficial in the times of failing rains.
Remember … Pratheesh K V is not an “Environmentalist” of the NGO makeup nor is he spending time penning proposals for INGO funding. He just believes in his vision of restoring ponds to their natural biodiversity & is moving on his own in that direction (making the upwardly mobile educated middle class look like Zombies rolling in their own shit!).
He owns a small shop (not Supermarket) that barely feeds his family. He intends to do more & so, tomorrow at 9am, is starting work at the Villukury pond Opp. Kumaran Petrol Bunk. Be there! Make a Contribution for a good cause!
Tomorrow, being a Sunday, try snatch your kids away from their monitors & let their feet get wet with mud! Pond Cleaning could soon be a Weekend habit around here! And we need more weekends in a hurry, coz there are 2500 ponds to clean! Because, we have failed in totality, neglected our local treasures, buried a 1000 ponds in 15 years, cant do anything about it and are not even ashamed of our great impotency, come bury your sins here! Be there tomorrow at 9.

Nagercoil Sudalaimuthu Krishnan (NSK) சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை

நாகர்கோவிலின் அடையாளங்களில் ஒன்று ‘மதுர பவனம்’. மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கான்கிரீட் வீடும் அதுதான். கம்பீரமான அந்த வீட்டை இப்போது புனரமைக்கக் கூட வசதியின்றி தவிக்கின்றனர் கலைவாணரின் வாரிசுகள்.

N._S._Krishnan

நாகர்கோவில், ஒழுகினசேரி யில் பிறந்த, நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ் ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தனது தொடக்க காலங்களில் நாடகக் கொட்டகையில் சோடா விற்பனையாளராகவும், டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கி போடுபவராகவும், வில்லுப்பாட்டு மற்றும் நாடக கலைஞராகவும், பல தொழில்கள் செய்து, தனது திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர் என்.எஸ்.கே.

திரைப்படங்களில் நகைச்சுவை யுடன், கருத்துகளையும் விதைத்த வருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் கொடுத்தவர் பம்மல் கே.சம்பந்த முதலியார். ஈகை பண்பிலும் என்.எஸ்.கே. சிறந்தவர். அப்படிப்பட்டவரின் வீடு இன்று குடும்பத்தினரின் வறுமையால் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

அண்ணா, எம்ஜிஆர் தங்கினர்

என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள் உமைய பார்வதி கூறும் போது, ‘‘நாகர்கோவிலில் ‘இன்ப கனவு’என்ற நாடகம் நடந்த போது, சென்னையில் இருந்து நடிகர்கள் வந்திருந்தனர். நாடகத்தைப் பார்க்க எம்ஜிஆரும் வந்திருந்தார். அப்போது இந்த வீட்டில் எம்ஜிஆர் 12 நாட்கள் தங்கியிருந்தார். ஒரே மக்கள் கூட்டம். மாடியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து எம்ஜிஆர் கையசைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாவும் இங்கு வந்துள்ளார். அவர் படுத் திருந்த கட்டிலை, அவர் ஞாபக மாக இப்போதும் பராமரித்து வருகிறோம்.

உலகத்திலேயே 2 நகைச்சுவை நடிகர்களுக்குத்தான் சிலை உண்டு. ஒன்று சார்லி சாப்ளின், மற்றொன்று கலைவாணர். எம்ஜிஆர்தான் நாகர்கோவிலில் கலைவாணருக்கு சிலை வைத் தார். காந்தியின் மீது அதிக பற்று கொண்டவர் கலைவாணர். காந்தி இறந்த செய்தி கேட்டு 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். நாகர்கோவில் பூங்காவில் காந்தி நினைவு ஸ்தூபி அமைத்தார்.

மாமாவோட, காலத்துக்கு பின், என் கணவர் என்.எஸ்.கே.கோலப் பனுக்கு திரைத்துறையில் நடிக்க எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக வந்தார். ஆனால், இளவயதிலேயே என் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த 22-வது நாளில் எம்ஜிஆரும் மறைந்தார்.

