Category Archives: Kumari News

முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு

kanyakumariKanyakumari : முக்கடல் சங்கமத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நேற்று ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆராட்டு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 23–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை, சொற்பொழிவு, வாகன பவனி, சப்பர ஊர்வலம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. 10–ந் திருவிழாவான நேற்று காலையில் முக்கடல் சங்கமத்தில் உற்சவ அம்மனுக்கு (பகவதி அம்மனுக்கு) கடலில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி காலையில் பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு பூஜை, வழிபாடு, மஞ்சள் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கடலில் ஆராட்டு நடந்தது.

கிழக்கு வாசல் திறப்பு

இதில் கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, கீழ்சாந்திகள் சீனிவாசன் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ஆண்டுக்கு 5 முக்கிய நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கொண்டு வரப்பட்டு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், பக்தர்களும் அந்த வழியாக கோவிலுக்குள் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், சென்னையை சேர்ந்த தட்சயாக ஆராய்ச்சியாளர் எம்.கே. பிரதீப் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Source : Daily thanthi

Food Safety Raids on hotels and restaurants in Nagercoil

Food RideNagercoil : Food Safety officials and municipal authorities conducted a surprise raid on hotels, restaurants and roadside eateries in Meenakshipuram here on Tuesday.

The officials, headed by Deputy Food Safety Officer Salodisan, seized and destroyed food items prepared and kept in unhygienic condition.

Expired packets of food ingredients, found in the kitchens of some hotels, were destroyed.

The officials also seized food items that did not have proper labels and adulterated tea powder.

An investigation was launched to find out the origin of adulterated tea powder.

A few hotels were given two weeks’ time to improve the hygiene standard of the kitchens.

Caution notices were issued to some shops for not maintaining hygiene on their premises.

Source : The Hindu

Nagercoil town free from water scarcity

நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

Mukkadal-dam-topview

கோடைகாலத்தில் முக்கடல் அணை நிரம்புவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிகழ்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்கான ஒரே ஆதாரம் முக்கடல் அணை. குடிநீருக்காகவே பயன்படுத்தப்படும் ஒரே அணையும் இதுதான். நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 3 பக்கம் மலைகளால் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 25 அடி ஆகும்.

25 அடி என்பது அணையின் தரைமட்ட அளவில் இருந்து கணக்கிடப்பட்ட ஆழம் அல்ல. 25 அடிக்கும் கீழே மைனஸ் நிலையில் 20 அடி ஆழம் உள்ளது. 25 அடிக்கும் கீழே நீர்மட்டம் குறையும்போது நீர் கலங்கலாக இருக்கும். சேறும், சகதியுமாக இருக்கும். எனவே, அணையின் நீர்மட்டம் 25 அடி என்றே கருதப்படுகிறது.

இந்த 25 அடி கொள்ளளவையும் முக்கடல் அணை ஆண்டுதோறும் எட்டுவது இயல்புதான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் அது நிறைவேறாமலும் போயிருக்கிறது. இந்த நிலையில் முக்கடல் அணையின் நேற்றைய நீர்மட்டம் 21.10 அடியாகும். இது, அணையின் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கதான நீர்மட்டம் ஆகும்.

21 அடியை தாண்டியது அதாவது, தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் முக்கடல் அணை, முழு கொள்ளளவான 25 அடியை எட்டுவது வழக்கம். ஆனால் கோடை காலத்தில் 20 அடியை தாண்டுவது என்பது எப்போதாவது நிகழும் சம்பவம். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இதைப்போல கோடைகாலத்தில் நீர்மட்டம் 21 அடியை தாண்டி இருக்கிறது. அந்த நிலை அணையில் தற்போது நிகழ்ந்திருக்கிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 21.10 அடியாகும். கடந்த சில ஆண்டுகளில், கோடைகாலத்தில் முக்கடல் அணையில் தண்ணீர் வற்றி நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் இன்னல்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடே இல்லாமல் கோடைகாலம் முடிய இருப்பதையும், அதே நேரத்தில் முக்கடல் அணையில் நீர்மட்டம் 21 அடியை தாண்டியதை எண்ணியும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், அணை வற்றும்போது அணையை தூர்வாரி தண்ணீர் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Source : Dinathanthi

Amma Unavagam inaugurated in Kanyakumari

Amma Uvavagam in kanyakumariMs. Jayalalithaa declared open four canteens (Amma Unavagam) in four municipalities of Kanyakumari district also through video-conferencing.

The canteens are in Vadaseri bus stand and on Kanyakumari Government Medical College Hospital premises here. The other two canteens are in the market in Padmanabhapuramn near Marthandam bus stand in Kuzhithurai and in Colachel town.

Nagercoil MLA Nanjil A. Murugesan, district panchayat chairman M.S. Saradhamani and Nagercoil municipal chairperson Meena Dev among others were present at Vadaseri.

Source : The Hindu

The KanyaKumari District Six students in the state Second-ranked In SSLC

குமரி மாவட்டத்தை சேர்ந்த  6 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் 2-வது இடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குமரி மாவட்டத்தில் 6 பேர் 498 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்துள்ளனர்

இவர்களில் 3 பேர் நாகர்கோவில் புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான அனுருத்ஸ்ரீ கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ரியா வில்சன் : 498 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்த புனித அல்போன்சா பள்ளியின் மற்றொரு மாணவி ரியா வில்சன். இவரும் மாணவர் அனுருத்ஸ்ரீயைப் போல மொழிப்பாடங்களில் தலா 99, பிற பாடங்களில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார்

ரிட்டு ஷெரின்:  498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடமும் பிடித்த புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இன்னொரு மாணவி ரிட்டு ஷெரின் தமிழ் தவிர பிற பாடங்கள் அனைத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அபர்ணா: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அபர்ணா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.

லட்சுமி: நாகர்கோவில் கோட்டாரில் உள்ள டி.வி.டி. மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லட்சுமி 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.

லிட்டில் ஷர்மியா: தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லிட்டில் ஷர்மியா 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தையும், குமரி மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்

nagercoil1-sslc-result nagercoil-sslc-result1

nagercoil-sslc-result2

nagercoil-sslc-result

 

97.27% Pass Percentage registered by Class 10th of Kanyakumari District.

2015 பத்தாம் வகுப்பு தேர்வில், மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 97.27%  சதவீதத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

Kanykumar district 10th result 2015

Kanyakumari District 10th result 2015

Source : Tamil Hindu

 

Kanyakumari student selected for EDT Programme in US

03KGRAMHI-Stude_MA_2394541eMasha Nazeem of Eraviputhoor Kadai in Kanyakumari district, who is doing Master of Technology course at SRM University, has been selected for the prestigious Entrepreneurship Development Training Programme in the United States.

She is one among the eight students selected by Motwani Jadeja Foundation (MJF), headquartered in California, for the Rajeev Circle Fellowship. The annual fellowship is offered by the MJF to bright students from various nations.

As part of this fellowship, the selected students from India would take part in Entrepreneurial Development Training Programmes in Google, Face Book, E-Bay, Auto Desk and Twitter from May 10 to 30.

Masha Nazeem has been selected for the fellowship for her innovative service rendered to school students under the Masha Innovation Centre, which was inaugurated by the then Collector Nagarajan. As many as four school students of Masha Innovation Centre have been selected for national-level competitions on inventiveness and creativity.

Ms. Nazeem said that the EDP training would help her take the centre to the national level to popularise science among school students.

She started designing science projects at the age of nine and has invented 12 science models. She has got five national and two international awards.