எங்கள் வீட்டில் இறப்பு நடந்து 41 நாட்கள் ஆகாததால் போகக்கூடாது என பலர் சொன்னார்கள். ஆனால், நாங்கள் ஊருக்குத் தெரியாமல் குடும்பத்தோடு சென்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

கலைவாணரும், என் கணவரும் இறந்த பின் எங்கள் குடும்பம் வறுமையில் விழுந்தது. எனக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள். பிள்ளைகளும் தாத்தா, அப் பாவைப் போல சினிமா துறையில் வர வேண்டும் என முயற்சிக் கின்றனர். ஆனாலும் ஜொலிக்க முடியவில்லை. உண்மையான பேரன்களுக்கு இன்னும் திரைத் துறை கனவாகவே உள்ளது’’ என்றார்.

ரஜினிகாந்த் – கமல்ஹாசன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணர் குடும்பம் கஷ்டப்படுவது குறித்து நடிகர் ரஜினிக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி மூலம் இக்குடும்பத்தை தொடர்புகொள்ள சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் ஏனோ உதவியை மறுத்து விட்டனர்.

கமல்ஹாசன் கலைவாணர் மீது அதீத பற்று கொண்டவர். இப்போதும் என்.எஸ்.கே. குடும்பத்தினர் சென்னை சென்றால் கனிவோடு விசாரிப்பாராம். 5 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வந்துள்ளார். வீட்டை வாசலில் இருந்து பார்த்ததுமே கண்கலங்கியுள்ளார்.

nagercoil-s-k

Source: Tanil Hindu – http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article9397789.ece?homepage=true

வில்லுக்குறி குளம் சுத்தப்படுத்தும் பணி முடிவடைந்தது

nagercoilinfo

கடந்த ஒன்றரை மாதங்களாக வில்லுக்குறி குளம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதில் சந்தோஷமான காரியம் என்னவென்றால் இந்த குளத்தை சுத்தப்படுத்தும் பணி 20/11/2016 அன்றோடு முடிவடைந்தது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை 12 ஆண்டுகளாக முட் புதர்களும் செடி கொடிகள் ஆக்கிரமித்து வைத்திருந்தன. இதை சுத்தபடுத்துவது மிகுந்த சவாலான காரியம்மாக இருந்தது.

இதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்திய ஸ்க்ரீனர் குழுமத்தை சேர்ந்த ஜஸ்டின் , ஆன்ஷியோ அவர்கள், நண்பர் பிலெஸ்து மற்றும் இயற்கை உடன் ஒரு பயணம் கிளப் நிறுவனர் பிரதீஷ், மற்றும் நம் பேஜ் உறுப்பினர்கள் ஆல்ஜின், லிங்கேஷ், கணேஷ், அனந்து மற்றும் நண்பர்கள்(கன்னியாகுமரி மீம்ஸ்) அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எங்களுக்கு உதவியவர்கள்:

Indian Dental Association, Marthandam.
Makkal paathai.
SRKBV School Managing Director.
Kumaran Petroleum.
Tata Hitachi, JCB, Hyundai operators and owners.
Professor. Neelakandan and his brother (Locals).
Thinamani Newspaper.

மேலும் அடுத்த கட்டத்திற்கு இதனை வெற்றிகரமாக கொண்டு செல்வோம்.
இயற்கையை பாதுகாப்போம்.

– Team Kanyakumari memes.

Kanyakumari : INTACH volunteers clean Pazhayar river

Pazhayarriver-cleaning-intach

Pazhayar, a major river flowing in Kanniyakumari district and source of irrigation for farmers in its vicinity has become polluted due to the draining of sewage and unmindful dumping of garbage.
The worst stretch is between Ozhuginasery flyover and Suchindram as drainage is being let into it. This has resulted growth of weeds such as water Hyacinth and it blocks the free flow of water.
Pollution has prevented people living on its banks from using the river for their personal chores.
The Nagercoil Chapter of INTACH has begun an initiative to clean the river with the cooperation of civil society, said its Convener R.S. Lal Mohan.
Over 30 volunteers from Bhairavi Foundation, Aam Aadmi Party and Consumer Protection Centre have lent a helping hand to clean the river for about a kilometre from Suchindram Bridge to Ozhuginasery flyover, Dr. Lal Mohan said.
He added that the cleaning process would be carried out every Sunday between 9 a.m. and 3 p.m.

Thiruvattar : திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் டீக்கடைக்குள் புகுந்தது 7 பேர் படுகாயம்

Luxury-car-ran-erratically-near-Thiruvattar-tikkataikkul_nagercoilinfo

திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

டீக்கடைக்குள் புகுந்த கார்

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தாணவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (வயது 26). இவர் சொகுசு காரில் அழகியமண்டபத்தில் இருந்து மாத்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். காரில் ஜஸ்டின் ராஜ் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் கும்மாளம் இட்டபடி காரில் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் கார் வேர்கிளம்பி அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே சொகுசு கார், அந்த பகுதியில் ரோட்டோரம் இருந்த தங்கையா (71) என்பவருடைய டீக்கடைக்குள் புகுந்தது.

7 பேர் படுகாயம்

இந்த விபத்தில் தங்கையா, டீக்கடைக்குள் இருந்த வீயன்னூரை சேர்ந்த பால்ராஜ் (48) மற்றும் சசிகுமார் (45), கடைக்கு வெளியில் நின்ற  பூவங்கோடை சேர்ந்த மனோன்மணி (60), வேர்கிளம்பியை சேர்ந்த ரகு (40), அருவிக்கரையை சேர்ந்த ஜோன்ஸ் (40), காரை ஓட்டிவந்த ஜஸ்டின் ராஜ் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.

இதில் மனோன்மணி, ரகு, ஜோன்ஸ், தங்கையா, ஜஸ்டின் ராஜ் ஆகிய 5 பேரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பால்ராஜ், சசிகுமார் ஆகிய 2 பேரும் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஜஸ்டின் ராஜ் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

kanyakumari : அரை நூற்றாண்டு வரலாறு அடிபட்டு போனது

சில தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே, ஆட்சி அமைக்கும் என்ற, ‘ராசி’ உண்டு. அந்த வகையில், அரை நுாற்றாண்டாக இந்த ராசி உடைய முக்கியமான தொகுதி, கன்னியாகுமரி.
கடந்த, 1971ம் ஆண்டு முதல், இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே, மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது.

3114

1971ல் நடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ராஜா பிள்ளை வெற்றி பெற்றார்; கருணாநிதி தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைந்தது.பின், தி.மு.க.,வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவங்கி, 1977ல் சட்டசபை தேர்தலை சந்தித்தார். 1977 முதல், 84 வரை, கன்னியாகுமரி தொகுதி, அ.தி.மு.க., கோட்டையாகவே இருந்தது.அதன்பின், 1989ல் நடந்த தேர்தலில், மீண்டும் இங்கு தி.மு.க., வேட்பாளராக சுப்பிரமணிய பிள்ளை வெற்றி பெற, தி.மு.க., ஆட்சி அமைத்தது. 1991 தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற, ஜெயலலிதா, முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார்.

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், 1996ல் தி.மு.க.,வின் சுரேஷ்ராஜனும், 2001ல், அ.தி.மு.க.,வின் தளவாய் சுந்தரமும், 2006ல், சுரேஷ்ராஜனும், 2011ல், கே.டி.பச்சைமாலும் வெற்றி பெற்றனர். அப்போதெல்லாம் அவர்கள் சார்ந்த கட்சிகளே ஆட்சி பீடத்தில் அமர்ந்தன.
பிரிந்த ஜாதி ஓட்டுகள்தொகுதியில் பெரும்பான்மையாக வெள்ளாளர் சமுதாயத்தினர் தான் உள்ளனர். அதனால் தான், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே, தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகள் நிறுத்தி வந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2011ல் முதல் முறையாக, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கே.டி.பச்சைமால் நிறுத்தப்பட்டார்.

குளச்சல் தொகுதியைச் சேர்ந்த அவர், இங்கு வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனார். அப்போது, இந்த தொகுதியில் போட்டியிட்ட வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க., பாணியை பின்பற்றி, இம்முறை கன்னியாகுமரி தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக கிறிஸ்தவ நாடாரான ஆஸ்டின் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து, வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் போட்டியிட்டார்.

இதில், அரை நுாற்றாண்டு வரலாற்றை மாற்றும் வகையில், மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்க, தொகுதியில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரமும், பா.ஜ., வேட்பாளர் மீனா தேவும் போட்டியிட்டதால், ஜாதி ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வின் நாடார் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பாகி விட்டது.