Source : The Hindu

மார்த்தாண்டம்– ரெயில்நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு

Marthandam:ரெயில் நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைப்பணி

மார்த்தாண்டம்   பஸ் நிலையம் அருகில்  இருந்து குழித்துறை ரெயில் நிலையம் வழியாக ஐரேனிபுரத்திற்கு ஒரு சாலை செல்கிறது இந்த    சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை 500 மீட்டர் தூரம் சிமெண்டு தளம் அமைக்கவும், ரெயில் நிலையத்தில் இருந்து ஐரேனிபுரம் வரை தார்தளம் அமைக்கவும் நெடுஞ்சாலைதுறை சார்பில் ரூ. 1 கோடி அனுமதிக்கப்பட்டது.

அதன்படி ரெயில்நிலையம் பகுதியில் இருந்து ஐரேனிபுரம் வரை சாலையில் தார்போடும் பணி நடந்து முடிந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை சிமெண்டு  தளம் போட பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, அந்தபகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கவும், பக்க ஓடைகள் தரமானதாக  அமைக்கவும் வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் வேலை நிறுத்தப் பட்டது.

மீண்டும் தொடங்கியது

அதன் பின்னர், நேற்று மார்த்தாண்டம் ரெயில் நிலைய சாலை தொடங்கும் இடத்தில் சாக்கடை கால்வாய்  இணைப்பிற்காக சிமெண்டு குழாய் பதித்து சாலை பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனால், சிமெண்டு குழாய் போடுவதால் தரம் இருக்காது எனக்கூறி அந்த பகுதி மக்களும், ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ராமச்சந்திரன், நல்லூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், கழிவுநீர் ஓடையில் சிமெண்டு குழாய் பதிக்கும் பணியும், சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியும் தொடங்கியது.

Source : Daily thanthi

மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி

Marthandam flyover : மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான மண் ஆய்வுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.போக்குவரத்து நெருக்கடிகுமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக மார்த்தாண் டம் விளங்குகிறது. இங்கு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், மற்றும் தினசரி சந்தை போன்றவை அமைந்துள்ளன. மார்த்தாண் டம் பகுதிக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.மார்த்தாண்டத்தில் அமைந் துள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாக அமைந் துள்ளது. இதனால், எப் போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.தொடரும் போக்குவரத்து நெருக்கடியால், திருவனந்த புரம், கன்னியாகுமரி போன்ற முக்கியமான பகுதிகளுக்கும், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர் களும், ரெயில் நிலையத் திற்கு செல்பவர்களும், மாணவ- மாணவிகளும், பொதுமக்க ளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் கடும் போக்குவரத்து நெருக் கடியால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.மேம்பாலம்இந்தநிலையில் மார்த் தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண மாற்று ஒருவழிப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.இதற்கிடையே மார்த்தாண் டம் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.அதன் ஒருகட்டமாக மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் மண் ஆய்வு செய்யும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக ஆழ்துளை போடப்படும் எந்திரம் மூலம், ஊழியர்கள் மண் ஆய்வு செய்து வருகிறார்கள். மண் ஆய்வுப்பணி தொடங்கி உள்ளதால் மார்த் தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கலாம் என பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது

Source : Daily Thanthi

குமரி மாவட்டத்துக்கு வருகிற 4, 10-ந் தேதிகளில் உள்ளூர் விடுமுறை

கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவிப்பு

Kanyakumari District Local Holiday : வருகிற மார்ச் 4 மற்றும் 10-ந் தேதிகளில் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அய்யா அவதார தினவிழாஅய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளான வருகிற 4-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 4-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற ஏப்ரல் மாதம் 3-வது சனிக்கிழமையான 18-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாகும்.மண்டைக்காடு கோவில் கொடைவிழாமண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவின் முக்கிய திருவிழா நாளான 10-ம் திருவிழாவன்று (வருகிற 10-ந் தேதி) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 10-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் 2-வது சனிக்கிழமையான 9-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாகும். 4-ந் தேதி மற்றும் 10-ந் தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை தினத்தன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.

Source : Dailythanthi