தி.மு.க., – அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம், 5,912 ஓட்டுகள் தான். ஆனால், பா.ஜ., வேட்பாளரோ, 24 ஆயிரத்து, 638 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் பெரும் பங்கு, வெள்ளாள சமுதாயத்தினரின் ஓட்டுகள் என்பதை மறுக்க முடியாது.

Heavy traffic in marthandam kanyakumari district

marthandam-traffic

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினம்தோறும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் கள் ஆமை வேகத்தில் சிரயான்குழி முதல் குழித்துறை வரை சுமார் மூன்று கிலோமீட்டர் செல்ல ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஆகின்றது.

 
 சதாரணமாக காலை எட்டு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை தொடரும் இந்த அவலத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி விருந்து நகர் உட்பட பல மாவட்டங்களை சேர்த்த விமானபயணிகளும் சிக்கி பல நேரங்களில் விமானங்களை தவற விடுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் விடியற்காலையிலே மார்த்தாண்டத்தை தாண்டி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் பயணத்தில் கவனம் செலுத்தும் கட்டாய சூழலுக்கு தள்ளபட்டுள்ளனர் இது போன்று அரசு அலுவலர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் இருமாநிலத்தை சேர்ந்த பலதரப்பினர் சுற்றுலா பயணிகள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இங்கு சாதாரண நாட்களில் ஒரு மணிநேரமும் சீசன் நாட்களில் இரண்டு மூன்று மணிநேரம் வரை டிராபிக் ஜாம் பகுதியில் சிக்கி சூட்டையும் புகையையும் உணவாக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 
 
 இந்த மூன்று கிலோமீட்டர் பகுதிகளில் விபத்து நடக்காத நாட்களே இல்லை உயிர் பலி நடக்காத வாரமே இல்லை பாதசாரிகளுக்கு நடக்க பாதையே இல்லை ராஜவழிபாதை என்று அழைக்கப்பட்ட 120 அடி சாலை பம்மம் முதல் தட்டாகுடி இறக்கம் வரை தற்போது 20 அடி மட்டும் காணபடுகின்றது வர்தகர்கள் இந்த எல்லைக்குள் சுமார் இருநூற்று ஐம்பது க்கும் குறைவான அளவு இருப்பர் அவர்களுக்கு கடைகள் வாடகைக்குக் கொடுத்தவர்கள் நூற்றுக்கும் குறைவானவர்கள் இவர்களின் கடைகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் சில இடம் இடிக்கப்பட்டு விடும் என்பதற்காக சங்கம் என்ற பெயரில் வர்த்தகர்கள் பாதிக்கபடுவார்கள் என்ற புரளியை கிளப்பி பெரும் முதலாளிகள் குளிர்காய பார்கின்றனர். 
marthandam-traffic-kk
 
 நெல்லை திருவனந்தபுரம் சென்னை போன்ற பகுதிகளில் ஏறாளமான மேம்பாலங்கள் வந்ததால் எந்த வர்த்தகர்களுக்கும் வியாபாரம் பதிப்பு ஏற்படவில்லை மாறாக வியாபாரம் வளர்ச்சியே கண்டுள்ளது மாவட்ட வளர்ச்சிக்கு தடை நிற்கும் முதலாளித்துவ சக்தி களுக்கும் சந்தரப்பவாத அரசியல் கட்சிகளுக்கும்பாடம் புகட்டவும் நம் தலைமுறை போக்குவரத்து நெரிசல் இன்றி இலக்கை அடைய மேம்பாலம் தேவை சிந்தித்து செயல்பட அன்பு வேண்டுகோள்.

ஐ.அருள் குமார்
கன்னியாகுமரி மாவட்ட பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர்

Accident Near Alagiyamandapam in Kanyakumari district

குமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே நடந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி. 3 பேரும் 2 இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது நிலைதடுமாறி வேன் மீது விழுந்து  விபத்து. 2 இருசக்கர வாகனங்களும் ஒன்றையொன்று விரட்டி சென்றதே விபத்திற்கு காரணம் என தகவல்.

Alagiyamandapam-accident

Alagiyamandapam-accident2

Alagiyamandapam-accident1

Alagiyamandapam-accident3